Skip to main content

Posts

Showing posts from April, 2020

மதுரை குஞ்சரத்தம்மாள்

# மதுரை # குஞ்சரத்தம்மா   ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாதுவருடப்பஞ்சம் என்ற பெயரையாவது கேள்விப்பட்டதுண்டா?1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தை ப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம். வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைகூட தோண்டி எடுத்து திண்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கை கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்து தின்று உயிர் பிழைத்துக்கிடந்த கொடிய பஞ்சமது. கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது . பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம் அம்மாவினுடையது. குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி. மதுரையில் கொடிகட்டிப் பறந்த அழகே வடிவான தாசி. பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவள். மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இரு

ஆரஞ்சுப்பழம்

🌴 இரண்டு சின்ன பசங்க, ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை எடுத்துட்டு ஓடி வந்தாங்க. ஒரு அமைதியான இடத்துக்கு போய் இரண்டுபேரும் அதை பங்கு போட்டுக்க நினைச்சாங்க.பக்கத்துல உள்ள  சுடுகாட்டுக்கு போவோம்னு  ஒருத்தன் சொன்னான். சுடுகாட்டின் கேட் பூட்டி இருந்துச்சு....கேட் மேல ஏறி உள்ள குதிச்சாங்க. அப்படி குதிக்கும்போது ரெண்டு ஆரஞ்சுப்பழம் மட்டும்  கீழ விழுந்துடுச்சி. கூடைல நிறைய பழம் இருந்ததுனால, அதை அவங்க கண்டுக்கல. கொஞ்சநேரம் கழிச்சி சுடுகாடு வழியா ஒரு குடிகாரன் வந்தான். அவன் உள்ள இருந்த சத்தத்த கேட்டு அங்கேயே நின்னுட்டான். "உனக்கொன்னு, எனக்கொன்னு" "உனக்கொன்னு, எனக்கொன்னு" ''உனக்கொன்னு, 'எனக்கொன்னு" இதை கேட்ட அவனுக்கு  போதை மொத்தமும் தெளிஞ்சிடுச்சி..அவன் பயந்து போய் அங்கிருந்து விழுந்தடிச்சி ஓடினான். அவன் போற வழியில ஒரு மரத்தடியில சாமியார் ஒருத்தர் தவம் பண்ணிக்கிட்டு இருந்தார்.  இவன் உடனே   அங்க இருந்த சாமியார் கிட்ட விஷயத்தைச் சொன்னான். "சாமி!  தயவு செய்து என் கூட வாங்க. கடவுளும், சாத்தானும் சுடுகாட்டுல பிணங்கள பங்கு போடுறத காமிக்கிறேன்." சாமியார்க

விவசாயம் - சிறுகதை..

விவசாயம் - சிறுகதை...... அடங்கி ஆரவாரமில்லாமல் இருந்தது ஏமாளிப்பட்டி கிராமம். திண்ணையில் இருந்த நாற்காலியில் தாத்தா குமாரசாமி அமர்ந்திருந்தார்.  உள்ளிருந்து அப்பா ராமசாமி முகத்தை துடைத்தவாறே வெளியே வந்தார். ஏப்பா ராமசாமி உழவுக்கு வண்டி வரச்சொன்னமே வந்துருச்சா..... தாத்தா கேட்டார். இன்னும் வரலப்பா, காலையிலேயே போன் பண்ணுனேன். வர்றன்னுதான் சொன்னாங்க...... அப்பா அமைதியாய் பதில் சொன்னார். மறுபடியும் போன் பண்ணி என்ன ஆச்சுன்னு கேளுப்பா. டீசலுக்கு பணம் இல்லைனு சொன்னா போய் பணம் குடுத்து டீசல் புடிச்சிகிட்டு வரச்சொல்லு. மெயின் ரோட்டுல எங்கேயாவது வண்டிய மறிச்சிருந்தாலும் நீ நேர்ல போயி விவரம் சொல்லி கூட்டிட்டு வா..... தாத்தா சொல்லிக்கொண்டிருக்கும் போதே அப்பா கிளம்ப ஆயத்தமானார். பாட்டி மாடுகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு வந்துகொண்டிருந்தார். தாத்தாவின் அடுத்த கேள்வி பாட்டியின் பக்கம் திரும்பியது. செல்லம்மா........ ஆளுங்க வந்துட்டாங்களா? வந்துட்டாங்க...... களை எடுக்க நாலுபேரை அனுப்பிட்டு காய் அறுக்க நாலு பேரை போகச்சொல்லியிருக்கேன். டீத்தண்ணி வைச்சு எடுத்துகிட்டு நானும் போகணும் என்றாள் பாட்டி. சாயந்திர

