Skip to main content

அரபி கதை


சுயநலத்தை பத்தி ஒரு நல்ல கதை எனக்கு ஒரு ஓமானி நண்பன் சொன்னான் , அது ஒரு அரபி கதையாகும்
ஒரு ஊரில் ஒரு கசாப்பு கடைக்காரர் இருந்தார் ,அவர் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தது அதுனால் ஆத்திரம் அடைந்த அவர் அதை பிடிக்க எலிப்பொறி ஒன்றை வாங்கி வர ,அதை பார்த்த எலி ஓடி போய் வீட்டின் கூரை மீது வசித்த வந்த புறாவிடம் ," புறா , என்னை பிடிக்க கசப்புக்காரர் எலிப்பொறி வாங்கி கொண்டு வந்துருகிறார் " னு சொல்ல, அதற்கு புறா " அதுனால் எனக்கு என்ன, நான் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் கூரையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் " என்றது
எலி வீட்டில் வளரும் கோழியிடம் சென்று முறையிட்டது ,அதற்கு அந்த கோழி " அதுக்கு நான் என்ன பண்ண முடியும் ,நான் இந்த வீட்டில் நன்றாக வாழ்கிறேன் , முதலாளி அம்மா எனக்கு தினம் நல்ல தீவனம் போடுகிறார்கள் ,உன் பிரச்சனை உனக்கு " னு சொல்லி சென்று விட்டது
எலி அந்த வீட்டில் வளரும் ஆடுயிடம் சென்று தன் பிரச்னையை சொன்ன பொது , " எனக்கு என்னப்பா முதலாளி என்னை நல்ல கவனித்து கொள்கிறார் ,உனக்கு பிரச்சனை வந்தா நான் என்ன பண்ண முடியும் ,என்னிடம் வந்து பொலம்பாதே " என்று பதில் அளித்து அந்த எலியை அனுப்பி விட்டது .
மறுநாள் அந்த எலிப்பொறியில் இருந்து சத்தம் வர , அவரின் மனைவி எலி சிக்கி விட்டது என்று எண்ணி பொறிக்குள் கையை விட ,உள்ள இருந்தது எலி இல்லை கொடிய விஷம் உள்ள தேள் ,அது அந்த பெண்மணியின் கையில் கொட்டி விட்டது , சற்று நேரத்தில் உடல் முழுவதும் விஷம் பரவி உடல் நீல நிறத்தில் மாற தொடங்கியது ,அதை பார்த்த கசாப்புக்காரர் ஓடி போய் ஹக்கீம் (வைத்தியர்) கூட்டிகிட்டு வந்தார் ,ஹக்கீம் தன் கைவசத்தில் இருந்த மூலிகையை குடுத்து விஷம் பரவலை தடுத்து விட்டார் ,பிறகு கசாப்புக்காரர்யை பார்த்து ,"விஷம் முழுமையைக்காக இறங்க புறா சூப்பு வைத்து கொடுங்கள் "என்று சொல்லி கிளம்பிவிடுகிறார் ,
கூரையின் மீது இருந்த புறா இப்போ சூப்பு கிண்ணத்தில் இருந்தது, நலம் விசாரிக்க நிறையா உறவினர்கள் வந்தார்கள் அவர்களை கவனிக்கும் பொருட்டு வீட்டில் வளர்ந்த கோழி அடித்து விருந்து ஆகி விட்டார் ,
10 நாள் சென்று தன் அன்பு மனைவி முழுமையாக குணம் பெற்ற பிறகு ,வீட்டில் வளர்ந்த கிடாயை வெட்டி ஊருக்கே பிரியாணி போடுகிறார் ,மற்றும் இனி அந்த எலிப்பொறி வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிடுகிறார் .
எலி அதன் பொந்தில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறது .
இந்த பூமியில் ஒரு கஷ்டம் வரும் போது அந்த கஷ்டம் இங்கே வாழும் அனைவருக்கும் தான் , எனக்கு என்ன ,அவனுக்கு தானே வந்துருகிறது என்று நினைத்து வாழ்ந்தால் முதலில் அந்த பிரச்சனை நமக்கு தான் பாதிப்பை தரும் .

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem