Skip to main content

முல்லா… முல்லா




                       Image result for picture of mulla &donkey




முல்லா… முல்லா என்று ஒரே ஒருவர் இருந்தாராம். அவரிடம் அவர் பாசமாக வளர்த்த குதிரை ஒன்றும் இருந்ததாம். ஒருமுறை குதிரையை அழைத்துக் கொண்டு வெளியூர் புறப்பட்டாராம்.
குதிரையின் கழுத்தில் இருந்த கையிற்றை பிடித்தவாறே நடந்து சென்றாராம். சிறிது தூரம் சென்றதும் சிலர் பேசியதை கேட்க நேர்ந்தது “குதிரைய வச்சிக்கிட்டு நடந்து போறான். குதிரை மேல் ஏறி உட்கார்ந்து போனால் சீக்கிரம் போலாம். இவனை மாதிரி முட்டாளை நான் பார்த்ததேயில்லை” என்று பேசிக்கொண்டார்கள்.
“அவங்க சொல்றதும் சரி தான்” என்று யோசித்த முல்லா குதிரை மேல் ஏறி அமர்ந்து பயணத்தை தொடர்ந்தார். இன்னும் சிறிது தூரம் சென்றதும் வேறு சிலர் பேசியதை கேட்க நேர்ந்தது “பாவம்! அந்த வாயில்லா ஜீவன் மேல ஏறி உக்கார்ந்து ஜம்முனு போறான் பாரு. கொஞ்சம் கூட கருணையே இல்லாதவன்” என்று திட்டினார்கள்.
“என்னடா இது? குதிரையோடு நடந்தாலும் ஏதாவது சொல்கிறார்கள். குதிரை மேல் ஏறினாலும் ஏதாவது சொல்கிறார்கள்.” என்று யோசித்த முல்லாவிற்கு ஒரு யோசனை தோன்றியது. அப்படியே குதிரையை தூக்கி தோள் மீது வைத்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
இன்னும் சிறிது தூரம் சென்றதும், “இங்க பாருடா இந்த முட்டாளை. ஒன்னு குதிரைய இழுத்துட்டு போணும். இல்லை குதிரையை ஓட்டிட்டு போணும். இவன் என்னடான்னா குதிரையை தூக்கிட்டு போறானே” என்று கை கொட்டி சிரித்தனராம்.
          இதைத் தானே டா முல்லா முதல்லையே          பண்ணாரு?!!?!?!

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem