Skip to main content

மண்புழு




இரண்டு நிமிடம்
இதை படியுங்கள் நாம் என்று நினைத்து படியுங்கள் ப்ளீஸ்
#ஒரு மண்புழு தன் குடும்பத்தோடு தூங்கிக்கொண்டு இருந்தது,
பாதி ராத்திரியில் ஒரு கெட்ட கனவு, திடீரென கண்விழித்து காலைவரை உறங்கவேயில்லை அந்த மண்புழு
தன் இனமே மொத்தமாய் அழிந்துவிடுவது போன்ற கனவு அது....!!!
காலையில் எழுந்ததும்
ஊர் பஞ்சாயத்தை கூட்டி,
நடந்ததை சொல்லி
அக்கம்பக்கத்து ஊர்களில் இருக்கும் மண்புழுக்கள் எல்லாம்
நலமாக இருக்கின்றனவா
என பார்த்துவிட்டு வரும்படி
ஆள் அனுப்பியது......!!!
பார்த்துவிட்டு வருவதற்காக ஒரு மண்புழு பயணத்தை தொடங்கியது.
ஆற்றின் ஒரத்தில் இருந்த கிராமத்தை விட்டு மண்புழு வெளியே செல்ல செல்ல வெப்பம் தலைக்கேறியது
கண்ணுக்கெட்டிய தூரம்வரை மண்புழுக்களை காணவில்லை,
பக்கத்து கிராமத்தில் தூரத்தில் ஒரே ஒரு மண்புழு மட்டும் மண்ணை கிளறிக்கொண்டு இருந்தது,
அருகில் சென்று,எல்லோரும் எங்கு சென்றார்கள் யாரையுமே காணவில்லையே என்றது.....!!!
நான் அழைத்து செல்கிறேன் வா என்று அந்த மண்புழு ஒரு நீரில்லாத குட்டையின் கீழ் மரவேர்களுக்கு இடையே அழைத்து சென்றது
வேர்களுக்கு இடையே இருந்து
நூற்றுக்கணக்கான மண்புழுக்கள் வெளியே வந்தன,
மொத்த ஊரில் இருந்த கோடிக்கணக்கான மண்புழுக்களில் மிஞ்சியவை இவைதான் என்று காட்டியது......!!!
அந்த நூற்றுக்கணக்கான மண்புழுக்களும் கூட விவசாய நிலத்தில் வாழ்ந்தவை,
மண்ணையே உணவாக தின்பதால் அவர்கள் உணவில் மண்ணள்ளி போட்டது போல் மண்ணில் ஏதோ ரசாயனம் கலந்துவிட்டதாகவும்,
அதை சாப்பிட்ட மண்புழுக்களின் உடல் கருநீலம் அடைந்து கொத்து கொத்தாக இறந்து விட்டதாகவும்,
மீதி இருந்த கொஞ்ச நஞ்ச மண்புழுக்களும் பாதுகாப்பான இடம் தேடி குட்டைக்கு அடியில் உள்ள வேர்களுக்கு இடையே வந்து பதுங்கிக்கொண்டதாகவும் கூறின....!!!
பக்கத்து ஊரில் இருந்து பார்க்க வந்திருப்பதாக கூறி எல்லோரையும் வெளியே அழைக்க, எல்லா மண்புழுக்களும் பயத்தோடு வெளியே வந்தன....!!!
பெரும்பாலான மண்புழுக்கள் கருநீலம் அடைந்து, உடல் முழுவதும் திட்டுதிட்டாய் வெடித்து, உருவம் சிதைந்து ரத்தம் வழிந்து, தோல் வறண்டு போய், வாழ்நாளை எண்ணிக்கொண்டு இருந்தன.....!!!
இனவிருத்தி முழுவதுமாக நின்றுபோய் விட்டதாகவும், தப்பிதவறி பிறந்தால் கூட
ஊனமுற்று பிறப்பதாகவும், பிறந்த சில நாட்களிலேயே இறந்துவிடுவதாகவும் கூறி அழுதன....!!!
ஊருக்குள் இந்த இடத்தை தவிர வேறு எங்கும் மண்ணில் ஈரமில்லை என்றும்,
விவசாய நிலங்கள் எல்லாம் உயிருக்கு ஆபத்தானவை என்றும்,
அக்கம்பக்கத்து ஊர்களில் கூட இதே நிலைமைதான் என்றும்,
இருக்கும் காலம் வரை
இந்த வேருக்கு அடியில் வாழ்ந்துவிட்டு போய்சேர்ந்து விடுவதாக ஓலமிட்டு அழுதன....!!!
விசாரிக்க வந்த மண்புழுவுக்கு துக்கம் தொண்டையை அடைத்துவிட்டது....!!!
இன்னும் கொஞ்சநாள் தான் நாங்க உயிரோட இருப்போம், உங்கள் ஊரில் ஈரமான இடம் இருந்தால் இந்த குழந்தையை அங்கே விட்டுவிடுங்கள் பிழைத்துக்கொள்ளட்டும் என்று
ஒரு மண்புழு குட்டியை கொடுத்து கண்ணீரோடு வழியனுப்பி வைத்தன......!!!
விட்டுபோக முடியாமல், அந்த மண்புழு கிளம்பிச்செல்ல, ''வந்த வழியே போயிடுங்க
மேற்கு பக்கம் போயிடாதீங்க, மொத்தம் விவசாய நிலம் உங்க உயிருக்கே ஆபத்தா போயிடும்'' என எச்சரித்து வழியனுப்பிவிட்டு வேர்களுக்குள் போய் பதுங்கிக்கொண்டன அத்தனை மண்புழுக்களும்.
விவசாய நிலத்தில் கால் வைக்காமல் கவனமாய் ஊர்போய் சேர்ந்தது அந்த மண்புழு.....!!!
மண்புழுவுக்கு மட்டுமல்ல இந்த மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு உயிருக்கும் மரணவாசலை திறந்துகொண்டு இருக்கிறது
நம்
மனிதவிசம்....!!!

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem