Skip to main content

மனம் ஒத்துழையாவிட்டால்







ஒரு மனிதனுக்கு நீண்ட நாட்களாக தியானம் செய்ய ஆசை.ஆனால் எப்போது தியானம் செய்ய அமர்ந்தாலும் ஏதாவது இடைஞ்சல் ஏற்பட்டது.பக்கத்து வீட்டில் குழந்தைகள் கத்தும். இல்லாவிட்டால், யாராவது சண்டை போடுவார்கள், ஒரே இரைச்சலாக இருக்கும்.
வேறு ஏதாவது இடம் பார்க்க வேண்டும் வீட்டில் தியானம் செய்வது முடியாத காரியம் என்று அவன் நினைத்தான்,அதனால் கொஞ்ச தூரத்தில் சிறிய காட்டுப்பகுதி இருந்தது. அங்கு சென்று தியானம் செய்யலாம் என்று முடிவு செய்தான்.
மறுநாள் அங்குள்ள நதிக்கரையில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் அழகான பெண்ணொருத்தி ஒரு குடத்துடன் அங்கு வந்தாள்.  நதியில் நீர் நிரப்பிக் கொண்டு சென்றாள்.இவன் நினைத்தான். "இந்தப் பெண் எவ்வளவு அழகாக இருக்கிறாள்...!" உடனே தான் தியானம் செய்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.
உடனே தன்னைத் தானே கடிந்துக் கொண்டு மீண்டும் தியானம் செய்யத் தொடங்கினான்.
அடுத்த நாள் ஒரு துணியினால் கண்ணைக் கட்டிக் கொண்டு தியானம் செய்யத் தொடங்கினான். சிறிது நேரத்தில் கொலுசின் ஒலி காதில் கேட்டது. இவன் நினைத்தான். "ஓ அந்தப் பெண் வந்திருக்கிறாள்."அடுத்தநாள் கண்ணையும் காதையும் சேர்த்து கட்டிக் கொண்டு தியானத்தில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் மல்லிகையின் மணம் வந்தது.
இவன் நினைத்தான். " அந்தப் பெண் வந்திருக்கிறாள்."அடுத்தநாள் கண், காது மூக்கு அனைத்தையும் கட்டிக் கொண்டு தியானத்தில் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து இவன் நினைத்தான். "அந்தப் பெண் வந்துவிட்டு போயிருப்பாளோ...?"
நீதி: மனம் ஒத்துழையாவிட்டால் எதுவும் செய்ய முடியாது-

Thanks to Karunanithi Murugesan /kali Gounder/ FB

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...

Bajji

Conversation opened. 1 read message.        “Bajji” (Tamil) மாலை நாலு மணி வாக்கில் ஏதேனும் ஓர் ஓட்டலில் காபி குடிக்கப் போனால், முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி இருக்கா?’ – இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல ஒரு திருப்தி! மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு! அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும் என் நாக்கு ’ஏர் இந்தியா’ ஸ்டைல் மரியாதை செய்யும்! அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!). இதோடு நல்ல கும்மோணம் டிகிரி காபியும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் – கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் – ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும் பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல! பஜ்ஜி கவனத்தில் தலையாட்டிவிட்டு, பின்னர் வ...