Skip to main content

புதுமொழிகள்







பழமொழிகள்.....பத்துக்கு
புதுமொழிகள்.....பத்து
பழசு: பல் போனா சொல் போச்சு
புதுசு:செல் போனா சொல் போச்சு
பழசு: காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!!
புதுசு: பேலன்ஸ் இருக்கும் போதே பேசிக்கொள்..
பழசு: இளங்கன்று பயமறியாது..!!
புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது..
பழசு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..!!
புதுசு: செல்லின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்
பழசு: நாய் வாலை நிமிர்த்த முடியாது..!!
புதுசு: நெட்வொர்க்கை திருத்த முடியாது..
பழசு: குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு..!
புதுசு: கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு..
பழசு: வெட்டு ஒண்ணு... துண்டு ரெண்டு..!!
புதுசு: போனு ஒண்ணு.. சிம்மு ரெண்டு.
பழசு: ஆழம் தெரியாமல் காலை விடாதே..!!
புதுசு: 4ஜி இல்லாமல் போனை வாங்காதே..
பழசு: தேனெடுத்தவன் கையை நக்காமல் இருக்க மாட்டான்..!!
புதுசு: நெட் எடுத்தவன் பொழுதை போக்காமல் இருக்க மாட்டான்..
பழசு: பேராசை பிறந்தா பெருநஷ்டம்..!!
புதுசு: பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்..
நன்றி Sridhar Nambi












Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Women's Day

ஆக்ஸ்ப்போர்ட்டு தமிழ் வாழும் அகராதியின் பெண்கள் தினத்திற்கான கவிதை http://ta.oxforddictionaries.com/ பெண்ணே பெண்ணே நீ யார் ??? -------------------------------------------------------- பெண்ணே நீ பிறந்த வீட்டிற்கு பேரின்பமாய் தாய்க்கு தோழியாய் , தந்தைக்கு குட்டி தேவதையாய் உடப்பிறந்தோர்க்கு உயிரோட்டமாய் உலாவரும் வண்ணநிலவல்லவா நீ !!! வாழ வந்த வீட்டிற்கு விளக்காக , தலைவனுக்கு தூணாக கருவில் சுமந்த கண்மணிக்கு உதிரத்தால் உணவூட்டி கண்ணுறக்கமின்றி கருத்தாய் கவனித்து , கலங்கரைவிளக்கமாக வாழ்வில் வழிகாட்டி இளம்பிறையை முழுமதியாக வடிவமைத்து வளர்த்த வந்த தாய் என்ற தேவதையல்லவா நீ !!! பணிக்கு போகும் பகல்நிலவுகளின் பயணத்தை சொல்லவேண்டுமா என்ன ?? அலார அரைகூவலுடன் அதிகாலை , கதிரவன் கண்காட்டும் முன் காலை காபி சிலமணித்துளிகளில் சட்டென்று சமையல் பெரியோர்களுக்கு வேண்டிய , பொறுப்புகளை செய்து கணவனை கவனித்து , கருத்தாய் கண்மணிகளை கிளப்பி பரபரப்புடன் பேருந்தைப் பிடித்து அவசரமாக ஆரம்பமாகும் அன்றாட அலுவல் கடமைகளுடன் காலைநேரம் , பணிப் பொறுப்புடன் பகல் நேரம் , சோர்வாக சாயங்க...

Thamizh Poem