Mylapore -a vivid description

Chithra Viswanathan is with Usha Sridhar . 29/04/2020 மதுரையில் இருந்து........ நான் மாண்புமிகு மதுரையில் பிறந்து வளர்ந்து, சென்னயில் வாழ்க்கைப் பட்டேன் !புக்ககம் மயிலையில் அமைந்தது. மதுரை ஆனி வீதி, ஆவணி மூல வீதி எ ன்று சுற்றியவளுக்கு, மயிலை பிரமிப்பைத் தந்தது..மாட வீதி, பிடி படவே, ‘நாட்கள் ஆனது சற்று கூச்சமாகவே இருந்தது ! என் கல்யாணப் புடவைகள் எல்லாம் சம்பூர்ண சாஸ்திரி கடையில் வாங்கியதால், அந்த கடையைப் பார்க்க விரும்பினேன்.அந்த எளிமை எனக்கு வியப்பைத் தந்தது !!வருடா வருடம் தீபாவளிக்கு புடவைகள் ராசி கடையில் வாங்குவது தான் என் புக்ககத்துக்கு ராசி!அப்பொழுது அது ஒரு நாகரீகம் கூட! அம்பிகா அப்பளம் துடங்கிய புதிது. மிகச் சிறிய கடை. அதன் வளர்ச்சி என் கண் முன்னே தான் நடந்தது ! 1964 ல் என் தங்கை லண்டன் போகும்போது அங்கிருந்துஆவக்காய் ஊறுகாய் வாங்கிக் கொடுத்தது எனக்கு பெருமை பிடி படவில்லை!! ஶ்ரீ வித்யா மஞ்சள் குங்குமக் கடை மாமா மாமியை மிகவும் பிடித்துப் போனது. அந்த கடையின் மணம் இன்னும், என் மூக்கில் இன்னும் எங்கேயோ ஒளிந்து கொண்டு இருக்கிறது !! தெப்பக்குளம், எனக்கு, மது

சாப்பாட்டுராமன்

காலை 11 மணி. செல்போன் சிணுங்கியது எடுத்து ஆன் செய்தேன். ஹலோ சார் உங்க பேரு சாமிநாத பட்டரா? ஆமா நீங்க யாரு? இது தானே உங்க அட்ரஸ்? ஆமாம் சார் அதே தான். இப்ப எங்க இருக்கீங்க? வீட்டுல தான் சார் சொல்லுங்க! பேசலாமா ? தாராளமா பேசலாம், மாடி ரூம் நான் மட்டும் தனியா தான் இருக்கேன். சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை? நீங்க யாரு? சார் நான் ஹெல்த் டிப்பார்ட்மெண்ட் ல இருந்து பேசுறேன். நேத்திக்கு நீங்க டெஸ்ட் அட்டர்ன் பண்ணினீங்களா? ஆமா சார்! மீனாட்சி அம்மன் கோயில் வாசல்ல வச்சு நடந்ததே அந்த கேம்ப் ல ஸ்வாப் டெஸ்ட் எடுத்துக்கிட்டேன். உங்க வயசு சார்? 52 ஆகுது. ஓகே என்ன சார் டெஸ்ட் ரிசல்ட் வந்துடுச்சா? இல்லை. உங்க வீட்டுல எத்தனை பேர் இருக்கீங்க? நானு, அம்மா, ஒய்ஃப், ரெண்டு டாட்டர்ஸ் மொத்தம் 5 பேரு இருக்கோம் சார். சார் நீங்க எங்க வேலை பார்க்குறீங்க? மீனாட்சி அம்மன் கோயில்ல பூஜை பண்றேன். சமீபத்தில் எங்கேயாவது வெளிநாட்டுக்கு போய்ட்டு வந்தீங்களா? இல்லையே சார் பரவாயில்லை தைரியமா சொல்லுங்க என்ன டெஸ்ட் ரிசல்ட் எனக்கு பாசிட்டிவ் ன்னு வந்திருக்கா? அவர் பதட்டமாகி... ஐயோஅதுல்

கடவுளின் மனைவி

  குளிர் நிரம்பிய பொழுது ஒன்றில், காலணிகள் கடையின் ஜன்னல் வழியே ஏக்கத்துடன் காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் தோளில் கரமொன்று படிந்தது. புன்னகை முகத்துட ன் பெண்மணி ஒருவர், “என்னப் பார்க்கிறாய்” என்று அந்தச் சிறுவனிடம் கேட்டார். “எனக்கு ஒரு ஜோடி காலணிகள் தருமாறு கடவுளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்”. சிறுவனை உள்ளே தூக்கிச் சென்ற பெண்மணி, புழுதிப் படிந்த அவனுடையப் பிஞ்சுப் பாதங்களைக் கழுவி, பொருத்தமான காலுறைகளையும் காலணிகளையும் தேர்ந்தெடுத்து அணிவித்தார். தான் தான் கடை உரிமையாளர் என்பதை சிறுவன் யூகித்திருப்பான் என்று நம்பி... “நான் யார் தெரியுமா!” என்று அந்தச் சிறுவனிடம் என்றார். அதற்கு அந்தச் சிறுவன் சொன்னான். “ம்ம்ம் எனக்குத் தெரியுமே! நீங்கள் தான் கடவுளின் மனைவி!!” "பிறரிடம் கனிவை வெளிப்படுத்தும் போதெல்லாம் நாமும் கடவுளாகிறோம்" ... கதையின் நீதி :- ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தன்னுடைய பிள்ளைகள் தானாகவே வளரும்... நம்முடைய இரக்ககுணம் தான் நம்மைப் பிறருக்கு கடவுளின் மறுஉருவமாகக் காட்டும்... இரக்கப்படுங்கள் ஆனால் பிறரிடம் ஏமாந்து மட்

அரபி கதை

சுயநலத்தை பத்தி ஒரு நல்ல கதை எனக்கு ஒரு ஓமானி நண்பன் சொன்னான் , அது ஒரு அரபி கதையாகும் ஒரு ஊரில் ஒரு கசாப்பு கடைக்காரர் இருந்தார் ,அவர் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தது அதுனால் ஆத்திரம் அடைந்த அவர் அதை பிடிக்க எலிப்பொறி ஒன்றை வாங்கி வர ,அதை பார்த்த எலி ஓடி போய் வீட்டின் கூரை மீது வசித்த வந்த புறாவிடம் ," புறா , என்னை பிடிக்க கசப்புக்காரர் எலிப்பொறி வாங்கி கொண்டு வந்துருகிறார் " னு சொல்ல, அதற்கு புறா " அதுனால் எனக்கு என்ன, நான் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் கூரையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் " என்றது எலி வீட்டில் வளரும் கோழியிடம் சென்று முறையிட்டது ,அதற்கு அந்த கோழி " அதுக்கு நான் என்ன பண்ண முடியும் ,நான் இந்த வீட்டில் நன்றாக வாழ்கிறேன் , முதலாளி அம்மா எனக்கு தினம் நல்ல தீவனம் போடுகிறார்கள் ,உன் பிரச்சனை உனக்கு " னு சொல்லி சென்று விட்டது எலி அந்த வீட்டில் வளரும் ஆடுயிடம் சென்று தன் பிரச்னையை சொன்ன பொது , " எனக்கு என்னப்பா முதலாளி என்னை நல்ல கவனித்து கொள்கிறார் ,உனக்கு பிரச்சனை வந்தா நான் என்ன பண்ண முடியும் ,என்னிடம் வந்து பொ

விவசாயம் - சிறுகதை...

