Skip to main content

அரசியலும் முட்டாள்களும்




என். சொக்கன்
நேற்று ஒரு நண்பரிடம் (அலுவலகப் பிரச்னை) எதையோ பேசிக்கொண்டிருந்தபோது, நடுவில் ஒரு விஷயம் சொன்னார். அதை நினைத்து இந்த விநாடிவரை வியந்துகொண்டிருக்கிறேன்.
'எந்த சமூகத்திலும் 60% முட்டாள்கள் இருப்பார்கள். 30% சுமாரான புத்திசாலிகள் இருப்பார்கள். 10% அதிபுத்திசாலிகள் இருப்பார்கள். இந்தச் சமூகத்துக்குத் தலைவராக விரும்புகிற ஒருவர் என்ன செய்வார் தெரியுமா? அந்த 60% பேருடைய மனம் கவரும்படி பேசுவார், நடந்துகொள்வார், இதன்மூலம் அவர் எளிதில் Mass Leader ஆகிவிடலாம். மீதி 30% பேர் அவரை ஒருமாதிரி அருவருப்பாகப் பார்ப்பார்கள், ஆனால் எதிர்க்கமாட்டார்கள், 10% பேர் எதிர்ப்பார்கள். அவர்களிடம் தர்க்கம், புத்திசாலித்தனம், முன்னேற்ற சிந்தனை எல்லாம் இருக்கும். அவர்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆனால் அவர்களுடைய எதிர்ப்பு, மீதி இருக்கிற 90% பேருக்குப் புரியாது. ஆகவே, இந்தத் தலைவர்கள் எளிதில் ஜெயித்துவிடுவார்கள்.'
இதை அவர் சொன்னதும் மிக வியப்பாக, ஆனால் மிக உண்மையாகத் தோன்றியது. 'எப்படிச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டேன்.
'ஹிட்லருடைய சுயசரிதையைப் படித்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்.
'ஓ, படித்தேனே' என்றேன்.
'கதையைமட்டும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இன்னொருமுறை ஊன்றிப் படியுங்கள். அவருடைய வாழ்க்கையின் ஒரு பத்திச் சுருக்கம் இதுதான். இன்றுவரை பல நிறுவனங்களின், கட்சிகளின், அணிகளின், நாடுகளின் தலைவர்கள் அச்சடித்தாற்போல் பின்பற்றிவரும் சூத்திரமும் இதுதான்' என்றார்.

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem