Skip to main content

கோடை விடுமுறை டிப்ஸ்









போர் அடிக்குது என்று சொல்லும் குழந்தைகளை எப்படி சமாளிக்கலாம் – கோடை விடுமுறை டிப்ஸ்
கோடை விடுமுறையில் மீண்டும் இந்தி, ஸ்போக்கன் இங்கிலீஷ், அபாகஸ், கையெழுத்து, கணிதம், கம்ப்யூட்டர் என பல பயிற்சி வகுப்புகளுக்கு குழந்தைகளை அனுப்புவதால், அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், மூளைப் பகுதியில் உள்ள ஹிப்போ கேம்பஸ் பகுதியில் காணப்படும் நரம்பு செல்கள் அழிந்து, நினைவாற்றல், கற்றல் திறன்களை பாதிக்கின்றன. மாறாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிகளைப் பின்பற்றுங்கள்:
அவர்களிடம் அதிகமாகப் பேசுங்கள், இதனால் அவர்கள் நண்பர்கள் சொல்வதைக் கேட்பதை விட நீங்கள் சொல்வதை நம்புவார்கள்.
கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு, ஜூ, பறவைகளுக்கு உணவளிக்க, மீன்களுக்கு உணவளிக்க, குழந்தைகள் காப்பகம், மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவு, முதியோர் இல்லம், அரசாங்க அலுவலகங்கள் என வித்தியாசமான இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
சிறிய தோட்டம் போட்டு, பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வையுங்கள். பறவைகளின் வாழ்க்கையை அமைதியாக நோட்டமிட வையுங்கள்.
அன்பு, கருணை, பிரியம் போன்றவற்றை பணத்தால் வாங்க முடியாது அதைக் கொடுத்தால் தான் நமக்கு அவை திரும்பக் கிடைக்கும் என்பதைப் புரிய வையுங்கள்.
கம்ப்யூட்டர் மற்றும் தொலைக் காட்சி முன்பு இருப்பதை விட நண்பர்களுடன் இணைந்து விளையாடுவதை ஊக்குவியுங்கள்.
வீட்டில் சிறிய பொறுப்புகளைக் கொடுத்து முடிக்கச் செய்யுங்கள்.
எளிதான ஆரோக்கியமான சமையல் செய்ய சொல்லிக் கொடுங்கள்.
உறவினர் வீட்டிற்கு செல்லும் போது, அவர்கள் கையால் செய்த சிறிய பரிசை கொடுக்கச் சொல்லுங்கள்.
உடற்பயிற்சியை அவர்களுடன் இணைந்து செய்து கொண்டாடுங்கள்.
சிறிது பணத்தைக் கொடுத்து, மினி பட்ஜெட் போட்டு செலவளிக்கவும், சேமிக்கவும் கற்றுக் கொடுங்கள்.
கூட்டாக விளையாடும் விளையாட்டு பயிற்சிக்கு அனுப்பி, கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தைப் புரிய வையுங்கள்.
புத்தகம் வாசிக்கப் பழக்குங்கள்.
சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், வளமாவும் வைத்துக் கொள்ள நண்பர்களுடன் இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்.




Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...

Bajji

Conversation opened. 1 read message.        “Bajji” (Tamil) மாலை நாலு மணி வாக்கில் ஏதேனும் ஓர் ஓட்டலில் காபி குடிக்கப் போனால், முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி இருக்கா?’ – இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல ஒரு திருப்தி! மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு! அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும் என் நாக்கு ’ஏர் இந்தியா’ ஸ்டைல் மரியாதை செய்யும்! அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!). இதோடு நல்ல கும்மோணம் டிகிரி காபியும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் – கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் – ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும் பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல! பஜ்ஜி கவனத்தில் தலையாட்டிவிட்டு, பின்னர் வ...