Skip to main content

பனை மரம்

https://www.seekandfind.in/panai-maram-payangal/

பனை மரம்

பனையே முது பெரும் பனையே
உன்னை நீர் ஊற்றி வளர்க்கவில்லை
நிலத்திற்கு பசளை இட்டதில்லை
நிரை நிரையாய் வளர்வதற்கு
உன் விதையை ஊன்றி விட்டனர் மக்கள்
அதுவும் தங்கள் வயலின்
எல்லையைக் காப்பதற்கு
மக்கள் எதிலும் சுயநலம்

ஆனால் சுயநலமே இல்லாத
பனைமரம் நீ உன்னால்
நாங்கள் அடையும் பயன்
எண்ணற்றவை பனை என்றால்
பனை காடு என்றால் இழிவாகவும்
எளிமையாகவும் நினைப்பதுண்டு
ஏன்/ எல்லாம் உன்னிடம் இருந்தும்
உன்னிடம் கிளைகள் இல்லையே
உன்னிழலில் தங்க இடம் இல்லையே ,

நெடு நெடுவென்று வளர்ந்து
உச்சியிலே ஒரு முடியைப் போல்
அழகான குருத்தோலை காவோலை
குண்டு குண்டு பழங்கள் எல்லாமே
அத்தனையும் மக்கள் தேவைக்கு
ஏற்றாப் போல் தலையாலே சுமக்கின்றாய்

அண்ணார்ந்து பார்த்தால் ஆச்சரியம்தான்
எவ்வளவு உயரம் கன்னங் கரேலென்று
எதற்கும் அச்சமின்றி வளர்ந்து நிற்கின்றாய்
உன்னால் மக்கள் அடையும் பயன்கள் நிறைய
கற்பகம் எனும் அழகிய பெயர்
உனக்கு மிகவும் பொருத்தமே
எத்தனை புயல் அடித்தும் பனை வீழ்ந்ததாக
சரித்திரமே இல்லை

அத்துணை உறுதி உன்னிடம்
நீ நிலைத்தாலும் ஆயிரம் பொன்
உன்னை வெட்டி வீழ்த்தினாலும் ஆயிரமே



பனை மரத்திற்கோர் பாவோலை
பனிமலர் சூட்டிய பாமாலை !
---பனையில் ஓர் ஆராய்ச்சியே நடத்தி இருக்கிறீர்கள் .

ஏன்/ எல்லாம் உன்னிடம் இருந்தும்
உன்னிடம் கிளைகள் இல்லையே
உன்னிழலில் தங்க இடம் இல்லையே ,
----ஆம் உண்மை
ஒற்றைப் பனை மரமே உதிவியில்லா நெடுமரமே ---பழைய கவிஞர்களும்
பனையை இழித்துதான் பாடினார்கள்
பனைமரத்தின் கீழே பால் குடித்தாலும் கள் குடித்ததாகத்தான் சொல்வார்கள் --
பனை தரும் தூய பதநியை கள்ளாக்கியது யார் செயல் ?
பனங் கம்பால் கூரை அமைக்கிறார்கள். பனை ஓலையால் கூரை வேய்கிறார்கள்.
அதில் குளிர்ச்சியாக வாழ்கிறார்கள்.
ஏன் ? கோடையில் விசிறியாக பனை ஓலைதானே பயன்படுகிறது.
தென்னங் கீற்றிலா விசிறி செய்கிறார்கள் ?
இழித்துப் பாடின இந்தப் புலவர்கள் எழுதியது இந்தப் பனை ஓலையில் தானே ?

ஆதலினால் உங்கள் இவ்வரிகள் பனைக்கு மிகவும் பொருந்தும் ---

உன்னால் மக்கள் அடையும் பயன்கள் நிறைய
கற்பகம் எனும் அழகிய பெயர்
உனக்கு மிகவும் பொருத்தமே !

வாழ்த்துக்கள்
அன்புடன்,கவின் சாரலன் பனை மரத்திற்கோர் பாவோலை
பனிமலர் சூட்டிய பாமாலை !
---பனையில் ஓர் ஆராய்ச்சியே நடத்தி இருக்கிறீர்கள் .

ஏன்/ எல்லாம் உன்னிடம் இருந்தும்
உன்னிடம் கிளைகள் இல்லையே
உன்னிழலில் தங்க இடம் இல்லையே ,
----ஆம் உண்மை
ஒற்றைப் பனை மரமே உதிவியில்லா நெடுமரமே ---பழைய கவிஞர்களும்
பனையை இழித்துதான் பாடினார்கள்
பனைமரத்தின் கீழே பால் குடித்தாலும் கள் குடித்ததாகத்தான் சொல்வார்கள் --
பனை தரும் தூய பதநியை கள்ளாக்கியது யார் செயல் ?
பனங் கம்பால் கூரை அமைக்கிறார்கள். பனை ஓலையால் கூரை வேய்கிறார்கள்.
அதில் குளிர்ச்சியாக வாழ்கிறார்கள்.
ஏன் ? கோடையில் விசிறியாக பனை ஓலைதானே பயன்படுகிறது.
தென்னங் கீற்றிலா விசிறி செய்கிறார்கள் ?
இழித்துப் பாடின இந்தப் புலவர்கள் எழுதியது இந்தப் பனை ஓலையில் தானே ?

ஆதலினால் உங்கள் இவ்வரிகள் பனைக்கு மிகவும் பொருந்தும் ---

உன்னால் மக்கள் அடையும் பயன்கள் நிறைய
கற்பகம் எனும் அழகிய பெயர்
உனக்கு மிகவும் பொருத்தமே !

வாழ்த்துக்கள்
அன்புடன்,கவின் சாரலன்


பனை மரத்திற்கோர் பாவோலை
பனிமலர் சூட்டிய பாமாலை !
---பனையில் ஓர் ஆராய்ச்சியே நடத்தி இருக்கிறீர்கள் .

ஏன்/ எல்லாம் உன்னிடம் இருந்தும்
உன்னிடம் கிளைகள் இல்லையே
உன்னிழலில் தங்க இடம் இல்லையே ,
----ஆம் உண்மை
ஒற்றைப் பனை மரமே உதிவியில்லா நெடுமரமே ---பழைய கவிஞர்களும்
பனையை இழித்துதான் பாடினார்கள்
பனைமரத்தின் கீழே பால் குடித்தாலும் கள் குடித்ததாகத்தான் சொல்வார்கள் --
பனை தரும் தூய பதநியை கள்ளாக்கியது யார் செயல் ?
பனங் கம்பால் கூரை அமைக்கிறார்கள். பனை ஓலையால் கூரை வேய்கிறார்கள்.
அதில் குளிர்ச்சியாக வாழ்கிறார்கள்.
ஏன் ? கோடையில் விசிறியாக பனை ஓலைதானே பயன்படுகிறது.
தென்னங் கீற்றிலா விசிறி செய்கிறார்கள் ?
இழித்துப் பாடின இந்தப் புலவர்கள் எழுதியது இந்தப் பனை ஓலையில் தானே ?

ஆதலினால் உங்கள் இவ்வரிகள் பனைக்கு மிகவும் பொருந்தும் ---

உன்னால் மக்கள் அடையும் பயன்கள் நிறைய
கற்பகம் எனும் அழகிய பெயர்
உனக்கு மிகவும் பொருத்தமே !

வாழ்த்துக்கள்
அன்புடன்,கவின் சாரலன்

https://eluthu.com/kavithai/289621.html




Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Thamizh Poem

வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,

+6   அய்யனார் தங்கவேலு ஆலகிராமம் October 20, 2017 இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன் நாங்களும் மாறினோம் இன்று அதையே barbecue என்று kfc , Macdonald இல ் விக்கிறான். உப்பு + கரியில் பல் தேய்த்தோம் பற்பசையை அறிமுகப் படுத்தினான் இப்போது உங்கள் toothpaste இல் salt + charcoal இருக்கா என்று கேட்கிறான். மண்பானை , மண்சட்டியில் சமைத்தோம் உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான் இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் star hotel களில் விக்கிறான் . நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம் ஜேர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான் இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் sperm ஏற்றுமதி செய்கிறான். இளநீர் , பதனீரைப் பருகினோம் coke pepsi ஐ கொண்டு வந்தான் இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான். Corporate company களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த முட்டாள் இனம் நாமாகத் தானிருப்போம். நாகரீகப் போர்வையில் நானும் இதே தவறைச் செ...