Skip to main content

ஏன் பழைய வீடுகளில் முற்றம் அமைத்திருந்தனர்?

 

 

   

முற்றம் (COURTYARD) நம் முன்னோர்களின் அருமையான வாழ்வியல் சிந்தனைகளில் விளைந்த ஒன்று.

 

மனித இனம் மற்ற உயிரினங்களைப் போலவே இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்ற பிரபஞ்ச விதியின் அடிப்படையில் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உறைவிடத்தில் ஒரு முக்கியமான கட்டுமானம் தான் முற்றம்.

முற்றம் அமைத்து கட்டுவதால் ஏற்படும் உடல் நலன்கள்…

  • தீங்கு விளைவிக்கும் கிருமித் தொற்றுகளை அழிப்பதற்குத் தேவையான இயற்கையான சூரிய வெளிச்சம் போதுமான அளவில் முற்றத்தின் வழியே ஊடுருவும்.
  • பரவலான காற்றோட்டம் கிடைக்கிறது.
  • சூரியக் குளியல் எடுக்க விரும்புவோர் மாடி வசதி இல்லாத சூழலில் வீட்டு முற்றம் நல்லதொரு வாய்ப்பாக இருக்கும்.
  • வத்தல் வடகம் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை காய வைப்பதற்கான ஒரு இடமாக விளங்கியது.
  • மழைக் காலங்களில் குறிப்பிட்ட அளவு மழை நீரை வீட்டுக்குள் சேகரித்து வெப்பச் சமநிலையை கட்டுக்குள் வைக்க உதவியது.
  • பவுர்ணமி முழு நிலவின் ஒளியை அனுபவித்தபடி குடும்பத்தோடு உணவு உண்டு மகிழ்ந்து தாத்தா பாட்டியிடம் கதை கேட்டு ஒரு வளமான தலைமுறை வளர இது உதவியது. (ஆனால் இன்று தாத்தா பாட்டியின் உயிரற்ற உடல் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் வீட்டில் நடுவே உட்கார்ந்து கொண்டு பேரன்களும் பேத்திகளும் அலைபேசியை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வீட்டு முற்றத்தால் ஏற்பட்ட உளவியல் நன்மைகள்.

  • அவ்வப்பொழுது குடும்பத்தை ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாக அது விளங்கியது.
  • விண்மீன்களும் நிலவையும் பார்த்துக்கொண்டு படுத்தபடியே அவற்றுடன் உரையாடிக் கொண்டிருக்க நமக்கு நேரமும் இருந்தது.
  • முற்றத்தில் வந்தமரும் பறவைகளுக்கு தானியங்களை கொடுத்து உயிர் நேயத்தை குழந்தைகளுக்கும் போதித்தனர் நம் முன்னோர்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஒரு புதுக் கவிதை.

"என் வீட்டு முற்றத்தில் வந்தமரும் காக்கைக்கு எப்படிச் சொல்வேன் விதை நெல்லும் தீர்ந்து விட்டது என்று"…

 Source:

 https://qr.ae/pGOgQ9


Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு

மதுரை குஞ்சரத்தம்மாள்

# மதுரை # குஞ்சரத்தம்மா   ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாதுவருடப்பஞ்சம் என்ற பெயரையாவது கேள்விப்பட்டதுண்டா?1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தை ப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம். வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைகூட தோண்டி எடுத்து திண்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கை கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்து தின்று உயிர் பிழைத்துக்கிடந்த கொடிய பஞ்சமது. கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது . பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம் அம்மாவினுடையது. குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி. மதுரையில் கொடிகட்டிப் பறந்த அழகே வடிவான தாசி. பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவள். மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இரு

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை