Skip to main content

Posts

Showing posts from September, 2020

நாமும், நீர் மேலாண்மையும்.

  உலகின் மிக வலிமையான ஆயுதம் எதுவோ அது தன்னிடம் இருக்க வேண்டும் என்பது அந்த அரசனின் ஆசை. "அகிலம் எங்கும் போங்கள், அதைக் கொண்டு வாருங்கள்' என ஆணையிட்டான். தளபதிகளும், அமைச்சர்களும் ஒன்று கூடி உரையாடி, அந்த ஆயுதம் எது என்று தீர்மானிக்க முற்பட்டனர்.  வாள், வேல், வில், கணை, கதை, குத்துவாள், கோடரி என்று படைவீரர்கள் பட்டியலிட்டனர். கூர்மையான சொல், கொடு வாளைவிட வலிமையானது, காலாட்படையை பெருக்குவதைவிட, கவிஞர் படையைப் பெருக்குவது நாட்டிற்கு நல்லது என இலக்கியச் சங்கங்கள் தீர்மானங்கள் இயற்றின. எதிரியின் பலவீனம் எதுவோ, அதுவே நமது வலிமையான ஆயுதம் என்பது அமைச்சர்களின் அபிப்பிராயம். மனையாளின் கண்ணீரா, குழந்தையின் புன்னகையா என வீடுகளுக்குள் விவாதங்கள் நடந்தன.  விவாதம் வேறு வேறு திசைகளில் திரும்புவதைக் கண்டு வெறுப்பும், எரிச்சலும் அடைந்தான் அரசன். இவர்களை நம்பி இனிப் பிரயோசனம் இல்லை என்ற முடிவுக்கு வந்த அரசன், ஊரின் ஒதுக்குப் புறத்தில் வாழ்ந்து வந்த சாமியாரைச் சந்திக்கப் புறப்பட்டான். அவர் அவனது ஆன்மிகக் குரு. அரசியலிலும் அவ்வப்போது ஆலோசனைகள் சொல்வது உண்டு. சாமியார்களுக்கு ஆயுதங்க

மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்!

  மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்! முதல் மாமனிதர் : 150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்வது வழக்கம். *ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார்.* அதற்கு ஒவ்வொரு மாணவர்களும் வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே வந்தனர், அப்போது *ஒரு மாணவன் கூறினான் “நான் குதிரை வண்டிக்காரனாவேன் ”.* சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர், ஆசிரியரும் அவனை கேலி செய்து உட்கார சொன்னார். அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததை பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததை கூறினான் அந்த சிறுவன். அதை கேட்ட அந்த தாய் மகன் மீது கோபம் கொள்ள வில்லை, அந்த தாய் கேட்டார் *“ நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்”.* அந்த சிறுவன் கூறினான் “தினமும் பள்ளிக்கு செல்லும் போது குதிரை வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். *எனக்கும் அதுபோல் குதிரை வண்டி ஓட்ட வேண்டும் என்று ஆசை, அதனால் தான் அப்

நூறுவயது வரை வாழ பழங்கால வாழ்க்கை முறை ரகசியங்கள்!

  # நூறுவயது வரை வாழ பழங்கால வாழ்க்கை முறை # ரகசியங்கள் ! பல ஆண்டுகள் வாழும் நோயின்றி வாழ பழங்கால வாழ்க்கை முறை ரகசியங்கள்.. முடிந்தவரை கடைபிடியுங்கள். 1. அதிகாலையில் எழுபவன். 2. இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்.. 3. முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்... 4. மண்பானைச் சமையலை உண்பவன்.. 5. உணவை நன்கு நொறுங்க மென்று உண்பவன்... 6. உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்... 7. வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்... 8. கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்.... 9. மலச்சிக்கல் இல்லாதவன்... 10. நீரை கொதிக்கவைத்து குடிப்பவன்... 11. துரித உணவுக்கு அடிமையாகதவன்... 12. படுத்தவுடன் தூங்குகிறவன்.. 13. எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்... 14. இயற்க்கை விவசாயம் செய்து வாழ்பவன்... 15. வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்.... 16. உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்.... 17. பத்து நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்.... 18. ரீபைண்ட் ஆயில் உபயோகிக்காமல் செக்கு எண்ணையை உபயோகிப்பவன்... 19. அயோட

பொண்டாட்டின்னா எமனுக்கே பயம்

  எமதா்ம ராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.மகன் கொஞ்சம் வளா்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம தனக்குள்ள பயத்தையும் விளக்கினார். மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம்.எப்படித் தொியுமா? ஒருவா் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவா் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு

இயல்

  இயல் 20/10/2018 expectkids இயல் – படிப்புகள்: 1. அகச்சுரப்பியியல் – Endocrinology 2. அடிசிலியல் – Aristology 3. அடையாளவியல் – Symbology 4. அண்டவியல் – Universology 5. அண்டவியல் – Cosmology 6. அணலியல் – Pogonology 7. அருங்காட்சியியல் – Museology 8. அருளரியல் – Hagiology 9. அளவீட்டியல் – Metrology 10. அற்புதவியல் – Aretalogy 11. ஆடவர் நோயியல் – Andrology 12. ஆய்வு வினையியல் – Sakanology 13. ஆவணவியல் – Anagraphy 14. ஆவியியல் – Spectrology 15. ஆறுகளியல் – Potamology 16. இசையியல் – Musicology 17. இந்தியவியல் – Indology 18. இயற்பியல் – Physics 19. இரைப்பையியல் – Gastrology 20. இலக்கிலி இயல் – Dysteleology 21. இறை எதிர் இயல் – Atheology 22. இறைமையியல் – Pistology 23. இறைமையியல் – Theology 24. இன உறுப்பியல் – Aedoeology 25. இன்ப துன்பவியல் – Algedonics 26. இனப் பண்பாட்டியல் – Ethnology 27. இனவியல் – Raciology 28. ஈரிடவாழ்வி இயல் – Herpetology 29. உடலியல் – Physiology 30. உட

ந.க. எண்; மூ.மு.எண் என்பது என்ன?

  ந.க. எண்; மூ.மு.எண் என்பது என்ன? 31/05/2019 expectkids Uncategorized Leave a comment அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண்; மூ.மு.எண்: என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு, நாளையும் அதில் குறிப்பிட்டு இருப்பார்கள். அதனை நீங்களும் பார்த்திருக்கலாம். இந்த எண்கள் மிகவும் முக்கியமானவை என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதன் அருகில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் எதைக் குறிக்கின்றன? என்பது பல பேருக்குத் தெரியாது. அதற்காகத்தான் இந்தப் பதிவு. ந.க எண் என்றால், நடப்புக் கணக்கு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம் ஓ.மு. எண் என்றால், ஓராண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம் மூ.மு எண் என்றால் மூன்றாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம் நி.மு. எண் என்றால் நிரந்தர முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம் ப.மு. எண் என்றால், பத்தாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம் தொ.மு எண் என்றால், தொகுப்பு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம் ப.வெ எண் என்றால் பருவ வெளியீடு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம் நே.மு.க எண்