Skip to main content

Posts

Showing posts from 2018

Donkey and the King

The king wanted to go fishing, and so, he asked his royal weather forecaster the forecast for the next few hours. The palace meteorologist assured him that there was no chance of rain. So the king and the queen went fishing. On the way, they met a man with a fishing pole riding on a donkey, and the king asked the man if the fish were biting. The fisherman said, "Your Majesty, you should return to the palace! In just a short time I expect a huge rainstorm."The king replied: "I hold the palace meteorologist in high regard. He is an educated and experienced professional. Besides, I pay him very high wages. He gave me a very different forecast. I trust him. “So the king and queen continued on their way. However, in a short time, torrential rain fell from the sky. The King and Queen were totally soaked. Furious, the king returned to the palace and gave the order to fire the meteorologist. Then he summoned the fisherman and offered him the prestigious pos

கடைசி தலைமுறை

              கடைசி  தலைமுறை தென்னை மரத்தில் குருவிகளையும் , கொல்லைப்புறத்தில் கதவுகளையும் , திண்ணைவெளியில் பெரிசுகளையும் , புகையிலை அப்பத்தாக்களையும் , தாவணி அணிந்த பெண்களையும் , தண்ணீர் நிறைந்த குடங்களையும் , மிக மிகுதியான மிதிவண்டிகளையும் , இவையனைத்தும் கண்ட கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம் . முகநூல்  பதிவில் படித்தது  

"உரை மருந்து" மறந்துட்டோமே!!!

" உரை மருந்து " மறந்துட்டோமே !!! குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் அருமையான பல பாரம்பர்ய முறைகள் நம்மிடம் இருந்தன . இவை , தற்போது ` வேக்ஸின்’களின் வருகையால் ஒட்டுமொத்தமாக மலையேறிவிட்டன . குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்தப் பாரம்பர்யப் புரிதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இந்த முறைகள் தொலைந்துபோவதற்கு முக்கியமான காரணமாகிவிட்டது . கிட்டத்தட்ட 16 வகையான வேக்ஸின்களை வலியுறுத்தும் மருத்துவச் சமூகம் , நம்மிடையே இருந்த 23 நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகளை அதன் ஆழத்தையும் , மருத்துவக் குணத்தையும் புரிந்துகொள்ளாமல் , மறக்கச் செய்துவிட்டது . மறந்துட்டோமே " உரை மருந்து " இந்தக்கால தாய்மார்கள் பலருக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம் . ஆனால் நீங்கள் உங்கள் அம்மாவிடமோ அல்லது பாட்டியிடமோ இதை பற்றி கேட்டால் , அவர்கள் சொல்வது இதுவாக தான் இருக்கும் , " ஆம் அந்தக்காலத்தில் நாங்கள் உரை மருந்து கொடுக்காமல் குழந்தைகளை வளர்த்ததில்லை ". இந்த அறிய பொக்கிஷத்தை மூடநம்பிக்க

General Health Tip

( 3 ௦ வயதுக்கு மேற்ப்பட்வர்களுக்கு .... ஆண் , பெண் இருபாலருக்கும் ....) • 1 கப் ... மஞ்சள் எலுமிச்சை பழம் ( 20 பழம் ) சாறு • 1 கப் ... இளம் இஞ்சி சாறு • 1 கப் ... வெள்ளை பூண்டு சாறு • 1 கப் ... ஆப்பிள் சைடர் வினிகர் ( தங்க நிறம் ) இஞ்சி / பூண்டு சாறு எடுக்க .... இஞ்சி / பூண்டு தோலை நீக்கி விட்டு ... கேரட் துருவியில் தேய்த்து ... சிறு துண்டுகளாக்கி ... பின்னர் மிக்சியில் போட்டு ... சிறிதளவு தண்ணீர் சேர்த்து ... அரைத்து கூழாக எடுத்து ... மெல்லிய துணியில் ... வடி கட்டி சாறு எடுக்க வேண்டும் ... மேலே உள்ள 4 சாறுகளையும் ஒரு வாணலியில் கலந்து .... அடுப்பில் வைத்து ... மிக மிக குறைவான தீ சூட்டில் வைத்து .... மொத்த சாற்றின் அளவு 3 கப் அளவுக்கு ... குறையும் படி செய்ய வேண்டும் ... கிண்டி விட வேண்டியது இல்லை ... இதை செய்து முடிக்க சுமார் ஒரு மணி நேரம் பிடிக்கும் ... பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து மூடி வைத்து ... இந்த கலவையை ஆற விடுங்கள் ... நன்கு ஆறியவுடன் ... இந்த கலவையோடு ... 3 கப் ... சுத்தமான தேன் கலந்து ... முன்னமே கழுவி காய வைத்துள்ள 5 ௦௦ மில்லி பிளாஸ்டிக

Manja Pai

அப்பச்சி வைத்திருந்த மஞ்சப்பை எல்லாம் பிளாஸ்டிக் பையானபோது நாம் கலங்கவில்லை. செவ்வந்தியும் சாமந்தியும் தவழ்ந்த பூஜை அறைகளில் பிளாஸ்டிக் பூக்கள் கடவுள்களை அலங்கரித்த போது நாம் பதறவில்லை. அத்தனை சூட்டையும் தாங்கிய வாழையிலை, ஹோட்டல்களில் பிளாஸ்டிக் இலைகளாக மாறியபோது நாம் கவலைப்படவில்லை. பார்சல் டீ காபி வாங்க கூஜாவை தூக்கிக் கொண்டு அலைவதை அவமானமாக பார்த்து, பிளாஸ்டிக் பையில் டீ வாங்கிய போது நாம் அதை உணரவில்லை. நிமிர்ந்து குடிக்கிற இளநீரை வசதிக்காக பிளாஸ்டிக் ஸ்ட்ரா போட்டு குடித்தபோது நமக்கு அது பெரிய விஷயமாக இல்லை. இலைதழை தின்று கொண்டிருந்த ஆடு,மாடுகள் பிளாஸ்டிக்கை மென்று விழுங்கியபோது நமக்கு எந்த குற்ற உணர்வுமில்லை. மண்பானையையும், எவர்சில்வரையும் ஒதுக்கிவிட்டு, பிளாஸ்டிக் குடங்களில் நீர்பிடித்தபோது நமக்கு எந்த வலியுமில்லை. ஒவ்வொருநாளும் கொட்டுகிற குப்பைகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்களாய் இருந்தபோதும் நமக்கு எந்த பதற்றமுமில்லை. இப்போது அரிசியில்தானே பிளாஸ்டிக் வந்திருப்பதாக சொல்கிறார்கள். பதற வேண்டியதில்லை. *நம்முடைய மூளை பிளாஸ்டிக்

Kannadasan

அந்தக் காலத்தில் ஒரு கல்லூரிப் பேராசிரியை வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் . பேசிக் கொண்டிருந்தார் என்று சொல்வதை விட ... அடித்து துவைத்து கிழித்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம் . கடுமையாக அவர் அப்படி தாக்கிப் பேசிக் கொண்டிருந்தது – கண்ணதாசனை ..! ஆம் ... அடுக்கடுக்கான ஆதாரங்களோடு அந்தப் பெண் பேராசிரியர் வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் . இதோ .. அது பற்றி அந்தப் பேராசிரியப் பெண்ணே சொன்னது : " ஒரு முறை சென்னை வானொலியில் ' இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும் ' என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள் . நான் உரை நிகழ்த்தியபோது , இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி , கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன் . ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது .” அவ்வளவுதான் ..! அடுக்கடுக்காக போன் கால்கள் ..! யார் யாரோ போன் செய்த