Skip to main content

அதிரசம்

Prema Sangar to கம கம சமையல் (சைவம்) அதிரசம்
பச்சரிசி - ஒரு டம்ளர்
உருண்டை வெல்லம் -. 3/4 டம்ளர்.
நெய் - சிறிது
தண்ணீர் - 1/4 டம்ளர்
ஏலக்காய் - 5
எண்ணெய் - பொரிக்க

செய்முறை;
பச்சரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊற விடவும். பின் கழுவி தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
நன்கு தண்ணீர் வடிந்து உலர்ந்ததும்,மிக்சியில் பொடித்து சலித்து எடுக்கவும்.இரண்டு மூன்று முறை அரைத்து சலித்து மாவாக்கி வைக்கவும்.
வாணலியில் தண்ணீர் விட்டு வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.பின் இறக்கி வடிகட்டி மறுபடியும் வெல்லப்பாகை கொதிக்க விடவும்!
பாகு நன்கு கொதித்து நுரைத்து வரும். சற்று நேரம் கிண்டவும்.
உருண்டைப் பாகு பதம் வந்ததும்( கரண்டியில் எடுத்து கொஞ்சம் தண்ணீரில் போட்டால் கரையாமல் உருளும்)
இரட்டைக் கம்பிப் பதம் வந்தாலும் சரி! கரண்டியில் எடுத்து ஊற்றும் பொழுது கரண்டியிலிருந்து இரண்டு கம்பிகள் நேராய் இழுத்துக் கொண்டு விழவேண்டும்.
இப்போது வாணலியை இறக்கி, பாகில் அரிசி மாவைத் தூவி, ஒரு ஸ்பூன் நெய் விட்டு அடுப்பிலேற்றி நன்கு கிளறவும்.
நெய் சிறிது விட்டு கிளறி இருப்புச் சட்டியில் ஒட்டாமல் சுருண்டு வருகையில் இறக்கி ஆற விடவும்.
ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
மூன்று நாட்கள் இருக்கட்டும்.மாவு புளித்தால்மிகவும் மெதுவாக வரும்.
நான்காம் நாள் ஒரு வாழை இலை அல்லது கண்ணாடி பேப்பரில் சிறிது நெய் தடவி, மாவை சிறு உருண்டைகளாக எடுத்து வட்டமாகத் தட்டி நடுவில் ஓட்டை போட்டு ( வடை மாதிரி)
எண்ணையைக் காய வைத்துப் போட்டு எடுக்கவும்.
எண்ணெய் புகையக் கூடாது.
அதிரசத்தின் மேல் எண்ணெயை கண்ணகப்பையால் ஊற்ற வேண்டும்.பின் மேலெழும்புகையில் திருப்பிப் போட்டு, நன்கு வெந்ததும் எடுத்து, ஒரு சட்டகப்பையில் வைத்து, கண்ணகப்பையின் பின்புறத்தால் அழுத்தி எண்ணெய் வடிய விடவும்.
பின் ஒரு கண் சட்டியில் எடுத்து வைக்கவும்!
அதிரசம் சாஃப்ட்டாகவும் சுவையாகவும் வரும்.
உடனே செய்வதாயிருந்தாலும் செய்யலாம். மாவு சேர்த்து வைத்து உடனே செய்யலாம். ஒரு நாள் கழித்து, இரண்டு நாள் என அவரவர் நேரத்திற்கேற்ப செய்யலாம்!
நல்ல மிருதுவாய் தேவை எனில் மூன்று நாட்களுக்கு முந்தியே மாவு சேர்த்து வைத்துப் பின் செய்யலாம்!

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...