Skip to main content

ஆரஞ்சுப்பழம்

🌴 இரண்டு சின்ன பசங்க,
ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை எடுத்துட்டு ஓடி வந்தாங்க.
ஒரு அமைதியான இடத்துக்கு போய் இரண்டுபேரும் அதை பங்கு போட்டுக்க நினைச்சாங்க.பக்கத்துல உள்ள  சுடுகாட்டுக்கு போவோம்னு  ஒருத்தன் சொன்னான்.
சுடுகாட்டின் கேட் பூட்டி இருந்துச்சு....கேட் மேல ஏறி உள்ள குதிச்சாங்க.
அப்படி குதிக்கும்போது ரெண்டு ஆரஞ்சுப்பழம் மட்டும்  கீழ விழுந்துடுச்சி.
கூடைல நிறைய பழம் இருந்ததுனால, அதை அவங்க கண்டுக்கல.
கொஞ்சநேரம் கழிச்சி சுடுகாடு வழியா ஒரு குடிகாரன் வந்தான். அவன் உள்ள இருந்த சத்தத்த கேட்டு அங்கேயே நின்னுட்டான்.

"உனக்கொன்னு, எனக்கொன்னு" "உனக்கொன்னு, எனக்கொன்னு" ''உனக்கொன்னு, 'எனக்கொன்னு"
இதை கேட்ட அவனுக்கு  போதை மொத்தமும் தெளிஞ்சிடுச்சி..அவன் பயந்து போய் அங்கிருந்து விழுந்தடிச்சி ஓடினான். அவன் போற வழியில ஒரு மரத்தடியில சாமியார் ஒருத்தர் தவம் பண்ணிக்கிட்டு இருந்தார். 
இவன் உடனே   அங்க இருந்த சாமியார் கிட்ட விஷயத்தைச் சொன்னான்.
"சாமி!  தயவு செய்து என் கூட வாங்க.
கடவுளும், சாத்தானும் சுடுகாட்டுல பிணங்கள பங்கு போடுறத காமிக்கிறேன்."
சாமியார்க்கு ஒன்னும் புரியல. ஆனாலும்  அவன் ரொம்ப கெஞ்சி கூப்பிட்டதால
அவன் கூட போனாரு. அவங்க கேட் கிட்ட வந்து  கேட்ட திறக்கும் முன்...
இப்பொழுதும் சுடுகாட்டுல இருந்து மறுபடியும் அதே சத்தம் வந்துச்சு.."உனக்கொன்னு, எனக்கொன்னு" ''உனக்கொன்னு, 'எனக்கொன்னு"
திடீர்ன்னு சத்தம் நின்னுடுச்சி. ஆனா, ஒரு சத்தம் தெளிவா கேட்டது.
 "ஆமா!  கேட்ல இருக்குற இரண்டு யாருக்கு?" "எனக்கு." "இல்ல..இல்ல. எனக்குத்தான்." "சரி நீயே அதை உரிச்சு தின்னு" அவ்வளவுதான்..
"நாங்க இன்னும் சாகல. நாங்க இன்னும் சாகலை"ன்னு அலறிக்கிட்டே,
சாமியாரும், குடிகாரனும் விழுந்தடிச்சிக்கிட்டு ஓடிட்டாங்க...

🌹 கொரானா நினைப்புலேயே
இருக்காதீங்க. .....
ரிலாக்ஸா கொஞ்சம் சிரிக்கலாமே.....

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem