Skip to main content

வார்த்தை சுத்தம் உள்ள மனிதர்களை எங்கேயாவது பார்த்தீர்களா?





ஆஹா! அருமையான கேள்வி !!

வார்த்தை சுத்தமுள்ள மனிதர்தானே!

ஒருவரல்ல பலரை :- பார்த்ததில்லை ,படித்ததுண்டு,அந்த உணர்வில் கலந்து உணர்ச்சியில் சிலிர்த்ததுண்டு..காளையார் கோவில் ரதம் -கோவி மணிசேகரன்

காளையார் கோவிலுக்கு ரதம் ஒன்று வேண்டும் .நமது வாளையும் வேல்கம்பையும் பிரிட்டிஷாரின் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் நெருங்குவதற்கு முன் சிவகங்கைச் சீமையின் பெருமையை சரித்திரத்தில் கலைத்தூணாக காலம் உள்ளளவும் அது நிற்கச்செய்ய ,எண்ணியது திண்ணமுடன் செய்து முடித்திட யார் பொருத்தமானவர் ? ஆய்ந்து, அறிந்து அழைத்து வாருங்கள் .ஆணையிட்டார்பெரியமருது .

குப்பமுத்து ஆசாரி அழைத்துவரப்பட்டார் .

"மன்னா மன்னிக்கவும் .தொன்மை கலைகள் எல்லாம் பிரிட்டிஷாரிடம் அழிபட்டுப் போகின்றன ,காத்திடுதல் சிரமம் "என்றார் ஆசாரி.

தக்க ஏற்பாடுகள் செய்வோம் .தயக்கம் வேண்டாம் என்றார் மன்னர்.

வனங்களில் இருந்து மரங்கள் கொண்டுவரப்பட்டன. துணைக்கு ஆட்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர் வேலையை தொடங்கினார் ஆசாரி. முதலில் விநாயகர் வரைந்தார் .உளியை பிடித்தார் செதுக்க ஆரம்பித்தார் .உளி புரண்டு துதிக்கை உடைந்தது .கொஞ்சம் குழப்பமடைந்து நாடி பார்த்தார்; அமைதியானார் .

அழகான ரதம் .அற்புதமான வேலைப்பாடுகள் .ரதத்தின் அழகு காண்பவரை எல்லாம் வசீகரித்தது குப்பமுத்து ஆசாரியினைபுகழாதவர் எவருமில்லை .வேலை முடிந்து

வெள்ளோட்டம் விடும் நாள் வந்தது .

பட்டாடை அணிந்து ,மணிமுடி தரித்து ,நகர்வலம் வர பெரிய மருதுவும் சின்ன மருதுவும் ரதத்தின் மீது அமர்ந்தனர் .

இறைவனை வாழ்த்தி, மன்னனை வாழ்த்தி வேதம் முழங்க ,மத்தளம் கொட்ட ,மங்கலமொழி சொல்ல மக்கள் மகிழ்ச்சியோடு ரதம் இழுத்தனர் .ரதம் துளியளவு கூட நகரவில்லை .ஆசாரியை அழைத்தார் பெரியமருது ,காரணம் கேட்டார் .ரதம் தட்ஷனை கேட்கிறது என்றார் ஆசாரி .கீழே இறங்கினார் மன்னர் .நினைத்ததை தருகிறேன் தயங்காமல் சொல்லுக என்றார் .

ஆசாரி கேட்டதும் அதிர்ச்சியில் சின்னமருதுவும் மக்களும் ஆடிப் போனார்கள் .

ஆம் !ஆசாரி அரியணையைக் கேட்டார் !ரதம் ,நிலைக்கு வரும்வரை நான் மன்னனாகவும் வேண்டுமென்றார் .

உடைவாளை கையிலெடுக்க புகுந்தார் சின்னமருது .ஆசாரியின் பேராசையை கண்டு ரத்தம் கொதித்தது மக்களுக்கு.

"கொடுத்த வாக்கை மீற மாட்டேன் "ரதம் நிலைக்கு வரும்வரை நீங்களே !சிவகங்கைச் சீமையின் மன்னன் .மன்னனின் வாக்கை மக்கள் மதிக்க வேண்டும் என்று அமைதிப்படுத்தினார் பெரியமருது ..மணிமுடியை ஆசாரியின் தலையில் சூடினார்.குப்ப முத்து ஆசாரி :குப்பமுத்து பாண்டியனார் ஆனார்.

ஜெய கோஷங்கள் முழங்க ,மன்னர் குப்பமுத்து பாண்டியனார் ரதத்தில் ஏறி அமர்ந்தார் .ஏறுமுன் ரகத்தை சிறிது தட்டினார். ரதம் இப்பொழுது நகர ஆரம்பித்தது .

ஆட்டம் ,பாட்டம் ,வேடிக்கையுடன் ரதம் நகர உலா வந்தது .நிலைக்கு வரும்போது ,ரதம் வேகமாக உருண்டு குப்பமுத்து பாண்டியனார் நிலைதடுமாறி கீழே ரதத்தின் சக்கரத்தின் இடையில் விழுந்தார்.

விழுந்தது மன்னர் அல்லவா !பதறினர் அனைவரும் !ரத்தவெள்ளத்தில் குப்பமுத்து பாண்டியனார் .ஓடிவந்தனர் மருது சகோதரர்கள் .உயிரை காப்பாற்ற மருத்துவர் அழைக்கப்பட்டார் .

அமைதியாய் இருந்தார் குப்பமுத்து பாண்டியனார். எழுதப்பட்ட ஓலையை இடையில் இருந்து எடுத்து மருதுவிடம் கொடுத்தார் .

மன்னா மன்னிக்க !

"முதல் நாள் வேலையில் ,விநாயகர் துதிக்கை உடைய ,நாடி பார்த்தேன் ."வெள்ளோட்ட தேதியன்று தேர் நிலை வரும்போது மன்னன் மடிவான் திண்ணம் .என்றிருந்தது .மன்னரரைக் காக்க ,மன்னனாய் வேடம் கொண்டேன் .மன்னித்து விடுங்கள் "என்று எழுதியிருந்தது .

மன்னர் அழுதார் ,மக்கள் அழுதனர் ,,குப்ப முத்து ஆசாரியின் செயல் கண்டு வானமே அழுதது .

உங்களுக்கு ஒரு கேள்வி :

நடந்த சம்பவத்தில் வாக்கு சுத்தமானவர்கள் யார் ?

குப்பமுத்து ஆசாரிக்கு கொடுத்த வாக்கை மீறாமல் மகுடம் சூட்டிய மன்னனா ?

ஆசாரி ஒருவரை ,மன்னர் சொன்னதால் ,மன்னராக ஏற்றுக்கொண்ட குடி மக்களா ?

மரணம் அடைவோம் என்று தெரிந்தும் மன்னர் கொடுத்த வேலையை நிறுத்தாது பணி முடித்து கொடுத்த குப்ப முத்து ஆசாரியா?

வார்த்தை சுத்தமானவர்கள் ,வாழ்ந்துதான் இருந்திருக்கிறார்கள் !நமக்குத் தெரியாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் ,

நன்றி !வாசித்தவர்களுக்கும்,கேள்வி கேட்டவருக்கும் .

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Nature is Awesome

                Nature is Awesome Javed Chaudhary   · Y e s t e r d a y   a t   2 : 4 3   A M   · WHY DO DOGS LIVE LESS THAN HUMANS!!! Here's the surprising answer of a 6-year-old child. Being a veterinarian, I had been called to examine a ten-year-old Irish Wolfhound named Belker. The dog’s owners, Ron, his wife Lisa, and their little boy Shane, were all very attached to Belker, and they were hoping for a miracle. I examined Belker and found he was dying of cancer. I told the family we couldn’t do anything for Belker and offered to perform the euthanasia procedure for the old dog in their home. As we made arrangements, Ron and Lisa told me they thought it would be good for six-year-old Shane to observe the procedure. They felt as though Shane might learn something from the experience. The next day, I felt the familiar catch in my throat as Belker‘s family surrounded him. Shane seemed so calm, petting the old dog for the...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...