Skip to main content

ஜெனரேஷன் கேப்

ஜெனரேஷன் கேப்
                     ****
" மாமி... நமஸ்காரம்... நான் சோழவந்தான் வெங்கடேசன்"

" யார்..சுப்பைய்யர் புள்ளையா.. உங்கள
பாத்து எல்லாம் வருஷக்
கணக்காச்சு.. வந்துணடு் போயிண்டு இருந்தாதானே ஞாபகம் இருக்கும்" மாமி சொன்னது சுருக் என்று இருந்தது.

" எங்க மாமி வர முடியரது... கிராமத்தில் வைதீகம் இருக்கே.... மச்சினன் பொண்ணு கல்யாணம்.. அதான் வந்தேன்... ராத்திரி பாண்டியனில் கிளம்பணும்.... நாளைக்கு பீமரத சாந்தி ஒண்ணு இருக்கு"

"அப்புறம், மாமி இவங்க என்னோட பசங்க.. பெரியவன்  கணேஷ்... சின்னவன்  பாலாஜி... டேய் மாமிக்கு நமஸ்காரம் பண்ணுங்கோடா"

மாமி, " ஷேமமா இருங்கோ... எங்க இருக்கேள்... என்ன செய்யறேள்....

அவர்களும், " நாங்க அடையாறில் இருக்கோம் மாமி... டைடல் பார்க்கில் வேலை...கேண்டின்
சாப்பாடு... காஸ் அடுப்பு இருக்கு...காபி மட்டும் போட்டுக்குவோம்"

மாமி," அப்பா மாதிரி இல்லாம அடிக்கடி வாங்கோ... நானெல்லாம் உங்களுக்கு பாட்டி முறை..  பெசண்ட் நகரில் தான் இருக்கோம். மாமா ரயில்வே ரிடயர்டு.... எனக்கு அவரும் அவருக்கு நானும் தான்.
அடிக்கடி வந்து போனால்தான் சொந்த பந்தம், நம்ம மனுஷாள்
எல்லாம் தெரியும். ஒங்க அட்ரஸ், ஃபோன் நம்பர் தாங்கோ...(தந்தார்கள்)

எங்காத்து அட்ரஸ், செல் போன் நம்பர்...எழுதிக்குங்கோ... ஞாயிறு லீவு தானே... ஆத்துக்கு வாங்கோ.. வாய்க்கு ருசியா சமைச்சு போடறேன்.. ஹோட்டல் சாப்பாடு ..நாக்கு மறந்து போயிருக்கும்....
சரி...வெங்கடேசா... நான் கிளம்பறேன்.. அவர் தனியா இருப்பார்.. லேசா தலைவலி.. இல்லாட்டா
அவரும் வந்திருக்க வேண்டியது....பசங்களா
வரட்டுமா....

இரவு பாண்டியனில் அப்பாவை ஏற்றி விட்டு
வீடு திரும்பிய  கணேஷும், பாலாஜியும்

" டேய்..அப்பாவிற்கு வேற வேலை இல்லையா.. அந்த மாமி ஆத்துக்கு போ.. இந்த பாட்டி ஆத்துக்கு போ அப்படீன்னு உசிற
வாங்கினார்..அவா கிட்ட
நம்ம எத பேசறது.. எல்லாம் வயசான டிக்கெட்.. ஞாயிறு ஒரு நாள் தான் ரெஸ்ட்.. அன்னிக்கி போய் அந்த பாட்டி வரச் சொல்றா... நம்ம கஷ்டம் தெரியுமா?
இனிமே எப்பவாவது பாத்தா வேலை ரொம்ப ஜாஸ்தி அதான் வர முடியலே அப்படீனு
சொல்லிடுவோம். சரி
தூங்கற வேலைய பாப்போம்...கார்த்தால ஆபீஸ் வேற போகணும்"

              ****

                          இரண்டு
                       *****
மறுநாள் இரவு எட்டு மணி.. டீவியில் பிரதமர் உரை..." கொரோனா தொற்று காரணமாக இரவு 12.00 மணி முதல் ஊரடங்கு... எல்லா கடைகளும் அடைக்கப்படும்.. ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே வேலை பார்க்கலாம்" என் அறிவித்ததை பார்த்தனர்.

மறுநாள் காலை டிபன் சாப்பிட வந்தால் எந்த ஹோட்டலும் இல்லை. கடைகள் அடைக்கப்பட்டு இருக்க போலீஸ் கெடுபிடி.
மறுநாள் நிலைமை இன்னும் மோசம். எந்த கடை, உணவகங்களும்
இயங்கவில்லை.
இருவரும் இருந்த பிரட், வெண்ணெய், பாலை சாப்பிட்டுவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

அன்று இரவு டூ வீலர் சத்தம் கேட்டு கதவை திறந்தால் அந்தப்
பாட்டி கையில் இரண்டு பாக்ஸுடன்.