Copied and pasted விவசாயம் - சிறுகதை...... அடங்கி ஆரவாரமில்லாமல் இருந்தது ஏமாளிப்பட்டி கிராமம். திண்ணையில் இருந்த நாற்காலியில் தாத்தா குமாரசாமி அமர்ந்திருந்தார். உள்ளிருந்து அப்பா ராமசாமி முகத்தை துடைத்தவாறே வெளியே வந்தார். ஏப்பா ராமசாமி உழவுக்கு வண்டி வரச்சொன்னமே வந்துருச்சா..... தாத்தா கேட்டார். இன்னும் வரலப்பா, காலையிலேயே போன் பண்ணுனேன். வர்றன்னுதான் சொன்னாங்க...... அப்பா அமைதியாய் பதில் சொன்னார். மறுபடியும் போன் பண்ணி என்ன ஆச்சுன்னு கேளுப்பா. டீசலுக்கு பணம் இல்லைனு சொன்னா போய் பணம் குடுத்து டீசல் புடிச்சிகிட்டு வரச்சொல்லு. மெயின் ரோட்டுல எங்கேயாவது வண்டிய மறிச்சிருந்தாலும் நீ நேர்ல போயி விவரம் சொல்லி கூட்டிட்டு வா..... தாத்தா சொல்லிக்கொண்டிருக்கும் போதே அப்பா கிளம்ப ஆயத்தமானார். பாட்டி மாடுகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு வந்துகொண்டிருந்தார். தாத்தாவின் அடுத்த கேள்வி பாட்டியின் பக்கம் திரும்பியது. செல்லம்மா........ ஆளுங்க வந்துட்டாங்களா? வந்துட்டாங்க...... களை எடுக்க நாலுபேரை அனுப்பிட்டு காய் அறுக்க நாலு பேரை போகச்சொல்லியிருக்கேன். டீத்தண்ணி வைச்சு எடுத்துகி

காடோடியில் ஒரு சிறு பாரா

காடோடியில் ஒரு சிறு பாரா என் தந்தை சொல்வார்.இந்த உலகத்தில் முதன்முதலில் பேசத் தொடங்கியது ஓடையில் ஓடும் நீர் தான் என்று. அப்போது தாவரங்கள் கிடையாது; பறவைகள் கிடையாது; விலங்குகள் கிடையாது; மனிதர்களும் கிடையாது. மனிதரே இல்லை என்கிற போது அவர்களின் மொழிகள் மட்டும் எங்கே இருந்திருக்கப் போகின்றன? எனவே பேசுவதற்கு ஆளில்லாமல் இருந்த நீர்தான் பேச்சுத் துணைக்கு முதலில் தாவரங்களை முளைக்க வைத்ததாம். அத்தாவரங்கள் தாம் பேசுவதற்காக பூக்களைப் படைத்ததாம். பூக்கள் தாம் பேச கனிகளைச் சமைத்தது. கனி கள் தாம் பேச பறவைகளை அழைத்தது. இப்படி வரிசையாக வந்து மனிதர்களில் முடிந்தது. இந்த மனிதர்களுக்கு அப்போதெல்லாம் மற்ற மனிதர்களின் முகம்தான் தெரியும். தன் முகம் எப்படி இருக்கும் என்றே தெரியாது. மனிதர் மீது இரக்கப்பட்ட ஓடை நீர், இந்தா உன் முகத்தைப் பார்த்துக்கொள் என்று தன்னையே கண்ணாடியாக மாற்றி மனிதருக்கு அவரையே அடையாளம் காட்டியது. அதுவொரு ஓடும் கண்ணாடி. பேசும் கண்ணாடி. அக்கண்ணாடியோடு எல்லா உயிர்களும் இன்னமும் உரையாடிக்கொண்டு இருக்கின்றன. உரையாடலை நிறுத்திய முதல் உயிரி, முதல் உயிரி மட்டுமல்ல ஒரே உயிரியும

பாசப் போராட்டம்

பாசப் போராட்டம் என்னங்க மூட்டை? ஒண்ணுமில்ல. ரேசன் கடையில ஆயிரம் ரூபா குடுத்தாங்க அதான் கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு வந்தேன் ஓடிவந்து மூட்டையைக் பிரிக்கும் மனைவியை அதட்டினார் ஏய் அத எடுக்காத இது நமக்கு இல்ல. இது நம்ம பொண்ணு வீட்டுக்கு ஏன் நமக்கு வாயும் வயிறும் இல்லையா. உங்க பொண்ணுக்கு மட்டும் தான் வாயும் வயிறும் இருக்குதா. ஆயிரம் ரூபா வாங்கிட்டு வந்துருக்கீங்க. மீதிய குடுங்க இதுவே 1400 ரூபாய் ஆச்சு, 400 ரூபாய் கடன் சொல்லிட்டு வந்திருக்கேன் அப்போ எனக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கலே. அந்த உறிஞ்சிர மிசினு இன்னும் வாங்கல அதானே வாங்கிக்கலாம். எப்படியும் காசு வரும்போது உனக்கு வாங்கி தரேன். உனக்கு வாங்கித் தராம வேற யாருக்கு வாங்கி தர போறேன் அய்யோ வாங்கி கொடுத்தாலும், நான் ஆறு மாசமா கேட்டுட்டு இருக்கேன். மூச்சு விட முடியல. கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன். அதை வாங்கி கொடுக்க முடியல. 1000 வா வாங்கி அப்படியே மகளுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு வந்துட்டீங்க எப்படி போவீங்க பஸ் இல்ல. ட்ரெயின் இல்ல. ஆட்டோவும் கிடையாது.எப்படி போவீங்க. சைக்கிள் ல போவேன் ஏன் பாதிலேயே வெய்யில்ல சுருண்டு விழுந்து சாகு

The Way of Simplicity

What did you learn too late in life?

What did you learn too late in life? Don't fall in love unless you are settled in life. Girls don't like to marry a struggling guy. Never be friends with your ex. Friends are temporary. Friends become 'contacts' or ‘acquaintances’ with time. Nobody cares about your problems. Don't share your personal problems with any random person. Parents are the only ones who truly love you. Your parents may stop supporting you if you fail repeatedly. Don't buy a car on loan. Never. Buying a house is not compulsory. Help your loved ones. Work where you can improve yourself. Don't wish for comfort if you want to improve. Invest in yourself. Try to get better day by day. Leave the job if you see no growth in yourself. Talk less. Listen more. Appreciate the good things or people. Save enough money. Money is almost everything in life. You are handicapped without money. Travel whenever you get the chance. Never miss an opportunity you once wished fo

Syndicate Bank-- how it was formed.

Apparently today is the last day of Syndicate Bank. Here is an interesting post I came across a while back. With bank mergers taking place and banks losing their identity, here is a little-known story of once-private Syndicate Bank, which started with a 25-paise deposit... There are three reasons why Syndicate Bank is important in the evolution of India as a wealth generator, and for working towards the upliftment of the masses. Firstly, it was born out of a belief that an innovative person cannot really generate wealth for himself on a sustainable basis unless he works out a way to make his community wealthy as well. Secondly, it was the only large bank in India to locate its headquarters in a rural area – in the 1930s Manipal was still a village. Thirdly, even before CK Prahalad arrived on the scene, its promoters knew about how wealth could be found at the bottom of the pyramid.  At a time when all banks insisted on Rs 5 as the minimum deposit amount to open an account, Syndicate’s

In Balance with Nature-- Poem by Dr. John Carew