Skip to main content

எட்டு வடிவ வர்ம நடைபாதை!






 Image may contain: plant and outdoor          
எட்டு வடிவ வர்ம நடைபாதை!
‘வர்ம மருத்துவம்’ என்பது சித்த மருத்துவத்தின் முக்கிய அங்கம். சித்த மருத்துவக் கட்டமைப்புகளுள் ஒன்றான வர்ம மருத்துவத்தின் அடிப்படையில், இந்த வர்ம நடைபாதை செயல்படுகிறது. வர்மம் என்றதும் ’இந்தியன் தாத்தா’ அடித்து வீழ்த்தும் ’படு வர்ம’ செயல்பாடுகளை நினைத்து அச்சப்பட வேண்டாம்.
நடப்பதுதான் மனிதனின் இயல்பு. அதற்கேற்பவே அவனது உடல் படைக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று நிகழ்ந்துள்ள வாழ்க்கை முறை மாற்றம், நடையைத் தேவையற்றதாக்கிவிட்டது. நடக்கும் தூரத்தில் இருக்கும் கடைக்குக்கூட, வாகனங்களில் ஏறிப் பயணிக்கும் அளவுக்குச் சோம்பேறிகளாகிவிட்டோம்.
இதன் காரணமாகப் பல்வேறு நோய்கள் நம் உடலின் கதவை தட்டத் தொடங்கிவிட்டன. நோய்களிலிருந்து தப்ப, கட்டாயம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சியில், புதுவிதமாக எட்டு வடிவ வர்ம நடைபாதையை முயன்று பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். எட்டு வடிவ வர்ம நடைபாதை என்றால் என்ன?
எப்படி அமைப்பது?
எட்டு வடிவத்தில் பாதை அமைத்து, அதில் கூழாங்கற்களைப் பதித்து, அதில் நடைப்பயிற்சி செய்வதே எட்டு வடிவ நடைபாதை. எட்டு முதல் 10 அடி நீளத்தில் வடக்கு தெற்கு முகமாக எட்டு வடிவத்தில் பாதை அமைத்துக்கொள்ள வேண்டும். அகலம் ஆறு அடியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். அதன்பிறகு, மிதமான வேகத்தில் நடைப்பயிற்சி செய்யலாம்.
எட்டு வடிவ வர்ம நடைமேடை அமைக்க, சில ஆயிரங்கள் செலவு செய்தால், பல லட்சங்கள் செலவுவைக்கும் நோய்களிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ள முடியும். பொருட்செல்வத்தைவிட, பல நோய்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம். வீட்டின் மொட்டைமாடி, தோட்டப் பகுதி, முன்புறம் போன்ற இடங்களில் இந்த எட்டு வடிவ வர்ம நடைபாதையை அமைக்கலாம். இல்லையென்றால், சில குடும்பங்கள் ஒன்றிணைந்து பொது இடத்தில் இந்த நடைபாதையை அமைக்கலாம். இந்த நடைப்பயிற்சி, இயற்கையுடன் நமது உடலை நெருக்கமாக்கும். இந்த எட்டு, உடலை வருத்தும் நோய்களின் தாக்கத்துக்கு வைக்கும் ஒரு குட்டு.
பலன்கள் என்னென்ன?
காலணிகள் இல்லாமல், பாதங்களை இயற்கையின் அதிசயமான கூழாங்கற்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும்படி நடக்க வேண்டும். 10 நிமிடம் வலச்சுழி நடை, பத்து நிமிடம் இடச்சுழி நடை, நோய்களுக்கு நிரந்தர விடைதரும். தொடர்ந்து இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும்போது, உடல் எடையைக் குறைத்து ஆரோக்கிய வாழ்வை மீட்டெடுக்க முடியும். செரிமான உறுப்புகளின் திறன் கூடும்; சர்க்கரை நோய்க்கு கசப்பைக் காட்டும். அதிக ரத்தஅழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்.
உடலில் ஏற்படும் சோர்வை நீக்குவதுடன், மனத்தில் ஏற்படும் சோர்வையும் நீக்கி உற்சாகமளிக்கும். வாத நோய்களுக்கான முதன்மையான எதிரி, இந்த எட்டு வடிவ வர்ம நடைபாதை. கூழாங்கற்கள் பொருத்திய நடைபாதையில் தினமும் நடக்கும் முதியவர்களின் ரத்தஅழுத்தம் ஓரளவு குறைந்ததாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அதனை முழுமையாகப் பரிசோதித்துப் பார்க்கவேண்டியது அவசியம்.
நான் பணிபுரியும் ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவில், 8 வடிவ வர்ம நடைபாதை அமைத்துள்ளேன். இது, அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தினமும், காலையிலும் மாலையிலும் ஊர்ப் பொதுமக்கள் இந்த வர்ம நடைபாதையைப் பயன்படுத்தி, சிறப்பாக உணர்வதாகத் தெரிவிக்கிறார்கள். குதிகால் வலி, இடுப்பு வலி, அதிக ரத்தஅழுத்த நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோரை அதில் நடக்கச் சொல்லி அறிவுறுத்துகிறோம்.
அடிப்படை என்ன?
எட்டு வடிவ நடைபாதையின் அடிப்படை வர்மம்! ‘வர்ம மருத்துவம்’ என்பது சித்த மருத்துவத்தின் முக்கிய அங்கம். சித்த மருத்துவ கட்டமைப்புகளுள் ஒன்றான வர்ம மருத்துவத்தின் அடிப்படையில் இந்த வர்ம நடைபாதை செயல்படுகிறது. வர்மம் என்றதும் ’இந்தியன் தாத்தா’ அடித்து வீழ்த்தும் ’படு வர்ம’ செயல்பாடுகளை நினைத்து அச்சப்பட வேண்டாம். வர்மத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. அதில், நோய்களைக் குணமாக்கும் வர்ம ஆற்றலைத் தூண்டும் புள்ளிகளை அடிப்படையாகக்கொண்டு இந்த வர்ம நடைபாதை செயல்படுவதாகச் சொல்லலாம்.
வர்மப் புள்ளிகளை மருத்துவ முறைப்படி தூண்டுவதன் மூலம், பல்வேறு நோய்களைக் கட்டுக்குள் வைக்கலாம். பழங்கால யுத்தங்களின்போது, அடிபட்ட வீரர்களுக்கு முதலுதவி மருத்துவமாக வர்மம் இருந்தது குறிப்பிடத்தக்கது. நமது உடலின் பல்வேறு பகுதிகளில் `வர்மம்’ எனப்படும் ஆற்றல் புள்ளிகள் குவிந்துகிடக்கின்றன. அந்த வகையில், நமது உள்ளங்காலில் எண்ணற்ற வர்மப் புள்ளிகள் இருக்கின்றன. எட்டு வடிவ நடைபாதையில் உள்ள கூழாங்கற்களின்மீது நடப்பதன் மூலம், உள்ளங்காலில் உள்ள வர்ம ஆற்றல் புள்ளிகள் தூண்டப்படும்.
பொதுமக்களிடையே ‘பெபிள் ஸ்டோன் வாக்கிங்’ எனப்படும் இந்த வர்ம நடைபாதை இப்போது பிரபலமடையத் தொடங்கியிருக்கிறது. ‘அக்குபிரஷர்’, `ரிஃப்ளெக்சாலஜி’ எனப் பல வகைகளில் இம்முறைக்கு நாமகரணம் சூட்டினாலும், நமது பாரம்பர்ய சித்த மருத்துவத்தின் உட்பிரிவான வர்மத்தை முன்னிலைப்படுத்தி, இதை ‘வர்ம நடைபாதை’ என்று அழைப்பதே சிறப்பு! வர்மம், சித்த மருத்துவத்தின் அறிவியலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!
8 வடிவத்தின் நீளத்தை ஆறு அடிக்கும் கீழே சுருக்குவதால் அமையப்பெற்றுள்ள சிறிய வட்டப்பாதையில் நடக்கும்போது சிலருக்கு தலைச்சுற்றல் ஏற்படலாம். புதிதாக நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், கொஞ்சம் கவனமாகச் செய்ய வேண்டும். அளவைச் சுருக்காமல் 10 அடிக்கும் குறையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த வட்ட வடிவ நடைபாதையின் திசைகள், காந்த அலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் மித வேகத்தில் நடப்பதே சிறப்பு. வேகமாக நடக்கக்கூடாது. எட்டு, அபசகுனமான எண் அல்ல என்பதற்கு, இந்த எட்டு

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...