Skip to main content

முத்து நகர் எக்ஸ்பிரஸ்

 

 

 

 

தூத்துக்குடியில் இருந்து

சென்னை செல்லும் முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவில் பட்டியில் ஒரு பாட்டி மூட்டையுடன் ஏறினார். கம்பார்ட்மென்டில் உட்கார்ந்திருந்த இளைஞனிடம் சொன்னாள்.

பேராண்டி நான் நாளை காலை 7 மணிக்கு விழுப்புரத்தில் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக செல்கிறேன். அதிகாலை 2 .00 மணிக்கு இந்த ரயில் விழுப்புரத்தை சென்றடையுமாம்.

நான் தூங்கி விடுவேன் என்னை விழுப்புரத்தில் 2.00 மணிக்கு எழுப்பி இறக்கி விட்டு விடு.

நான் எழுந்திருக்கவில்லை என்றாலும் குண்டுக்கட்டாக தூக்கி பிளாட்பாரத்தில் படுக்க வைத்து விடு.

நான் விடிந்ததும் ஆட்டோ பிடித்து கல்யாண மண்டபத்திற்கு சென்று விடுவேன். சிரமத்திற்கு மன்னித்துக் கொள். இந்த உதவியை மட்டும் எனக்காக செய்து விடு என்றாள்.

அவன் சொன்னான் பாட்டி இதென்ன உதவி கண்டிப்பாக நான் உங்களை விழுப்புரத்தில் இறக்கி விட்டு விடுகிறேன் அதற்காக உதவி என்று பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள் நிம்மதியாக தூங்குங்கள் என்றான். பாட்டியும் அவனை நம்பி நன்றாகத் தூங்கி விட்டாள்.

காலை ஏழு மணிக்கு எக்மோர் ஸ்டேசன் வந்ததும் அந்த பாட்டி குய்யோ முறையோ என்று கத்தி அந்த இளைஞனை திட்டுகிறாள். நீ நல்லா இருப்பியா நாசமா போயிருவ. உன்னை நம்பி தானடா நான் தூங்கி விட்டேன் முடியாது என்று முதலிலேயே சொல்லியிருந்தால் நான் தூங்காமல் இருந்திருப்பேன் அல்லது வேறு யாரிடமாவது சொல்லி இருப்பேனே இப்போதே மணி ஏழாகி விட்டதே இனி நான் எப்படி பஸ் பிடித்து எத்தனை மணிக்கு விழுப்புரத்துக்குப் போவேன் முகூர்த்தம் முடிந்து விடுமே என்று திட்டிக் கொண்டே இருந்தாள்.

பக்கத்திலிருந்தவர்கள் விசயத்தைக் கேள்விப் பட்டு அவர்களது பங்குக்கு அவர்களும் அவனை திட்டி சாத்து சாத்து என்று சாத்தினார்கள்.

அவன் இந்த திட்டையும் அடியையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

எல்லோரும் கேட்டார்கள் ஏண்டா பாட்டியும் நாங்களும் உன்னை இந்த திட்டும் இப்படி அடித்துக் கொண்டிருக்கிறோம் நீ எதையும் பொருட்படுத்தாமல் அப்படி என்னத்தையடா யோசித்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்கள்.

அதற்கு அவன் சொன்னான் இந்தப் பாட்டியே என்னை இப்படித் திட்டுகிறதே இந்தப் பாட்டி என்று நினைத்து இன்னொரு பாட்டியை சொல்லச் சொல்ல கேட்காமல் அதிகாலை 2.00 மணிக்கு தர தரவென்று இழுத்து விழுப்புரம் பிளாட்பாரத்தில் படுக்க வைத்து விட்டு வந்தேனே அந்த பாட்டி எப்படி திட்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றான்...😂😂😂

படித்ததில் சிரித்தது...!!!

 

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...

Bajji

Conversation opened. 1 read message.        “Bajji” (Tamil) மாலை நாலு மணி வாக்கில் ஏதேனும் ஓர் ஓட்டலில் காபி குடிக்கப் போனால், முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி இருக்கா?’ – இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல ஒரு திருப்தி! மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு! அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும் என் நாக்கு ’ஏர் இந்தியா’ ஸ்டைல் மரியாதை செய்யும்! அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!). இதோடு நல்ல கும்மோணம் டிகிரி காபியும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் – கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் – ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும் பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல! பஜ்ஜி கவனத்தில் தலையாட்டிவிட்டு, பின்னர் வ...