Skip to main content

A christian story.







ஒருநாள் கன்னிமேரி குழந்தை ஏசுவை அழைத்துக் கொண்டு பூலோகம் வருகிறாள். ஒரு மடாலத்திற்கு செல்லுகிறாள். மாதாவைக் கண்டவுடன் அவளுக்கு மரியாதை செலுத்த அங்குள்ள துறவிகள் ஒரு நீண்ட வரிசையில் வருகிறார்கள். மாதாவின் மனதைக் கவர ஒவ்வொருவரும் தங்கள் அறிவுத்திறனை காட்டுகிறார்கள். ஒருவர் ஒரு அருமையான கவிதையை வாசிக்கிறார்; இன்னொருவர் பைபிள் கதை நிகழ்ச்சிகளைக் கொண்டு தானே வரைந்த சித்திரங்களைக் காட்டுகிறார்; இன்னொரு துறவி புனிதர் ஆக்கப்பட்ட எல்லாருடைய பெயர்களையும் சொல்லிக் காட்டுகிறார். கடைசியாக ஒரு எளிய மனிதர் வருகிறார். அவர் எந்தப் புத்தகத்தையும் படித்ததில்லை. அவரது பெற்றோர்கள் ஊர் விட்டு ஊர் செல்லும் ஓர் சர்க்கஸ்- இல் வேலை செய்பவர்கள். அவர்களிடமிருந்து இவர் கற்றதெல்லாம் ஒரே ஒரு வித்தைதான். பந்துகளை வீசி எறிந்து அவை கீழே விழாமல் மாற்றி மாற்றி கையால் தட்டுவதுதான்.



எல்லோருக்கும் ஒரு வித பதற்றம் தொற்றிக் கொள்ளுகிறது. இவன் ஏதாவது ஏடாகூடமாகச் செய்யத் தெரியாமல் செய்து நமது மடாலயத்தின் கௌரவத்தை குறைத்துவிட்டால் என்ன செய்வது? எல்லோரும் தன்னை ஒருவித அதிருப்தியுடன் பார்ப்பதை கவனித்துக்கொண்டே அந்தத் துறவி தனது பையிலிருந்து சில ஆரஞ்சுப் பழங்களை எடுத்து அவற்றை மேலே எறிந்து அவை கீழே விழாமல் தனது கைகளால் மாற்றி மாற்றி தட்ட ஆரம்பித்தார்.



மேரி மாதாவின் மடியில் உட்கார்ந்திருந்த குழந்தை ஏசு இவர் செய்வதைப் பார்த்து புன்னகையுடன் தன் கைகளைத் தட்ட ஆரம்பித்தார். அதைப்பார்த்த கன்னிமேரி அவரைக் கூப்பிட்டு, ‘குழந்தையை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி அவரிடம் கொடுத்தாள்.

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem