Skip to main content

சில சிறப்பான பழக்கங்கள்

1. அலுவலகத்தில்

  • எந்த வேலையையும் தள்ளிப் போடுவதில்லை. முப்பது வருடங்களாக பார்த்த வேலையிலும் சரி, இந்த முப்பது நாட்களாக பார்க்கும் வேலையிலும் சரி - எதிலும் விரைவான, உறுதியான முடிவெடுப்பது.
  • நேரம் தவறுவதில்லை. வாட்சை பார்க்காமல் பொழுதை செலவளிப்பது என்றால் அலுவலகத்தில் மேலதிகாரியுடன், வீட்டில் மனைவியுடன் மட்டும்தான்.
  • மற்றபடி நேர அளவு நிர்ணயித்துதான் டீம் மீட்டிங்; தாண்டி விட்டால் ஸ்டாண்டிங் மீட்டிங்தான்.
  • மேலதிகாரியின் ரகசியங்களை காப்பது. பணியில் தவறினாலும், பணியாளர்களின் வருமானத்தில் கை வைக்காமல் தண்டிப்பது. (தண்டனை அவருக்கே, குடும்பத்திற்க்கில்லை)
  • எதிர்கால திட்டங்களை யாருடனும் பகிர்வதில்லை. முக்கியமாக பணி சார்ந்த எதிர்கால திட்டங்களை.
  • வருமானத்தில் 5% வேலை சார்ந்த படிப்பு அல்லது பயிற்சிக்கு ஒதுக்குவது. வேலையில் அடுத்த நிலைக்கு எப்பொழுதும் தயார் நிலையில் இருப்பது.
  • அலுவலகத்தில் அனைவருக்கும் உரிய மரியாதையளிப்பது. அலுவலக அரசியலை தவிர்ப்பது.

2. வீட்டில்

  • ஒரு வேலையும் இல்லாவிட்டாலும், அதிகாலை வேளையில் எழுந்து கொள்வது
  • எழுந்த இரண்டு மணி நேரத்துக்குள் உடற்பயிற்சி செய்வது. தொடர்ந்தார் போல மூன்று நாட்கள் தவற அனுமதிப்பதில்லை.
  • காலை உணவு என்றால் திடமான ஆரோக்கிய உணவு மட்டுமே. உணவகங்களில் உண்பதில்லை.
  • தினமும் ஒரு மணி நேரமாவது படிப்பது, முடிந்த அளவு வேலை சார்ந்த படிப்பு.
  • செய்ய வேண்டியவை அனைத்தும் பட்டியல் எழுதி, செய்து முடித்ததும் டிக் அடிப்பது.
  • காதல் செவ்வாய், காவிய புதன் என்று தேடிப்போய் தொலைக்காட்சியில் பார்ப்பதில்லை. ஞாயிறு ஒன்றுதான் பொழுது போக்கு ஞாயிறு.

3. பொதுவில் / வெளியில்

  • நமக்கு வேண்டாம் என்றால் தெளிவாக "நான் அதற்க்கு சரிப்பட்டு வர மாட்டேன்" என்று காயப்படுத்தாமல் சொல்லிவிடுவது.
  • நேரத்தை வீணடிக்கும் எந்த செயலியையும் அலைபேசியில் வைத்திருப்பதில்லை. முடக்க முடியாத செயலிகளின் அறிவிப்புகளையாவது முடக்கிவிடுவது.
  • தவறாமல் வருமானத்தில் 20% சேமிப்புக்கென ஒதுக்குவது.
  • தேவையில்லாத ஆன்லைன் ஷாப்பிங், டிஸ்கவுண்ட் விற்பனைகளில் நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பதில்லை.
  • யாரிடமும் எதிர்பார்ப்பு வைப்பதில்லை. முக்கியமாக நம்மிடம் உதவி பெற்றவர்களிடம்.
  • ஆர்வம் காட்டாத நண்பர்களுக்கு அறிவுரை வழங்குவதில்லை.

4. இப்போதைய புது முயற்சிகள்

  1. அலுவக வேலையை வீட்டுக்கு எடுத்துச்செல்லாமல் இருத்தல்.
  2. புகைப்படம், எழுத்து போன்ற மனம் விரும்பும் செயல்களில் ஈடுபட போதிய நேரம் ஒதுக்குதல்
  3. நச்சு நபர்களை தொடர்பு எல்லைக்கு வெளியே நிறுத்தல்.
  4. தேவையற்ற பேச்சுகளில் ஈடுபடாமல் இருத்தல்.
  5. இரவு 10 மணிக்குள் தூங்கிவிட முயற்சித்தல்.

பின்குறிப்பு

உங்கள் வேலை சூழ்நிலைக்கேற்ப அலுவலக பட்டியலையும், அலுவலக சூழ்நிலைக்கேற்ப பொதுவெளி பட்டியலையும், வீட்டுச் சூழ்நிலைக்கேற்ப (!) மொத்த பட்டியலையும் மாற்றிக்கொள்ளவும்.

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...

Bajji

Conversation opened. 1 read message.        “Bajji” (Tamil) மாலை நாலு மணி வாக்கில் ஏதேனும் ஓர் ஓட்டலில் காபி குடிக்கப் போனால், முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி இருக்கா?’ – இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல ஒரு திருப்தி! மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு! அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும் என் நாக்கு ’ஏர் இந்தியா’ ஸ்டைல் மரியாதை செய்யும்! அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!). இதோடு நல்ல கும்மோணம் டிகிரி காபியும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் – கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் – ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும் பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல! பஜ்ஜி கவனத்தில் தலையாட்டிவிட்டு, பின்னர் வ...