Skip to main content

மனம் ஒத்துழையாவிட்டால்







ஒரு மனிதனுக்கு நீண்ட நாட்களாக தியானம் செய்ய ஆசை.ஆனால் எப்போது தியானம் செய்ய அமர்ந்தாலும் ஏதாவது இடைஞ்சல் ஏற்பட்டது.பக்கத்து வீட்டில் குழந்தைகள் கத்தும். இல்லாவிட்டால், யாராவது சண்டை போடுவார்கள், ஒரே இரைச்சலாக இருக்கும்.
வேறு ஏதாவது இடம் பார்க்க வேண்டும் வீட்டில் தியானம் செய்வது முடியாத காரியம் என்று அவன் நினைத்தான்,அதனால் கொஞ்ச தூரத்தில் சிறிய காட்டுப்பகுதி இருந்தது. அங்கு சென்று தியானம் செய்யலாம் என்று முடிவு செய்தான்.
மறுநாள் அங்குள்ள நதிக்கரையில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் அழகான பெண்ணொருத்தி ஒரு குடத்துடன் அங்கு வந்தாள்.  நதியில் நீர் நிரப்பிக் கொண்டு சென்றாள்.இவன் நினைத்தான். "இந்தப் பெண் எவ்வளவு அழகாக இருக்கிறாள்...!" உடனே தான் தியானம் செய்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.
உடனே தன்னைத் தானே கடிந்துக் கொண்டு மீண்டும் தியானம் செய்யத் தொடங்கினான்.
அடுத்த நாள் ஒரு துணியினால் கண்ணைக் கட்டிக் கொண்டு தியானம் செய்யத் தொடங்கினான். சிறிது நேரத்தில் கொலுசின் ஒலி காதில் கேட்டது. இவன் நினைத்தான். "ஓ அந்தப் பெண் வந்திருக்கிறாள்."அடுத்தநாள் கண்ணையும் காதையும் சேர்த்து கட்டிக் கொண்டு தியானத்தில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் மல்லிகையின் மணம் வந்தது.
இவன் நினைத்தான். " அந்தப் பெண் வந்திருக்கிறாள்."அடுத்தநாள் கண், காது மூக்கு அனைத்தையும் கட்டிக் கொண்டு தியானத்தில் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து இவன் நினைத்தான். "அந்தப் பெண் வந்துவிட்டு போயிருப்பாளோ...?"
நீதி: மனம் ஒத்துழையாவிட்டால் எதுவும் செய்ய முடியாது-

Thanks to Karunanithi Murugesan /kali Gounder/ FB

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem