Skip to main content

Posts

Showing posts from May, 2017

கண்ணீர் அஞ்சலி

                                              கண்ணீர் அஞ்சலி               18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று....ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்.... 🍀 காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். 🍀 செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ.... 🍀 என்ன ஆயிற்று எனக்கு? 🍀 நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? 🍀 ஒரு நிமிடம் யோசிக்கிறேன்.... 🍀 நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன். 🍀 காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது 🍀 என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். 🍀 அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். 🍀 அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்...... 🍀 என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள். பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்த

Nel jayaraman

                                 விழித்துக்கொள்ளுங்கள் தமிழா... மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு நெல் ரகம்... இந்த அரிசியை சாப்பிட்டால் சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை! தமிழகத்தில் வழக்கொழிந்து போன ஆயிரம், ஆயிரம் தமிழ் பாரம்பரிய நெல் ரகங்கள். ‘‘ஒசுவக்குத்தாலை, சிவப்புக்குடவாழை, வெள்ளையான், குருவிகார், கல்லுருண்டை, சிவப்பு கவுணி, கருடன் சம்பா, வரப்புக் குடைஞ்சான், குழியடிச்சம்பா, பனங்காட்டுக் குடவாழை, நவரா, காட்டுயானம், சிறுமணி, கரிமுண்டு, ஒட்டடையான், சூரக்குறுவை... இதெல்லாம் நம்ம தமிழ் பாரம்பரிய நெல் ரகங்கள். இந்த மாதிரி ஆயிரக்கணக்கான ரகங்களை பிலிப்பைன்ஸுக்கும், அமெரிக்காவுக்கும் கொண்டு போயிட்டாங்க. இன்னைக்கு உள்ள விவசாயிகளுக்கு இதோடஅருமையெல்லாம் தெரியாது. ஒவ்வொரு நெல்லும் ஒவ்வொரு மருந்து. மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு ரகம்... சாப்பிட்டா சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை! கவுணி அரிசி நாள்பட்ட புண்ணையெல்லாம் ஆத்திடும். கருங்குறுவை, யானைக்காலை குணமாக்கும். பால்குடவாழையில சமைச்சுச் சாப்பிட்டா குழந்தை பெத்த பெண்க

மஹாபெரியவா

            "விளக்கு வைக்கறதுக்குள்ள கொண்டு சேர்க்கணும்" - மஹாபெரியவா தற்போது சென்னை சூளைமேட்டில் வசித்து வருபவர் எஸ்.கல்யாணசுந்தரம். இவர் தந்தையார் பெயர் தி.நா.சுப்ரமணியம். அதாவது திப்பிராஜபுரம் நாராயணசாமி சுப்ரமணியம். சொந்த ஊர் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திப்பிராஜபுரம். சுப்பிரமணியத்தின் தந்தையார் பெயர் நாராயணசாமி. சுப்ரமணியம் சிறந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர். தனி நபராகவே இந்தக் கலையைக் கற்றுக் கொண்டு எத்தனையோ கல்வெட்டுக்களை ஆராய்ந்து தகவல்களைச் சொன்னவர். சுப்ரமணியத்தின் கல்வெட்டுப் புலமை பற்றி அறிந்த மஹாபெரியவா இவரை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். தான் தரிசித்த ஆலயங்களைப் பற்றிய பூர்வீகத் தகவல்களை, இவரிடமிருந்து கேட்டுப் பெறுவது மஹாபெரியவாளின் வழக்கம். 1950-களின் துவக்கத்தில் தன் குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார் சுப்ரமணியம். இவரைச் சந்தித்து கல்வெட்டு குறித்தான சில விஷயங்களை விவாதிக்கவேண்டும் என்று மஹாபெரியவா தீர்மானித்தால் மடத்துச் சிப்பந்திகள் மூலம் கடிதம் எழுதச் சொல்லி வரவழைப்பார். அவசரம் என்றால் யாரையாவது நேரில் அனுப்பித் தகவல் சொ

