Skip to main content

போதி தர்மர்

காட்டில் கிடக்கும் மரக் கிளைகள் ஒன்றை ஊன்றுக் கோலாக பயன்படுத்த சேகரித்து சுத்தம் செய்துக் கொண்டிருக்கிறார் போதி தர்மர். அவர் கையில் அம்பு அடிபட்ட பறவை ஒன்று விழுகிறது.

‘இவளின் முன் ஜென்ம வாழ்க்கை இவளை இன்று பறவையாக மாற்றி உள்ளது. விளைவுகள் மற்றும் சூழல்களால்.. அம்பால் அட்பட்டு துன்புற நேர்ந்தது. உன்னைக் காப்பாற்றுகிறேன். அடுத்து மனித பிறவி எடுத்து வாழ்க்கையைக் கற்றுக் கொள்’ என எண்ணியவாறே பறவைக்கு முதலுதவி செய்து பறக்க விடுகிறார்.

அடிபட்ட பறவையைத் தேடி வேடன் அங்கே வருகிறான்.

“விலங்குகளையா தேடுகிறாய்!?” என போதி தர்மர் கேட்கிறார்.

“ஆமாம்” என கூறிக் கொண்டே பறவையைத் தேடிக் கொண்டே இருக்கிறான்.

“ஓர் அம்பால் எத்தனை விலங்கை தைப்பாய்!?”

“ஒன்று” என சொல்லிக் கொண்டே நிமிர்ந்து, “அதிர்ஷ்டம் இருந்தால் இரண்டு” என்று சிரிக்கிறான் வேடன்.

“இரண்டு? ஓர் அம்பில் இரண்டு!?” என்று கேட்டு விட்டு, “எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கர்ப்பமான மிருகமொன்றை அடிப்பேன்” என்கிறார் போதி தர்மர்.

“ஆகா.. அப்ப இரண்டிற்கும் மேல்” என்று குதூகலிக்கிறான் வேடன்.

“நான் ஒன்றைக் கொன்றால்.. நான் கொல்லும் அந்த ஒன்று ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றும்” என்கிறார் போதி தர்மர்.

“என்ன அது!?”

“நீ தான்.”

“நானா!?” என்று யோசித்து விட்டு, “நான் கொல்லலன்னா கூட நிறைய வேடர்கள் இங்க இருக்காங்களே!!” என்று கேட்கிறான் வேடன்.

“சுவையான உணவிற்கு பதிலாக இரத்தமும், வலியும். அவைகள் வலியை உணர்த்தாது. இரண்டும் இடம் மாறி விட்டால், யார் தன்னைத் தானே கத்தியால் வெட்டிக் கொள்வார்கள்” என கேட்டுக் கொண்டே சென்று விடுகிறார் போதி தர்மர்.

பெளத்தம் மறுபிறவியில் நம்பிக்கைக் கொண்டது. இந்தப் பிறவியில் செய்யப்படும் கர்மாக்களுக்கு அடுத்தப் பிறவியில் விளைவுகளை அனுபவிக்கிறோம். ‘இப்பிறவியில் பறவையைக் கொன்றால், அடுத்தப் பிறவியில் நீ பறவையாக பிறந்து கொல்லப்படுவாய். அதாவது உன்னை நீயே கொன்றுக் கொள்கிறாய்’ என்ற அர்த்தத்தில் வேடனிடம் போதி தர்மன் இயம்பி விட்டு செல்கிறார்.
Yangtze River

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...

Bajji

Conversation opened. 1 read message.        “Bajji” (Tamil) மாலை நாலு மணி வாக்கில் ஏதேனும் ஓர் ஓட்டலில் காபி குடிக்கப் போனால், முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி இருக்கா?’ – இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல ஒரு திருப்தி! மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு! அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும் என் நாக்கு ’ஏர் இந்தியா’ ஸ்டைல் மரியாதை செய்யும்! அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!). இதோடு நல்ல கும்மோணம் டிகிரி காபியும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் – கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் – ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும் பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல! பஜ்ஜி கவனத்தில் தலையாட்டிவிட்டு, பின்னர் வ...