Skip to main content

Diogenes பத்தி கேள்விபட்ட Alexander

 

புலிகேசி அரசர்களும், சங்கிலி மாயன்களும், நிற்காத சுரண்டலும்.
கி மு 300 வாக்கில்…
Diogenes பத்தி கேள்விபட்ட Alexander அவரை பாக்க விரும்பினார்.
Alex: Plato ஜி ஆள் அனுப்பறேன், அவரை அரண்மனைக்கு வர சொல்லுங்க. அவர் கிட்ட கொஞ்சம் பேசனும்..
Plato: அந்த திமிர் புடிச்சவன் வர மாட்டான், நீயே போய் பாரு ராசா, அவன் எதாச்சும் தொட்டில தூங்கிகிட்டு இருப்பான்…எனக்கும் அவனுக்கும் எப்பவுமே ஏழரை தான்.
Alex: OK ji.
கடற்கரையில், கோவணத்துடன் குளிர் காய்ந்து கொண்டிருந்த Diogenes கிட்ட
Alex: நான் அரசன் வந்திருக்கேன், உங்க கிட்ட பேசனும்…
Diog: முதல்ல ஓரமா நில்லு, வெயில மறைக்காத…குளிர் காயறத விட உன்னோட வெட்டி நாயம் பெருசில்ல…
Alex ( ஓரமா போய்) : ஆமா, இங்க என்ன ஒரே எலும்பு குவியலா இருக்குது…
Diog: இந்த கடற்கரை ஓரம் ஒரு பெரிய சுடுகாடு இருந்துச்சு. பெரிய புயல்ல அது கடல் கொண்டு போயிருச்சு, இப்ப கடல் எலும்பு மட்டும் திருப்பி கொண்டாந்துருச்சு
அந்த எலும்பு குவியல்ல என்ன தேடறிங்க…
Diog: உங்கப்பன் Philip the great சமாதி கூட இங்க தான் இருந்துச்சு. அவனோட எலும்பு எங்கனு தேடறேன் ஆனா எல்லாமே அடிமையோட எலும்பு போலயே இருக்குது, அரசனோட எலும்பு எதுனு கண்டுபுடிக்க முடியல..
Alex கடுப்பாகி….: நான் இந்த நாட்டு மன்னன். எதோ நல்ல விசயம் பேசலாம்னு வந்தேன்…
Diog: இருந்துட்டு போ… உன்னோட எலும்பும் நாளைக்கு இங்க தான் ஒதுங்கும். அதையும் எவனாலயும் கண்டுபுடிக்க முடியாது. உங்கிட்ட பேசற அளவுக்கு எனக்கு நேரமில்ல..சீக்கிரம் சொல்லி தொல…
Alex: அப்படி என்ன பெரிய வேலை? மன்னனே இங்க வந்து பேசறேன்…உங்க வேலைய முடிக்க நான் ஆள் அனுப்பறேன்
Diog: தெனமும் இந்த சந்தைல பகல் நேரத்துல எரியற விளக்க தூக்கிகிட்டு சுத்தறேன், அவன மட்டும் கண்டுபுடிக்க முடியல..
Alex: யார் அவன்? எதிரி நாட்டு ஒற்றனா இல்ல திருடனா? இப்பவே ஆள் அனுப்பறேன்…ஆமா பகல்ல எதுக்கு விளக்கு..
Diog: என் கண்ணுக்கு தெரிய மாட்டேங்கறான்…அதான் விளக்கு வெச்சு தேடறேன்.
Alex: யார் தான்யா அவன்….
Diog: ஒரு நேர்மையான மனுசன தேடறேன்…இது வரைக்கும் கண்ணுல படல…இந்த சந்தைல ஒருத்தன் கூட இல்ல.நீ வேணும்னா உன்னோட ஆளுங்கள விட்டு தேடி குடேன்…
Alex: யோவ்….உங்கிட்ட பேச வேண்டாம்னு பிளேட்டோ ஜி சொன்னார்…நாந்தான் ஆர்வ கோளாறுல வந்து சிக்கிகிட்டேன்…
என்னோட பெரும் வேலைகளுக்கு நடுவுல உங்க கிட்ட பேச வந்த என்ன…
Diog: அப்படி என்ன வேலை…
Alex: நான் பெர்சியா, இந்தியா மேல படை எடுக்க போறேன்.
Diog: எடுத்து?
Alex: உலகத்தை ஆளுவேன்..
Diog: ஆண்டு?
Alex: அப்புறம் ரிடையர் ஆகி உங்கள போல கடற்கரைல ஓய்வெடுப்பேன் …
Diog: ஓய்வெடுக்க படை எதுக்கு? இப்படி வந்து உட்காரு, ரெண்டு பேரும் சேந்து இப்பவே ஓய்வெடுப்போம்…
Plato mind voice: அவன் நம்பாத…
Alex: நான் படை எடுக்க தான் போறேன்…அப்ப தான என்னோட புகழ் உலகம் முழுக்க பரவும்? நாடு செழிக்கும்?
Diog: இப்படி தான் உங்கப்பனும் கிளம்பினான்..கடைசில அவனோட எலும்பு அடிமைகளோட எலும்போட ஒன்னா கிடக்குது.
எகிப்து மன்னன் ராம்செஸ் பெரிய சிலையா தன்னோட உருவத்த வடிச்சான்..அந்த சிலை கை வேற கால் வேறயா பாலைவன மணல்ல புதைஞ்சு கிடக்குது…
இருக்கறப்பவே வாழ நல்ல விதமாக வாழ முடியல…ஆமா நீ பெர்சியா மேல படை எடுத்தா கிரேக்கம் எப்படி செழிக்கும்?
Alex: அந்த நாட்டு வளத்த எல்லாம் இங்க கொண்டாருவமே….
அப்புறம் என்ன..கிரேக்கம் வல்லரசு தான்..நல்லரசு தான்.
Diog: அதாவது அடுத்தவன் பொருள திருட தான் இந்த படையெடுப்பு…இந்த திருட்டுனால உனக்கு புகழ் சேரனும்…அதாவது ஒரு திருடனா நீ அறியபடனும்..
Alex: அது வந்து…பிளேட்டோ ஜீ என்ன கொழப்பறார் இவரு…
Diog: எல்லாம் அந்த Plato பய வேலை…அவனை உதைக்கனும். அவனோட அடிமை கல்வி தான உன்ன இப்படி அடுத்தவன அடிமையா வெச்சு இருக்க சொல்லுது, அடுத்தவன் பொருள ஆசை பட சொல்லுது?
Alex: என்ன பண்ண…இப்ப இந்த வாழ்க்கை முறைல சிக்கிட்டேன். அடுத்த பிறவியில் Diogenes ஆக நான் பிறந்து வாழனும்..
Diog: எனக்கு இந்த பிறவில கூட உன்னை போல வாழ விருப்பமில்லை. அடுத்த பிறவியிலும் நான் தானாகவே வாழ விருப்பம்…
இந்த பிறவில கூட உன்னோட ஆசைகள துறக்க முடியாத நீ தெரியாத அடுத்த பிறவில என்னை போல ஆகனும்னு சொல்லி யார ஏமாத்தற…
Plato: இந்த கிறுக்கன் உன்ன இங்கயே இருக்க வெச்சுருவான்…இவன் பேச்ச கேட்டா வளர்ச்சி எங்க இருக்கும்? போர் செஞ்சு பத்தாயிரம் செத்தாலும், நீயே செத்தாலும் நம்ம நாடு வளரனும்.
Diog: பிளேட்டோ நீயும் உன்னோட சீடர்களும் எந்த படைபிரிவில் சேர்ந்து இருக்கிங்க? எப்ப பெர்சியா பயணம்?
Plato: யோவ்…நாங்க போர் செய்ய படைக்கபட்டவங்க இல்ல…படிக்கறதுக்கும், எழுதறதுக்கும், அறிவுரை சொல்றதுக்கும் மட்டுமே படைக்கபட்டவங்க…
Diog: அட ஏட்டு சுரைக்காயா…அப்ப நீ தான இந்த நாட்ட ஆளற…யோவ் அலெக்சு…நீ ஒரு டம்மி பீசுயா…
Alex: நான் டம்மி பீசா.. நான் அரசன்.
Diog: ஆமா..நீ தான்…பெர்சியா, இந்திய நாடுகளை பத்தி சொன்னது யாரு?
Alex: நம்ம குருஜி தான்….அவங்களோட செழிப்ப பத்தி சொன்னதும் அவர் தான்.
Diog: நல்லத படிக்க சொல்லி குடுப்பான்னு பாத்தா உனக்கு பேராசை, பொறாமைனு சொல்லியே வளத்து இருக்கான் இந்த சங்கிலி மாயன்…
Alex: யார் சங்கிலி மாயன்?
Diog: நீ புலிகேசினா அவன் ராசகுரு சங்கிலி மாயன் தான…
Alex: என்னது…அரசனை கேவலபடுத்தறியா..உன்ன..
Diog: இங்க பாரு அலெக்சு….நானே காலைல பொழுது போகலனு குளிர் காயறேன்…நீயும் வா…கடலோட அழக ரசிக்கலாம், மீன் பிடிச்சு திங்கலாம், விண் மீன் அடில தூங்கலாம். நல்ல பொண்ணா கெடச்சா காலம் முழுக்க அவ கூடவே மகிழ்ச்சியா இருக்கலாம்…இல்லனா படை எடு, சாவடி, செத்து போ…
Alex: என்னோட புகழ் என்னிக்கும் நிலைச்சு இருக்கற மாதிரி செஞ்சிட்டு தான் ஓய்வேன்
Diog: நான் எதுவுமே செய்யாமயே என் பேர பல ஆயிரம் வருசம் கழிச்சு பேசுவாங்க. ஆனா அது எனக்கு மகிழ்ச்சியும் இல்ல கவலையும் இல்ல…
Plato: அரசே நேரமாகுது..நல்ல நேரத்துல் படைய நகர்த்தனும்..
Diog: நாலு பேர கொல்றதுக்கு நல்ல நேரம் வேற…நல்லா பண்றிங்க ஜீ.
பாவம் தீ கடவுளான Prometheus…இவர்களுக்கு போய் அறிவை குடுத்தமேனு ஒரே பீலிங்ல இருக்காராம்
Plato: ஏன்?
Diog: கடவுள் கொடுத்த மிக சிறந்த வரங்களை எல்லாம் உங்க பேராசைக்காக பயன்படுத்தி புவிய நாசம் பண்றிங்களே…அதனால தான். அப்புறம் சிந்து நதிக்கு கிழக்க நம்ம பிளாட்டோ ஜீ கும்பல விட படு மோசமான கும்பல் இருக்குது
 
Prakash Thangavel /FB

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு

மதுரை குஞ்சரத்தம்மாள்

# மதுரை # குஞ்சரத்தம்மா   ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாதுவருடப்பஞ்சம் என்ற பெயரையாவது கேள்விப்பட்டதுண்டா?1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தை ப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம். வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைகூட தோண்டி எடுத்து திண்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கை கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்து தின்று உயிர் பிழைத்துக்கிடந்த கொடிய பஞ்சமது. கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது . பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம் அம்மாவினுடையது. குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி. மதுரையில் கொடிகட்டிப் பறந்த அழகே வடிவான தாசி. பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவள். மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இரு

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை