Skip to main content

அக்பர்





கடவுளின் தேடல்.
==============
அக்பர் ஒரு முறை வேட்டைக்காக போயிருந்த போது.. ஒரு கட்டத்தில் தன் பரிவாரங்களை பிரிந்து வெகுதூரம் தனியே வந்து விட்டார். மாலை நேரம் வந்தது.. ஜந்து வேளையும் தொழுகை செய்யும் வழக்கம் இருந்ததால் அக்பர் மண்டியிட்டுத் தொழுகையில் ஈடுபட்டார்.
மரம் வெட்டச் சென்று.. வீடு திரும்பாத கணவனைத் தேடிக்கொண்டு அந்த நேரத்தில் அங்கே வந்தாள் காட்டில் வாழ்ந்த பெண்.
தொழுகையில் இருந்த அக்பரைக் கவனிக்காமல் வந்ததால் அவர் மீது இடறி சென்றாள். ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாமல் அவள் சுதாகரித்துச் சென்று விட்டாள்.
மாமன்னனாகிய தன்மீது மோதியதும் அல்லாது மன்னிப்புகூட கேட்காமல் செல்லும் அவளைக் கண்டு அக்பர் மிகவும் கோபம் கொண்டார்.
ஆனால் தொழுகையை இடைநிறுத்த விரும்பாது தொடர்ந்தார். அந்தப்பெண் கணவனுடன் திரும்பி வந்த போது அக்பர் தன் தொழுகையை முடித்திருந்தார்.
அவர்களை கோபமாக நிறுத்தினார்.
"இந்த நாட்டின் மன்னன் என்று தெரியுமா..?தொழகையில் இருந்த என்னை இடறிவிட்டு மன்னிப்புகூடக் கேட்காமல் போகிறாயே..! என்ன திமிர்..? என்று கேட்டார் அக்பர்.
அதற்கு அந்த பெண் சற்றும் தயங்காமல்.. "என் கணவனை த் தேடிச் சென்றபோது மன்னனையே நான் காணவில்லை..! ஆனால் கடவுளை எண்ணித் தொழுகையில் இருந்த உங்களால் சாதாரண மரவெட்டியின் மனைவியை எப்படிக் கவனிக்க முடிந்தது..?" என கேட்டாள். பதில் ஏதும் இன்றி தலைகுனிந்தார் அக்பர்.
(எல்லோருமே வணங்கிறார்கள் என்று நாமும் அதையே வெறும் சடங்குகளாக செய்யும் போது அதன் நோக்கம் எதுவும் இல்லாது இப்படித்தான் பாழாய் போகும்.)

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem