Skip to main content

ஏன் பழைய வீடுகளில் முற்றம் அமைத்திருந்தனர்?

 

 

   

முற்றம் (COURTYARD) நம் முன்னோர்களின் அருமையான வாழ்வியல் சிந்தனைகளில் விளைந்த ஒன்று.

 

மனித இனம் மற்ற உயிரினங்களைப் போலவே இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்ற பிரபஞ்ச விதியின் அடிப்படையில் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உறைவிடத்தில் ஒரு முக்கியமான கட்டுமானம் தான் முற்றம்.

முற்றம் அமைத்து கட்டுவதால் ஏற்படும் உடல் நலன்கள்…

  • தீங்கு விளைவிக்கும் கிருமித் தொற்றுகளை அழிப்பதற்குத் தேவையான இயற்கையான சூரிய வெளிச்சம் போதுமான அளவில் முற்றத்தின் வழியே ஊடுருவும்.
  • பரவலான காற்றோட்டம் கிடைக்கிறது.
  • சூரியக் குளியல் எடுக்க விரும்புவோர் மாடி வசதி இல்லாத சூழலில் வீட்டு முற்றம் நல்லதொரு வாய்ப்பாக இருக்கும்.
  • வத்தல் வடகம் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை காய வைப்பதற்கான ஒரு இடமாக விளங்கியது.
  • மழைக் காலங்களில் குறிப்பிட்ட அளவு மழை நீரை வீட்டுக்குள் சேகரித்து வெப்பச் சமநிலையை கட்டுக்குள் வைக்க உதவியது.
  • பவுர்ணமி முழு நிலவின் ஒளியை அனுபவித்தபடி குடும்பத்தோடு உணவு உண்டு மகிழ்ந்து தாத்தா பாட்டியிடம் கதை கேட்டு ஒரு வளமான தலைமுறை வளர இது உதவியது. (ஆனால் இன்று தாத்தா பாட்டியின் உயிரற்ற உடல் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் வீட்டில் நடுவே உட்கார்ந்து கொண்டு பேரன்களும் பேத்திகளும் அலைபேசியை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வீட்டு முற்றத்தால் ஏற்பட்ட உளவியல் நன்மைகள்.

  • அவ்வப்பொழுது குடும்பத்தை ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாக அது விளங்கியது.
  • விண்மீன்களும் நிலவையும் பார்த்துக்கொண்டு படுத்தபடியே அவற்றுடன் உரையாடிக் கொண்டிருக்க நமக்கு நேரமும் இருந்தது.
  • முற்றத்தில் வந்தமரும் பறவைகளுக்கு தானியங்களை கொடுத்து உயிர் நேயத்தை குழந்தைகளுக்கும் போதித்தனர் நம் முன்னோர்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஒரு புதுக் கவிதை.

"என் வீட்டு முற்றத்தில் வந்தமரும் காக்கைக்கு எப்படிச் சொல்வேன் விதை நெல்லும் தீர்ந்து விட்டது என்று"…

 Source:

 https://qr.ae/pGOgQ9


Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Women's Day

ஆக்ஸ்ப்போர்ட்டு தமிழ் வாழும் அகராதியின் பெண்கள் தினத்திற்கான கவிதை http://ta.oxforddictionaries.com/ பெண்ணே பெண்ணே நீ யார் ??? -------------------------------------------------------- பெண்ணே நீ பிறந்த வீட்டிற்கு பேரின்பமாய் தாய்க்கு தோழியாய் , தந்தைக்கு குட்டி தேவதையாய் உடப்பிறந்தோர்க்கு உயிரோட்டமாய் உலாவரும் வண்ணநிலவல்லவா நீ !!! வாழ வந்த வீட்டிற்கு விளக்காக , தலைவனுக்கு தூணாக கருவில் சுமந்த கண்மணிக்கு உதிரத்தால் உணவூட்டி கண்ணுறக்கமின்றி கருத்தாய் கவனித்து , கலங்கரைவிளக்கமாக வாழ்வில் வழிகாட்டி இளம்பிறையை முழுமதியாக வடிவமைத்து வளர்த்த வந்த தாய் என்ற தேவதையல்லவா நீ !!! பணிக்கு போகும் பகல்நிலவுகளின் பயணத்தை சொல்லவேண்டுமா என்ன ?? அலார அரைகூவலுடன் அதிகாலை , கதிரவன் கண்காட்டும் முன் காலை காபி சிலமணித்துளிகளில் சட்டென்று சமையல் பெரியோர்களுக்கு வேண்டிய , பொறுப்புகளை செய்து கணவனை கவனித்து , கருத்தாய் கண்மணிகளை கிளப்பி பரபரப்புடன் பேருந்தைப் பிடித்து அவசரமாக ஆரம்பமாகும் அன்றாட அலுவல் கடமைகளுடன் காலைநேரம் , பணிப் பொறுப்புடன் பகல் நேரம் , சோர்வாக சாயங்க...

Thamizh Poem