அக்ஷராப்யாஸம்

அக்ஷராப்யாஸம்! நவராத்ரிக்கு முந்தின வாரம். பெரியவாளை தர்ஶனம் பண்ண ஒரு தம்பதிகள், தங்கள் ஐந்து வயதுக் குழந்தையோடு வந்து நமஸ்காரம் பண்ணினார்கள் “பெரியவாகிட்ட ஒரு ப்ரார்த்தனை… கொழந்தைக்கு விஜயதஸமியன்னிக்கி அக்ஷராப்யாஸம் பண்ணணும்… நவராத்ரி டைம்-ங்கறதால ஆத்தை விட்டு வரது… கொஞ்சம் கஷ்டம்… கொழந்த… நன்னா படிச்சு, நன்னா வரணும்…. அதுக்கு பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்…” பெரியவா தன் முன்னால் அப்பா, அம்மாவைப் போலவே கை கூப்பிக் கொண்டு, அம்மாவையும், தன்னையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நிற்கும் குழந்தையை கடாக்ஷித்தார்… “பெரியவாளோட திருவாக்கால, கொழந்தைக்கு… எதாவுது அக்ஷரம் சொல்லித் தரணும்….” “இங்க வா……” ‘ஸரஸ்வதி‘ அழைத்தாள்! “நா…..சொல்றத….அப்டியே…. திருப்பி சொல்றியா?...” “சொல்றேன்…..உம்மாச்சி தாத்தா!…” “சொல்லு….வாக்குண்டாம்!…..” “வாகுந்தாம்…..” “நல்ல மனமுண்டாம்” “நல்ல மனமுந்தாம்” “மாமலராள் ….” “மாமலரால் ..” “நோக்குண்டாம்….” “நோக்குந்தாம்..” “மேனி…” “மேனி..” “நுடங்காது….” “நுங்காது…” “பூக்கொண்டு…” “பூக்கொந்து…” “துப்பார்….” “துப்பார்….” “திருமே

OSHO

நண்பர்களே...... ஓஷோ - வின் அற்புதமான கதை!!! ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ”இந்த கல்லை எனக்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன் எவ்வளவு வேண்டும் கேள்” என்றான். உடனே பிச்சைக்காரன்.... “அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்கல்லை வைத்துக்கொள்” என்றான். அதற்கு வைர வியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன்” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான்.... உடனே அந்த “பிச்சைக்காரன்“. அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான். வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான். அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான். இதை சற்றும் எதிர்பாராத முதல் வைர வியாபாரி அதிர்ச்சியுடன் “அட அ

Ramana Maharishi on Meditation

                        Ramana Maharishi on Meditation   *A devotee asked Ramana Maharishi:* "Why do we need to meditate? I say it is "my mind" - then should it not listen to me and meditate by itself when I tell it to? Why does it keep running outside all the time?" *Ramana Maharishi kept silent at that time.* At about the same time, a squirrel had given birth in the ashram, and unfortunately a few days later the mother squirrel got eaten by a cat. Ramana Maharishi took the job of taking care of the baby squirrels. He kept them inside a cage that was kept in the meditation hall. After a few days when everyone was sitting in the meditation hall, the same cat came inside. It so happened that the baby squirrels rushed out of the cage at the same time. Ramana Maharishi got up hurriedly, caught all the baby squirrels one by one and put them back in the cage and locked the door firmly shut. He then turned to the devotee that had asked

Cartoon from Ananda Vikatan

 This is an art work by Gopulu for Ananda Vikatan.   Thanks to Baskar Satya/FB  01/05/17

"Who will cry when you die?"

"Who will cry when you die?" - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்... அதாவது, "நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்... “நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது... நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்... 1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்... 2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள். 3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள். 4. அதிகாலையில் எழ பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே. 5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது ந

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?

     பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? ஒரு குட்டிக்கதை இரண்டு மன்னர்களுக்குள் சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான் ”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே” கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்? (வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்) தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான். அவள் சொன்னாள் விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்;உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்? அவன் சொன்னான்,“என்ன கேட்டாலும் தருகிறேன்” சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,'"தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்” இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல,அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள் திருமணம் நடந்தது.இவனுக்கு நாடும் கிடைத்தது. அவன் சூனியக்க