Skip to main content

ஏன் பழைய வீடுகளில் முற்றம் அமைத்திருந்தனர்?

 

 

   

முற்றம் (COURTYARD) நம் முன்னோர்களின் அருமையான வாழ்வியல் சிந்தனைகளில் விளைந்த ஒன்று.

 

மனித இனம் மற்ற உயிரினங்களைப் போலவே இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்ற பிரபஞ்ச விதியின் அடிப்படையில் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உறைவிடத்தில் ஒரு முக்கியமான கட்டுமானம் தான் முற்றம்.

முற்றம் அமைத்து கட்டுவதால் ஏற்படும் உடல் நலன்கள்…

  • தீங்கு விளைவிக்கும் கிருமித் தொற்றுகளை அழிப்பதற்குத் தேவையான இயற்கையான சூரிய வெளிச்சம் போதுமான அளவில் முற்றத்தின் வழியே ஊடுருவும்.
  • பரவலான காற்றோட்டம் கிடைக்கிறது.
  • சூரியக் குளியல் எடுக்க விரும்புவோர் மாடி வசதி இல்லாத சூழலில் வீட்டு முற்றம் நல்லதொரு வாய்ப்பாக இருக்கும்.
  • வத்தல் வடகம் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை காய வைப்பதற்கான ஒரு இடமாக விளங்கியது.
  • மழைக் காலங்களில் குறிப்பிட்ட அளவு மழை நீரை வீட்டுக்குள் சேகரித்து வெப்பச் சமநிலையை கட்டுக்குள் வைக்க உதவியது.
  • பவுர்ணமி முழு நிலவின் ஒளியை அனுபவித்தபடி குடும்பத்தோடு உணவு உண்டு மகிழ்ந்து தாத்தா பாட்டியிடம் கதை கேட்டு ஒரு வளமான தலைமுறை வளர இது உதவியது. (ஆனால் இன்று தாத்தா பாட்டியின் உயிரற்ற உடல் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் வீட்டில் நடுவே உட்கார்ந்து கொண்டு பேரன்களும் பேத்திகளும் அலைபேசியை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வீட்டு முற்றத்தால் ஏற்பட்ட உளவியல் நன்மைகள்.

  • அவ்வப்பொழுது குடும்பத்தை ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாக அது விளங்கியது.
  • விண்மீன்களும் நிலவையும் பார்த்துக்கொண்டு படுத்தபடியே அவற்றுடன் உரையாடிக் கொண்டிருக்க நமக்கு நேரமும் இருந்தது.
  • முற்றத்தில் வந்தமரும் பறவைகளுக்கு தானியங்களை கொடுத்து உயிர் நேயத்தை குழந்தைகளுக்கும் போதித்தனர் நம் முன்னோர்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஒரு புதுக் கவிதை.

"என் வீட்டு முற்றத்தில் வந்தமரும் காக்கைக்கு எப்படிச் சொல்வேன் விதை நெல்லும் தீர்ந்து விட்டது என்று"…

 Source:

 https://qr.ae/pGOgQ9


Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...

Bajji

Conversation opened. 1 read message.        “Bajji” (Tamil) மாலை நாலு மணி வாக்கில் ஏதேனும் ஓர் ஓட்டலில் காபி குடிக்கப் போனால், முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி இருக்கா?’ – இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல ஒரு திருப்தி! மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு! அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும் என் நாக்கு ’ஏர் இந்தியா’ ஸ்டைல் மரியாதை செய்யும்! அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!). இதோடு நல்ல கும்மோணம் டிகிரி காபியும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் – கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் – ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும் பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல! பஜ்ஜி கவனத்தில் தலையாட்டிவிட்டு, பின்னர் வ...