Skip to main content

பரதேசி

/அனுபவமாக)


சிங்கம் ஒன்று பீடி பிடிச்சுட்டிருந்துச்சு

நரி சிங்கத்த பாத்து, “ஏன் பீடி குடிச்சுட்டு உடம்ப கெடுத்துகிட்டு இருக்கீங்க? எங்கூட வாங்க இயற்கை எவ்வளவு அற்புதமானதுனு காட்டுறேன்”னு சொல்லிச்சாம்

சிங்கம் சிறிது யோசித்த பின், “ஆமால்ல! நம்ம நல்லதுக்குதானே நரி சொல்லுது , தூக்கிப்போடுவோம்”னு போட்டுட்டு நரிகூட சேர்ந்து போக ஆரம்பிச்சது.

சிறிது தூரத்தில் புலி சுருட்டு பிடிச்சுட்டிருந்துச்சு

நரி புலிக்கிட்ட, “தயவு செஞ்சு அத தூக்கிப்போடுங்க, உடம்புக்கு கெட்டது பண்றத சேத்துக்காதிங்க. எங்கூட வாங்க, பறவைகளோட பாட்டு, நதியோட தாளம் எல்லாம் நான் கேக்க வைக்குறேன்”னு சொல்லிச்சு.

அது சொன்ன மாதிரியே பறவையோட பாட்டு, மயிலோட ஆட்டமெல்லாம் பாத்துட்டே நரி, சிங்கம், புலி எல்லாம் போய்ட்டிருந்தாங்க.

அப்போ யானை மது பாட்டிலை எடுத்து திறக்க பாத்துச்சு, புலியும் சிங்கமும் இத பாத்துட்டு நரிகிட்ட யானையயும் திருத்தலாம்னு சொல்லிட்டு, யானைகிட்ட மூணும் போச்சு.

நரி யானைகிட்டே, “தண்ணி அடிக்காதிங்க”னு சொல்லி முடிக்கிறதுக்குள்ளே யானை பளார்னு நரி கண்ணத்துல அறஞ்சுடுச்சு. சிங்கமும் புலியும் மெரண்டு போய் யானைய பாத்தது.

யானை கேட்டதாம், “ என்ன பாக்கறிங்க?”

புலி யானைகிட்டே,” ஏம்பா நரி நம்ம நல்லதுக்கு தானே சொல்லுது. ஏன் தேவையில்லாமே குடிச்சு, உடம்ப கெடுத்துகிட்டு”னு சொல்லிச்சாம்.

யானை பொறுமையா ஒரு டம்ளர் குடிச்சுட்டே சொல்லிச்சாம், “இந்த பரதேசி, நேத்து கஞ்சா அடிச்சுட்டு என்னை காடு மொத்தமா சுத்திக்காட்டுனான், அந்த கால்வலி போகத்தான் இப்ப குடிக்க வேண்டியதாயிருச்சு!”

நன்றி:  

செந்தில் பாபு, / தமிழ் கோரா

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Women's Day

ஆக்ஸ்ப்போர்ட்டு தமிழ் வாழும் அகராதியின் பெண்கள் தினத்திற்கான கவிதை http://ta.oxforddictionaries.com/ பெண்ணே பெண்ணே நீ யார் ??? -------------------------------------------------------- பெண்ணே நீ பிறந்த வீட்டிற்கு பேரின்பமாய் தாய்க்கு தோழியாய் , தந்தைக்கு குட்டி தேவதையாய் உடப்பிறந்தோர்க்கு உயிரோட்டமாய் உலாவரும் வண்ணநிலவல்லவா நீ !!! வாழ வந்த வீட்டிற்கு விளக்காக , தலைவனுக்கு தூணாக கருவில் சுமந்த கண்மணிக்கு உதிரத்தால் உணவூட்டி கண்ணுறக்கமின்றி கருத்தாய் கவனித்து , கலங்கரைவிளக்கமாக வாழ்வில் வழிகாட்டி இளம்பிறையை முழுமதியாக வடிவமைத்து வளர்த்த வந்த தாய் என்ற தேவதையல்லவா நீ !!! பணிக்கு போகும் பகல்நிலவுகளின் பயணத்தை சொல்லவேண்டுமா என்ன ?? அலார அரைகூவலுடன் அதிகாலை , கதிரவன் கண்காட்டும் முன் காலை காபி சிலமணித்துளிகளில் சட்டென்று சமையல் பெரியோர்களுக்கு வேண்டிய , பொறுப்புகளை செய்து கணவனை கவனித்து , கருத்தாய் கண்மணிகளை கிளப்பி பரபரப்புடன் பேருந்தைப் பிடித்து அவசரமாக ஆரம்பமாகும் அன்றாட அலுவல் கடமைகளுடன் காலைநேரம் , பணிப் பொறுப்புடன் பகல் நேரம் , சோர்வாக சாயங்க...

Thamizh Poem