Skip to main content

காமராஜரின் ஆட்சி

 

 

ஒரு காலத்தில் சட்டசபை, எம்எல்ஏ ஹாஸ்டலில் படிப்பறிவில்லாதவரக்ள் பியூனாக பணிபுரிந்து வந்தார்கள்.

"இவர்களுக்கு சட்டசபை உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்த தெரியவில்லை. வெறுமனே கும்பிட்டு, கை கட்டி வாய் பொத்தி நிற்பதோடு சரி. சட்டசபை மூத்த அலுவலர்களை பக்குவமாக வணங்கி செல்வதில்லை" … இப்படி பல குற்றசாட்டுகள்.

அப்போது தமிழ்நாட்டில் காமராஜரின் ஆட்சி. முதலமைச்சரிடம் இந்த விஷயம் போனது.

'குறைந்த பட்ச படிப்பு அரசு பணிக்கு அவசியம்தான்' என்று நினைத்தார் காமராஜர்.

'எட்டாவது வரை படித்திருந்தால் மட்டுமே பியூன் ஆக இருக்க முடியும். குறிப்பிட்ட காலம் வரை வாய்ப்பு கொடுத்து, தேறமுடியாதவர்கள் தொடர்ந்து பணியாற்ற தடைவிதித்து' ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

எம்எல்ஏ ஹாஸ்டலில் சிங்காரம் என்ற ஒரு பியூன், முதியவர் இருந்தார். நாலாவதுவரை தான் படித்திருந்தார்.

மூக்கையா தேவர் எம் எல் ஏ-விடம் போய் "இந்த வயதில் என்னால் இதற்குமேல் படிங்க முடியாது. அவ்வளவு தான் என் தகுதி.

என்னை திடீரென்று வீட்டுக்குப் போகச் சொன்னால், நான் என்ன செய்வது.. பெண் குழந்தைகள் வேறு இருக்கிறது" என்று வேதனையுடன் கூறினார்.

மூக்கையா தேவர் "பரவாயில்லை, நமது முதலமைச்சரதான் உனக்கு தெரியுமே.. யார் வேண்டுமானாலும் அணுகலாம் என்று தானே எம்எல்ஏ ஹாஸ்டலில் ஒரு போன் நம்பர் எழுதி வைத்திருக்கிறார்…

போன் செய்து உன் குறைகளை சொல். ஒரு ஐஏஎஸ் ஆபீஸர் போன் எடுப்பார், கண்டிப்பாக உன் விஷயத்தை முதலமைச்சரிடம் கூறி விடுவார்" என்று கூறினார்.

சிங்காரம் மன தைரியத்தை திரட்டி, வாளகத்தில் வைத்திருந்த பொது தொலைபேசியை எடுத்தார்..

"ஐயா நான் சிங்காரம் பேசுறேன்"

எதிர்முனையில் "சிங்காரம் என்றால்? யாரப்பா நீ" என்று பதில் கேள்வி..

" எம்எல்ஏ ஹாஸ்டலில் பியூனாக வேலை செய்கிறேனுங்க"

" என்னப்பா வேணும்"

"என்னங்கய்யா, இதுபோல படிக்காதவர்கள் எல்லாம் திடீரென வேலையை விட்டு போகச் சொன்னால் நாங்க எங்கே போறது?"

" ஏன்? எடுத்தா என்ன? அரசுக்கு அந்த அதிகாரம் இல்லையா" என்று திருப்பி கேள்வி.

சிங்காரம் விடாமல் "ஐயா நான் தெரியாமல் கேட்கிறேன், நம்ப ஐயா, முதலமைச்சரே நாலாவது, ஐந்தாவது தான் படித்திருக்கிறார். அவருக்கு பியூனாக இருக்கும் மற்றவர் மட்டும் எட்டாவது படித்து இருக்கணும் என்று சொன்னால் எப்படி சரியாகும்"

"நீ எங்கிருந்து பேசுகிறாய்"

சிங்காரம்"நான் எம்எல்ஏ ஹாஸ்டலில் இருந்து பேசுகிறேன்"

"சரி போன வை" என்று பதில்.

அடுத்த 15 நிமிடங்களில் ஒரு ஜீப் வந்தது..

"முதலமைச்சர் உன்னை கூப்பிடுகிறார்" என்று இவரை கூட்டிக் கொண்டு சென்றார்கள். இவருக்கு வெலவெலத்து விட்டது….

ஏனென்றால் போன் அட்டென்ட் செய்ததே காமராஜர்தான்!

முதலமைச்சர் காமராஜர் அறைக்கு சென்றால் அங்கே காமராஜர், சட்டசபை செயலர், தலைமை செயலர், சபாநாயகர் அனைவரும் இருந்தார்கள்.

காமராஜர் இவரை சோபாவில் உட்கார சொன்னார்

தயங்கி அமர்ந்த சிங்காரத்திடம் "போன்ல என்னப்பா சொன்ன" என்று கேட்டார்.

சிங்காரம் முகம் வெளுத்து போய், தயங்கியபடி, "அது ஒன்னுமில்ல ஐயா, இப்படி திடுதிப்பென்று வேலையில் இருந்து வீட்டுக்கு போகச் சொல்கிறார்கள், எட்டாவது படித்து இருந்தால் தான் பியூனாக முடியும் என்று சொல்கிறார்கள், அதுதான் போன் செய்தேன்" என்று கூறினார்.

காமராஜரும், "முழுசா என்ன சொன்ன சொல்லு? என்கிறார்.

இவரும் தயங்கியபடி… "அது இல்ல ஐயா… நம்ம முதலமைச்சரே நாலாவது அஞ்சாவது தான் படித்திருக்கிறார்… நாங்க மட்டும் எதுக்குயா எட்டாவது பாஸ் பண்ணனும் என்று கேட்டேன்" என்கிறார்.

வெடி சிரிப்பு சிரித்தார் காமராஜர்.

தலைமை செயலரை அழைத்து "அந்த ஜி ஓ வில் பியூன் வேலைக்கு சேருபவர்கள் எட்டாவதுக்கு மேல் படித்திருக்க வேண்டும்" என்ற வரியை "இனிமேல்" பியூன் வேலைக்கு சேருபவர்கள்" என்று மாற்றுங்கள். இப்போது இருப்பவர்கள் அப்படியே இருக்கலாம் என்று ஆணை இருக்கட்டும்" என்றார்.

சிங்காரம், தழுதழுக்க "ஐயா படிக்காதவன் என்கிறத காட்டிப்புட்டேன்.. என்னை மன்னிச்சிருங்க" என்று வழுகி தரையில் அமர்ந்தார்.

"எந்திரின்னேன் ! முதமைச்சர்ன்னா தப்பு செய்யமாட்டாரா? யார் சொன்னாலும் சரி பண்ணிக்கணும்ன்னேன்" என்று எழுந்து உள்ளே சென்று விட்டார் காமராஜர்.



Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு

மதுரை குஞ்சரத்தம்மாள்

# மதுரை # குஞ்சரத்தம்மா   ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாதுவருடப்பஞ்சம் என்ற பெயரையாவது கேள்விப்பட்டதுண்டா?1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தை ப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம். வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைகூட தோண்டி எடுத்து திண்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கை கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்து தின்று உயிர் பிழைத்துக்கிடந்த கொடிய பஞ்சமது. கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது . பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம் அம்மாவினுடையது. குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி. மதுரையில் கொடிகட்டிப் பறந்த அழகே வடிவான தாசி. பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவள். மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இரு

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை