Skip to main content

நான் தான் குடியை நிறுத்திட்டேனப்பா

 

 

துரைச்சாமி வழக்கம்போல் Bar-ல் தனியாக உட்கார்ந்து மூன்று கிளாஸ்களில் தனித் தனியாக மது ஊற்றி குடித்துக் கொண்டிருந்தார் .

அடித்த சரக்கு பத்தாமல் மீண்டும் பிராந்தி ஒன்று வாங்கி, மூன்று கிளாஸ்களில் ஊற்றி குடித்துக் கொண்டிருந்தார்.

வெயிட்டர் சற்று நேரம் பார்த்து விட்டு, "சார், நீங்க தப்பா நினைக்கலன்னா ஒன்னு கேட்கலாமா ?"

கேளு........

நீங்க மூணு கிளாஸ்ல தனித்தனியா வாங்கி குடிக்கிறீங்களே.....ஏன்? புரியல!

"இல்லப்பா, நாங்க அண்ணன் தம்பி மூணு பேர். ஒரு அண்ணன் பரமக்குடியில் இருக்கான், மற்றொரு தம்பி காரைக்குடியில் இருக்கான், நான் இங்க தூத்துக்குடியில் இருக்கேன். நாங்க மூணு பேரும் எப்பவுமே ஒன்னாதான் சரக்கடிப்போம்.

நாங்க மூணு பேரும் ஆளுக்கு ஒரு மூலையா பிரிஞ்சு போனதால, சரக்கு சாப்பிடறதா இருந்தா மூணு கிளாஸ்ல வாங்கி,

மத்தவங்க ஞாபகார்த்தமா அந்த சரக்கை சாப்பிடனும்னு ஒரு சத்தியம் பண்ணியிருக்கோம்.

என் பிரதர்ஸ் ரெண்டு பேருமே இதை செஞ்சுட்டுதான் குடிப்பாங்க, அதனால தான் என்றார்.

ஆச்சர்யமாக பார்த்தான் அந்த Bar வெய்ட்டர்.

சில நாட்கள் கழித்து, இரண்டு கிளாஸ் மட்டும் தரச்சொல்லி மது வாங்கி குடித்தார்.

இதைக்கண்ட Bar வெயிட்டர் அவரிடம் "ரொம்ப ஸாரி சார்," என்று வருத்தப்பட்டான்.

"ஏம்ப்பா என்னாச்சு" என்றார்.

"இல்லை எப்போதும் நீங்க உங்க பிரதர்ஸ் ஞாபகார்த்தமா மூணு கிளாஸ்ல வாங்கிக் குடிப்பீங்க. உங்க பிரதர்ல யாரோ ஒருத்தர் இறந்துட்டாங்க போலிருக்கு, அதான் இரண்டு கிளாஸ்ல மட்டும் ஊத்தி குடிக்கிறீங்க" என்றான்.

அந்த இரண்டு கிளாஸ் மதுவை, நிதானமாக சிப் பண்ணி குடித்துவிட்டு முழு போதையுடன் சொன்னார் துரைச்சாமி,

"யாருக்கும் எதுவும் ஆகல, நேத்தோட நான் தான் குடியை நிறுத்திட்டேனப்பா அதான் என் பிரதர்ஸ்க்காக இரண்டு கிளாஸ் மட்டும் குடிக்கிறேன்"......!!!!!!

*இதை கேட்ட வெயிட்டருக்கு, மயக்கம் தெளிய ரெண்டு நாள் ஆனது.......!!!!!*✍🏼🌹


Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு

மதுரை குஞ்சரத்தம்மாள்

# மதுரை # குஞ்சரத்தம்மா   ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாதுவருடப்பஞ்சம் என்ற பெயரையாவது கேள்விப்பட்டதுண்டா?1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தை ப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம். வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைகூட தோண்டி எடுத்து திண்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கை கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்து தின்று உயிர் பிழைத்துக்கிடந்த கொடிய பஞ்சமது. கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது . பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம் அம்மாவினுடையது. குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி. மதுரையில் கொடிகட்டிப் பறந்த அழகே வடிவான தாசி. பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவள். மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இரு

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை