Skip to main content

Posts

Showing posts from March, 2018

Women's Day

ஆக்ஸ்ப்போர்ட்டு தமிழ் வாழும் அகராதியின் பெண்கள் தினத்திற்கான கவிதை http://ta.oxforddictionaries.com/ பெண்ணே பெண்ணே நீ யார் ??? -------------------------------------------------------- பெண்ணே நீ பிறந்த வீட்டிற்கு பேரின்பமாய் தாய்க்கு தோழியாய் , தந்தைக்கு குட்டி தேவதையாய் உடப்பிறந்தோர்க்கு உயிரோட்டமாய் உலாவரும் வண்ணநிலவல்லவா நீ !!! வாழ வந்த வீட்டிற்கு விளக்காக , தலைவனுக்கு தூணாக கருவில் சுமந்த கண்மணிக்கு உதிரத்தால் உணவூட்டி கண்ணுறக்கமின்றி கருத்தாய் கவனித்து , கலங்கரைவிளக்கமாக வாழ்வில் வழிகாட்டி இளம்பிறையை முழுமதியாக வடிவமைத்து வளர்த்த வந்த தாய் என்ற தேவதையல்லவா நீ !!! பணிக்கு போகும் பகல்நிலவுகளின் பயணத்தை சொல்லவேண்டுமா என்ன ?? அலார அரைகூவலுடன் அதிகாலை , கதிரவன் கண்காட்டும் முன் காலை காபி சிலமணித்துளிகளில் சட்டென்று சமையல் பெரியோர்களுக்கு வேண்டிய , பொறுப்புகளை செய்து கணவனை கவனித்து , கருத்தாய் கண்மணிகளை கிளப்பி பரபரப்புடன் பேருந்தைப் பிடித்து அவசரமாக ஆரம்பமாகும் அன்றாட அலுவல் கடமைகளுடன் காலைநேரம் , பணிப் பொறுப்புடன் பகல் நேரம் , சோர்வாக சாயங்க

Story of an old woman

                                ஒரு ஊரிலே ஒரு கிழவி இருந்தார் . அவர் மிகவும் ஏழ்மையான சூழலில் இருப்பவர் , அவருக்கு படிப்பறிவும் கிடையாது . ஆனால் , ஊரிலே யாராவது ஆன்மீக பேச்சாளர்கள் அல்லது சொற்பொழிவாளர்கள் பேச வந்தால் , என்ன வேலை இருக்கிறதோ இல்லையோ , அந்த வேலையெல்லாம் விட்டு விட்டு , போய் உட்கார்ந்து விடுவாராம் , அந்தச் சொற்பொழிவினைக் கேட்பதற்கு , அவருக்கு ஒன்றும் விளங்காது , உட்கார்ந்து சொற்பொழிவு விடிய விடிய கேட்டுவிட்டு காலையிலே வேலைக்கு போவார் , அவருக்கோ வயலிலே வேலை , அந்த வேலைக்கு உரியவன் இந்த கிழவியை திட்டுவார் . இரவெல்லாம் தூங்காமல் நித்திரை விழித்து , இங்கு வந்து வேலை செய்யாமல் இப்படி தூங்கினால் என்ன செய்வது என்று திட்டுவார் . ஒரு நாள் இதே போல இரவெல்லாம் நித்தரை விழித்து சொற்பொழிவு கேட்டுவிட்டு மறுநாள் காலையிலே வேலைக்கு போகிறார் , அன்று அவர் வயலிலே வேலை செய்யும் பொழுது சோர்வாக இருந்தார் , அதை கண்ட தோட்டக்காரன் கிழவியை திட்டினார் . உங்களுக்கு என்ன விளங்குகிறது என்று சொற்பொழிவு கேட்க போகிறீர் . சரி உங்களுக்கு விளங்குகிறதனால் நேற்று பேச்சாளர் என்ன

Yama Dharmarajan

# எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உடனடியாக அந்தக்குருவியை தூக்கிக் கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது. அந்த பொந்தில் வசித்து வந்த ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த குருவியை விழுங்கிவிட்டது. குருவியைக் காப்பாற்ற நினைத்து அந்த குருவிக்கே எமனாகி விட்டோமே என்று நினைத்து கருடபகவான், குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது. “நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்றார் எமதர்மராஜன்" நான் அந்தக் குருவியை உற்று நோக்கக் காரணம், "அந்த குருவி சில நொடிகளில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்த ஒரு பாம்பின் வாயால் இறக்க நேரிடும்" என எழுதப்பட்டிருந்தது; அது எப்படி நிகழப் போகிறது? என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன். அதற்குள் விதிப்படியே நடந்து விட்டது என்று கூறினார். "வாழ்க்கையில் என்ன நடக்கவேண்டுமோ அது நிகழ்ந்தே தீரும். அதனால் அதுகுறித்