Skip to main content

Essay on Education-- Qrius Learning Initiatives, Coimbatore.

o ஆற்று மணலின் ஸ்பரிசம் கால்களில் கிச்சுக் கிச்சு மூட்டுகிறது.
o தண்ணீர் சலசலத்து ஓடும் சத்தம் காதில் கீதம் இசைக்கிறது.
o மெல்லிய குளிர் தென்றல் உடலைத் தழுவிச் செல்கிறது.
o ஆற்றில் இறங்கியதும் ஆற்றுநீரின் குளிர்ச்சி உடல் முழுக்க வியாபிக்கிறது.
o சிறு சிறு மீன்கள் கால்விரலில் கடித்து விளையாடுகிறது.
o ஆற்றில் மூழ்கியவுடன் ஆற்றுநீரின் ஓட்டத்தில் உடல் மெல்ல நகர்கிறது.
o கைகளை விரித்து நீரைக் கிழித்து கால்களால் தண்ணீரை உதைத்து நீந்த முயற்சி செய்தாலும் உடல் அந்த இடத்திலேயே இருக்கிறது.
o கைகளால் நீரில் வட்டம் வரைந்தும் நீரை வாரி இரைத்தும் விளையாடும் போது குழந்தையிடம் உருவாகும் மென்மையான மகிழ்ச்சி பெரியவர்களான நமக்கும் ஏற்படுகிறது.
o நீரில் மூழ்கி கால்களுக்கு அடியில் இருக்கும் மொழு மொழு கூழாங்கற்களை எடுத்துப் பார்க்க அதை நம்மிடம் ஆண்டுகளாக அது ஒழுகி வந்ததின் கதை பேசுகிறது.
o ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் அந்த இடம் ஆழமாக இருக்குமா என்ற ஒருவித எச்சரிக்கை உணர்வு ஏற்படுகிறது.
o ஒவ்வொரு முறை மூழ்கி எழும்போதும், நீந்தும்போதும் நெஞ்சு நிறைய சுத்தமான காற்று உட்புகுந்து நெஞ்சை விரியச் செய்கிறது. மனமும் உடலும் புத்துணர்வு பெறுகிறது.

இந்த ஆற்றுக் குளியலையும் குளியலறையில் வாளியில் தண்ணீர் நிறைத்து அது சிறிய கப்பால் எடுத்து தலையில் ஊற்றிக் குளிப்பதையும் நினைத்துப் பாருங்கள்.
எத்தனை வேறுபாடு?

இது நாங்கள் பயிற்சியில் கூறும் கருத்து.
எதற்குத் தெரியுமா?

வீட்டில் மொழியைக் கற்று வந்த குழந்தையிடம், தன் உணர்வுகளை அழகாக எடுத்துரைக்கத் தெரிந்த குழந்தையிடம், வீட்டில் பல்வேறு அனுபவச் சொத்தோடு வரும் குழந்தையிடம், ஒரு சொல் மட்டும் கூறி, அதை பலமுறை வாசிக்க வைத்து, அதைப் பலமுறை எழுத வைக்கும் வகுப்பறை அந்தக் குழந்தைக்குக் குளியலறைக் குளியலாகத்தான் தோன்றும். ஒருபோதும் ஆற்றுக்குளியலின் சுகத்தை அளிக்காது.

அதே நேரத்தில் கதை சொல்லி, பலபதில் வினா கேட்டு, அவர்களிடம் கலந்துரையாடி, பல பதில்களை ஊகிக்க வாய்ப்பளித்து, அப்பதில்களுள் எந்தப் பதில் கதையில் நடந்திருக்கும் நீங்களே கண்டுபிடியுங்கள் என்று கற்றல் அட்டையை அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் கொடுத்து, அவர்கள் பதில்களைக் கண்டுபிடித்து, மீண்டும் அந்த நிகழ்வைப் பற்றிக் கலந்துரையாடி, பிறகு சில செயல்பாடுகள் செய்து... என்ற படிநிலைகளைப் பின்பற்றும் நீள்கதைப் பாடத்திட்ட வகுப்பு ஆற்றுக்குளியலின் அத்தனை சுகத்தையும் குழந்தை அளிக்கிறது.

இந்த சுகத்தை அனுபவிக்க நம் குழந்தைகளுக்கு உரிமையுண்டு. அதை அவர்களுக்கு மறுப்பது நாம் செய்யும் பெரிய குற்றம் என்பதில் ஐயமில்லை.

இந்த எடுத்துக்காட்டு வேலவனின் மனத்தில் உதித்தது. பாராட்டுகள் வேலவன்.

PC: Pixabay

ஜி. ராஜேந்திரன்
கல்வி இயக்குநர்
Qrius Learning Initiatives, Coimbatore.

Image may contain: one or more people and outdoor

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...

Bajji

Conversation opened. 1 read message.        “Bajji” (Tamil) மாலை நாலு மணி வாக்கில் ஏதேனும் ஓர் ஓட்டலில் காபி குடிக்கப் போனால், முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி இருக்கா?’ – இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல ஒரு திருப்தி! மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு! அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும் என் நாக்கு ’ஏர் இந்தியா’ ஸ்டைல் மரியாதை செய்யும்! அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!). இதோடு நல்ல கும்மோணம் டிகிரி காபியும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் – கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் – ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும் பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல! பஜ்ஜி கவனத்தில் தலையாட்டிவிட்டு, பின்னர் வ...