இருவரும்" பாட்டி வாங்கோ" என அழைக்க
அவளும், " டேய் பசங்களா.. இது நிறைய புளிக்காச்சல், வடாம், பருப்புப்பொடி, அப்பளம்
எல்லாம் இருக்கு. நீங்க சாதம் மட்டும் குக்கரில் வடிச்சிண்டா போதும்.. தாராளமா  பத்து நாளைக்கு வரும்.. மாமாதான் பாவம் குழந்தைகள் சாப்பாட்டுக்கு கஷ்டப் படுவான்னு சொல்லி  இத குடுக்கலாம்னுட்டு
வண்டியில் சந்து பொந்து வழியா வந்துருக்கோம்.. சீக்கிரம் போகணும்.. ஜாக்கிரதையா இருங்கோ.. பத்து நாள் கழிச்சு வரோம்...'

மாமா அவர்களை நோக்கி கையை ஆட்ட வண்டி கிளம்பிவிட்டது.
இருவர் முகத்திலும் ஈயாடவில்லை. இப்படி ஒரு பாசத்தை இதுவரை கண்டதே இல்லை.

கணேஷ், " பாலாஜி.. இதுதான் உண்மையான சொந்தம்டா... நம்ம கேட்காமலேயே உதவி செய்யுறா பாரு..பெரியவா பெரியவாதான்... நாம் தான் சொந்த பந்தத்தை புரிந்து கொள்ளவில்லை. நமக்கு
தெரிஞ்சது நம்ம ஃப்ரண்ட்ஸ் மட்டுமே.. ஆனால் எல்லோரும் சமயத்தில் உதவ முடியாது. அவர்கள் சூழ் நிலை அப்படி. ஆனால் நம்ம பெரியவா ஈகோ மற்றும் எதையும் பாராட்டுவது கிடையாது. அவாளுக்கு குழந்தைகள் கஷ்டப் படக்கூடாது. இல்லாவிட்டால் எவ்ளோ ரிஸ்க் எடுத்து இந்த வயதில், ராத்திரி வேளையில் வந்திருக்கா... எப்பாடு பட்டாவது நாளைக்கு அவா ஆத்துக்கு போய் தாங்ஸ் சொன்னால்தான்  மனசுக்கு நிம்மதியாக இருக்கும்."

அதற்குள் செல் போன் அடிக்கவே எடுத்துப் பார்த்தால் அந்த பாட்டி.

" டேய் கொழந்தேளா
நாங்க ஜாக்கிரதையா வந்துட்டோம். அந்த பாக்ஸில் இருப்பதை
காத்தாட  வைங்கோ
அப்போது தான் நன்னா இருக்கும்.. சரியா'

இருவரும், " பாட்டி எங்கள மன்னிச்சிடுங்கோ..
சொந்தத்தின் அருமை இப்போதுதான் எங்களுக்கு புரியறது இனிமே அடிக்கடி உங்காத்துக்கு வரோம். எல்லா ஞாயிறும் அங்கதான் சாப்பாடு.

மாமி, " போங்கடா அசடுகளா.. கோழி மிதிச்சா  குஞ்சுக்கு வலிக்காதுடா.. நீங்கள்
எல்லாம்  இந்த ஜெனரேஷன்.. அதான் புரியல... இப்போதாவது புரிஞ்சது பற்றி ரொம்ப சந்தோஷம். எதுவாக இருந்தாலும் கூச்சம் இல்லாமல் கேளுங்கோ
ஆத்துக்கு வந்தால் மாஸ்க் போட்டுண்டு வாங்கோ.. ஜாக்கிரதையா இருங்கோ.. சரி ஃபோனை வச்சுடறேன்"

கொரோனாவால் ஏகப்பட்ட இழப்புகள்...
ஆனால் அதன் மூலமாக சொந்த பந்தங்களின்
அருமை
அதற்கான பரிகாரம் என எண்ணலாமோ?

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...

Bajji

Conversation opened. 1 read message.        “Bajji” (Tamil) மாலை நாலு மணி வாக்கில் ஏதேனும் ஓர் ஓட்டலில் காபி குடிக்கப் போனால், முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி இருக்கா?’ – இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல ஒரு திருப்தி! மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு! அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும் என் நாக்கு ’ஏர் இந்தியா’ ஸ்டைல் மரியாதை செய்யும்! அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!). இதோடு நல்ல கும்மோணம் டிகிரி காபியும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் – கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் – ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும் பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல! பஜ்ஜி கவனத்தில் தலையாட்டிவிட்டு, பின்னர் வ...