Skip to main content

Posts

Showing posts from June, 2020

வார்த்தை சுத்தம் உள்ள மனிதர்களை எங்கேயாவது பார்த்தீர்களா?

வார்த்தை சுத்தம் உள்ள மனிதர்களை எங்கேயாவது பார்த்தீர்களா? Selvaraja S · SELVAMALIGAI ;SINGARAJA STORES -இல் பணியாற்றுகிறார் (1957–தற்போது வரை) ஆஹா! அருமையான கேள்வி !! வார்த்தை சுத்தமுள்ள மனிதர்தானே! ஒருவரல்ல பலரை :- பார்த்ததில்லை ,படித்ததுண்டு,அந்த உணர்வில் கலந்து உணர்ச்சியில் சிலிர்த்ததுண்டு.. காளையார் கோவில் ரதம் -கோவி மணிசேகரன் காளையார் கோவிலுக்கு ரதம் ஒன்று வேண்டும் .நமது வாளையும் வேல்கம்பையும் பிரிட்டிஷாரின் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் நெருங்குவதற்கு முன் சிவகங்கைச் சீமையின் பெருமையை சரித்திரத்தில் கலைத்தூணாக காலம் உள்ளளவும் அது நிற்கச்செய்ய ,எண்ணியது திண்ணமுடன் செய்து முடித்திட யார் பொருத்தமானவர் ? ஆய்ந்து, அறிந்து அழைத்து வாருங்கள் .ஆணையிட்டார்பெரியமருது . குப்பமுத்து ஆசாரி அழைத்துவரப்பட்டார் . "மன்னா மன்னிக்கவும் .தொன்மை கலைகள் எல்லாம் பிரிட்டிஷாரிடம் அழிபட்டுப் போகின்றன ,காத்திடுதல் சிரமம் "என்றார் ஆசாரி. தக்க ஏற்பாடுகள் செய்வோம் .தயக்கம் வேண்டாம் என்றார் மன்னர். வனங்களில் இருந்து மரங்கள் கொண்டுவரப்பட்டன. துணைக்கு ஆட்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்

Work from Home

நொய்க் கஞ்சியே சொர்க்கம்

கவிதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை... சொர்க்கம் ----------------- மீந்து போன அடைமாவில் மிருதுவான குனுக்கு சொர்க்கம் ஒருவாரமான தோசைமாவில் ஊத்தப்பமே சொர்க்கம் மார்கழி மாத குளிரில் மணக்கும் வெண்பொங்கல் சொர்க்கம் கார மிளகு தாளித்த - பொங்கலுடன் கத்திரிக்காய் கொத்ஸ்சே சொர்க்கம் பரங்கிக்காய் சாம்பாருக்கு - பீன்ஸ் பருப்புசிலி சொர்க்கம் கதம்ப சாம்பாருக்கு - பொடியிடிச்ச கத்திரிக்காய் கறி சொர்க்கம் குடைமிளகாய் சாம்பாருக்கு கோஸ் பட்டாணி கறி சொர்க்கம் உலகிலுள்ள அத்தனை சாம்பாருக்கும் உருளைக் காரகறியே சொர்க்கம் வெந்திய குழம்பிற்கு வெண்டைக்காய் கறி சொர்க்கம் சுண்டைக்காய் வெத்த குழம்பிற்கு சுட்ட அப்பளமே சொர்க்கம் பத்திய மிளகு குழம்பிற்கு பருப்பு தொகையலே சொர்க்கம் மத்தியான தயிர் சாதத்திற்கு மாவடு இருந்தால் சொர்க்கம் பல் முளைக்கா பிஞ்சுகளுக்கு பருப்பு சாதமே சொர்க்கம் அடைக்கு வெல்லத்தோடு அவியல் இருந்தா சொர்க்கம்; பசியில் துடிப்பவனுக்கு பழைய சோறே சொர்க்கம் நோயில் வீழ்ந்தவனுக்கு நொய்க் கஞ்சியே சொர்க்கம்!!! Venkat Kannan

Enjoying Life

மரம்

Simple LOGIC

Pandemic--- An Interview

 

"சொல்லாதே!"

சாது ஒருவர் மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். அவர் வரும் வழியில் பாதையின் ஒரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான். அவனை கண்ட சாது குதிரை மேலிருந்து கீழே இறங்கினார்.அவனைஅசைத்துப் பார்த்தார்.அவன்அசையாமல் கிடக்கவே தனது குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய குடுவையில் இருந்த நீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்து வாயிலும் புகுட்டினார். மயக்கம் தெளிந்து கண்விழித்த அந்த நபரை மெல்லப் பிடித்துத் தூக்கிக் குதிரை மீது ஏற்றினார். குதிரைமீது உட்கார்ந்த மறுகணமே அவன் அந்த குதிரையின் கடிவாளத்தை உலுக்கவும் குதிரை தடதடவென்று பறந்தோடி மறைந்து விட்டது. திகைத்துப் போனார் சாது. அப்போதுதான் அவன் ஒரு திருடன் என்பதும்,இதுவரைஅவன் நடித்துள்ளான் என்பதும் தெரிந்தது அவருக்கு. குதிரை இல்லாததால் இரவு முழுவதும் மெல்ல நடந்து வீட்டை அடைந்தவர் சில தினங்கள் கழித்து சந்தைக்கு குதிரை வாங்க போனார். அங்கே குதிரைகள் விற்குமிடத்தில்அந்த திருடன் இவரது குதிரையுடன் நின்று கொண்டிருந்தான். சாது மெல்லச் சென்று அவனது தோளைத் தொட்டார்.திரும்பிப் பார்த்த திருடன் பேயறைந்தது போல் நின்றான். சாது மெல்லச் சிரித்தார். "சொ

திருமணம்

Mythili Girikum ar   07/06/2020 ‎ Venkatesan Nava ‎   to   நம்ம கடலூர் (Namma Cuddalore ) June 1 at 10:16 PM ஆசை ஆசையாய் வளர்த்தஒரே பையனுக்கு 25 வயதானதும் திருமணம் செய்துவைக்க பத்து இடத்தில் ஜாதகம் பார்த்து, இருபது இடத்தில் சொல்லிவைத்து 30, 40 பெண்களை அலசி ஆராய்ந்து..... ஒழுக்கம் பார்த்து, மரியாதை பார்த்து, படிப்பு பார்த்து, பண்பு பார்த்து, குலம் பார்த்து, குடும்பம் பார்த்து, எதுவும் போடவேண்டாம் பெண்ணை மட்டும் அனுப்பி வையுங்கள் மகளைப்போல் பார்த்துக்கொள்வதாக வாக்கு கொடுத்து ஒரு மருகளை கொண்டுவருவார்கள்..... நிறைய செலவுசெய்து பையனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைப்பதில் அம்மாவை விட சந்தோஷம் யாருக்கும் இருக்காது... திருமணம் முடிந்தும் ஒரு சில நாட்களுக்கு நிறைய சம்பிரதாயங்கள் இருப்பதால் யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை, இதற்குள் முதலிரவு முடிந்திருக்கும், கணவன் மனைவிக்கு இடையே ஒருவித நெருக்கம் உருவாகியிருக்கும் ... சொந்தபந்தங்கள் எல்லாம் ஊருக்கு சென்றபின் காலையில் எழுந்து காபி போடப்போன அம்மாவுக்கு உதவிசெய்ய மருமகளும் கிச்சனில் வந்து நிற்க.... இருபத்தைந்து வருடங்களாக தன

இரண்டு  குழந்தைகள் பேசும் இனிய காட்சி

Ravindhar Gandhidas இது போன்ற தருணங்கள் நகர வளர்ச்சி மற்றும் நகர வாசி ஆசை, தனி குடித்தனம் போன்ற சமுதாய கட்டாயத்தால் அரிதாயிற்று. இதனால் இழப்பு குழந்தைகளுக்கு தான். கம்யூனிகேஷன் முற்றிலும் முடங்கி விட்டது. முதல் பர்த்டே செலவை கணக்கு போட்டு உறவை தொலைத்தனர். எவ்வளவு எளிமை, அ ழகு, அன்பு அந்த படம் சொல்கிறது ? இந்த நினைவுகள் குழந்தையின் மனதில் ஆழ பதிந்து, பின் பெரிய வயதில் வெளிபடும். அவர்கள் எவ்வளவு கற்கிறார்கள் தெரியுமா ? play ஸ்கூல் சத்தியமாக இதை கற்று தராது.. பின்னாளில் அசைபோட.. உம் தொலைத்து நிற்கிறோம்..அவசர உலகில் பணம் மட்டும் தேடி..பாவம் குழந்தைகள்..(இன்னும் நிறைய எழுதலாம் ..வலிக்கிறது). நிதர்சனமான உண்மையும்  வருத்தமும்

ஹெர்மன் ஹெஸ்ஸே

வெட்டப்பட்ட ஒரு மரம் அதன் அடிக்கட்டையின் ரணத்தை சூரிய வெளிச்சத்தில் நம்மிடம் காட்டும் போது அதன் சுயசரிதையை தெளிவான ஒரு மொழியில் நம்மிடம் சொல்கிறது. மரங்களிடம் பேச வேண்டும் என்றால் அதற்கொரு தனிப்பட்ட திறமை வேண்டும்.மரங்களுக்கு ஒருபோதும் மலிவான எண்ணங்கள் ஏற்படுவதில்லை.அவற்றின் ரகசிய பேச்சு கம்பீர மென்குரலாய் இருக்கும்.மரம் எப்படி மரமாய் இருக்கிறதோ அதுபோல நாம் ஒவ்வொருவரும் நாமாக இருக்க முடியும். அதுதான் வேண்டும் பிறகு ஒவ்வொருவருக்கும் மரத்தினுடைய அமைதி கிடைக்கும். -ஹெர்மன் ஹெஸ்ஸே

ஞானம் வரவே வரத்து

Starfish

Once upon a time, there was an old man who used to go to the ocean to do his writing. He had a habit of walking on the beach every morning to get his thoughts together for his writing. Early one morning, he was walking along the shore after a big storm had passed and found the vast beach littered with starfish as far as the eye could see, stretching in both directions. Off in the distance, the old man noticed a small boy doing some kind of strange motion. The boy would run towards the ocean, throw something into the sea, run back to the beach, bend down as if to pick up on an object, run towards the water and throw that object into the vast sea. It looked like some sort of ritual, a cosmic dance from a distance as the old man became more and more curious as he walked swiftly towards the boy. The boy came closer still and the man called out, “Good morning! May I ask what it is that you are doing?” The young boy paused, looked up, and replied “Throwing starfish into

Selai Kattum Pennukkoru Vaasam HD | Kodiparakuthu | Rajini | சேலைக்கட்ட...

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன் வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள் பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள் இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை.. இவளின் குணமோ மணமோ, மலருக்குள் இல்லை.. ம்..ஹும்..ம்..ஹும்.. ம்..ஹும்..ம்..ஹும்...} சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா (இசை) ம்..ஹும்.. ம்..ஹும்.. ம்..ஹும்.. ஓ..கூந்தலுகுள்ளே ஒரு வீடு கட்டுங்கள்.. காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்.. ஆ..ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்.. ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்.. ம்..ஹும்.. ம்..ஹும்.. ம்..ஹும்.. } ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா இது போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை.. இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை.. ம்..ஹும்.. ம்..ஹும்.. ம்..ஹும்.. } (Over lap) சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன் (இசை) ம்..ஹும்.. பெண்குழு: ஆ..ஆ..ஆ.. ம்..ஹும்.. பெண்குழு: ஆ..ஆ..ஆ... ஓ..காதல் வெண்ணிலா கையோடு வந்ததோ க

Quarantine from Reality | Rare gems of Tamil Film Music | Subhasree Than...

Essay on Education-- Qrius Learning Initiatives, Coimbatore.

Qrius Learning Initiatives 01/06/2020 o ஆற்று மணலின் ஸ்பரிசம் கால்களில் கிச்சுக் கிச்சு மூட்டுகிறது. o தண்ணீர் சலசலத்து ஓடும் சத்தம் காதில் கீதம் இசைக்கிறது. o மெல்லிய குளிர் தென்றல் உடலைத் தழுவிச் செல்கிறது. o ஆற்றில் இறங்கியதும் ஆற்றுநீரின் குளிர்ச்சி உடல் முழுக்க வியாபிக்கிறது. o சிறு சிறு மீன்கள் கால்விரலில் கடித்து விளையாடுகிறது. o ஆற்றில் மூழ்கியவுடன் ஆற்றுநீரின் ஓட்டத்தில் உடல் மெல்ல நகர்கிறது. o கைகளை விரித்து நீரைக் கிழித்து கால்களால் தண்ணீரை உதைத்து நீந்த முயற்சி செய்தாலும் உடல் அந்த இடத்திலேயே இருக்கிறது. o கைகளால் நீரில் வட்டம் வரைந்தும் நீரை வாரி இரைத்தும் விளையாடும் போது குழந்தையிடம் உருவாகும் மென்மையான மகிழ்ச்சி பெரியவர்களான நமக்கும் ஏற்படுகிறது. o நீரில் மூழ்கி கால்களுக்கு அடியில் இருக்கும் மொழு மொழு கூழாங்கற்களை எடுத்துப் பார்க்க அதை நம்மிடம் ஆண்டுகளாக அது ஒழுகி வந்ததின் கதை பேசுகிறது. o ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் அந்த இடம் ஆழமாக இருக்குமா என்ற ஒருவித எச்சரிக்கை உணர்வு ஏற்படுகிறது. o ஒவ்வொரு முறை மூழ்கி எழும்போதும், நீந்தும்போதும் நெஞ்சு நிறைய