Skip to main content

பஞ்சபாண்டவர்கள்

#பஞ்சபாண்டவர்கள் மற்றும் #பாஞ்சாலியின் #உயிர்பிரிதல்:-

#வேடன் ஒருவன் ஹஸ்தினாபுரத்தில் வந்து கிருஷ்ணன் இறக்கும் தருவாயில் இருக்கிறார். பஞ்ச பாண்டவர்களான தங்களைக் காண விழைகிறார் என்றான்
#தர்மர் பணி நிமித்தமாக இருந்ததால் கிருஷ்ணனைக் காண செல்ல மாட்டார். கிருஷ்ணனைக் கண்டால் தொட்டுப் பேச வேண்டாம் என தம்பிகளிடம் தர்மர் சொல்லி அனுப்புவார். கிருஷ்ணனைக் கண்ட பார்த்தன் கண்ணீரை அருவி போலக் கொட்டிக் கதறி அழுதான்.

#அனைத்துமாய் உள்ள பரமாத்மாவான உனக்கே இந்தக் கதியா பரந்தாமா என்றான் அர்ஜீனன். என்னைக் கை தூக்கி உட்கார வையுங்கள் குந்தியின் புதல்வர்களே என்றார் மாயக் கள்வன் கிருஷ்ணன். அண்ணன் சொன்னது நினைவுக்கு வரவே யாரும் அவரைத் தீண்டவில்லை. எழுந்து உட்கார வேண்டும் என்பதற்காக அவரவர் ஆயுதங்களை நீட்டினர். அதைப் பிடித்து அதன் வழியாக அனைவரிடமும் இருந்த சக்திகளையும் பெற்று விட்டு உயிரைப் பிரித்துக் கொள்கிறார்.

#சக்தி அனைத்தும் பறிபோனதால், பராக்கிரமசாலியாக இருந்த அவர்கள் காட்டில் இருக்கும் சிங்கம் புலி மிருகங்களைக் கண்டு அஞ்சுகின்றனர். ஹஸ்தினாபுரம் வந்து நடந்ததை எல்லாம் தர்மரிடம் சொல்கின்றனர். அவர் இவர்கள் அனைத்து சக்தியையும் இழந்ததை அறிந்து கொள்கிறார். எனது ஆட்சி போதும் நான் கானகம் செல்ல விழைகிறேன். அதனால் அனைவரும் பரீட்சித்துக்குத் துணை இருங்கள் எனக் கூறிப் புறப்படுகிறார். நாங்களும் வருகிறோம் என பாஞ்சாலியோடு ஐவரும் புறப்படுகின்றனர்.

#பரீட்சித்துக்கு முடிசூட்டி விட்டு கால் போன போக்கில் நடந்து செல்கின்றனர். அப்போது அவர்களுடன் ஒரு சீழ் பிடித்து புழு வைத்த ஒரு நாயும் செல்கிறது. இவர்கள் உயிர் துறக்கும் நேரமும் நெருங்கியது. கிருஷ்ணணே சென்ற பிறகு நமக்கென்ன இங்கு வேலை என போய்க் கொண்டிருந்தனர். அப்போது முதலில் உயிர் பிரிந்து விழுந்தாள் திரௌபதி.

#அண்ணா திரௌபதி இறந்துவிட்டாள். கற்புக்கரசியாய் இருந்து, உலகிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய, குல விளக்கு அணைந்துவிட்டதே! ஏன் எனக் கேட்டனர். ஐவரை மணந்து பத்தினியாக இருந்தாலும், அர்ஜீனன் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தாள். அதனால் அவள் இறந்துவிட்டாள் என்றார் தர்மர். தர்மர் நிற்காமல் நடந்து கொண்டே இருந்தார். மற்றவர்கள் திரௌபதியை அடக்கம் செய்துவிட்டு நடக்க ஆரம்பித்தனர்.

#அடுத்து சகாதேவன் இறந்தான். பீமன் அவன் இறந்த காரணத்தைக் கேட்டான். தன்னை ஜோதிட சாஸ்திரத்தில் மிஞ்ச யாரும் இல்லை, கலியுகத்தைக் கட்டி வைக்கும் திறமையே நம்மிடம் இருக்கிறது எனக் கர்வம் கொண்டான். அதனால் இறந்தான் எனக் கூறினார் தர்மர். அடுத்ததாக நகுலன் இறந்தான். நகுலன் இறந்ததற்கான காரணம் கேட்டான் பீமன். அழகில் தான் மட்டுமே சிறந்தவன், அனைவரையும் வசீகரிக்கும் முகம் நம்முடையது மட்டுமே எனக் கர்வம் கொண்டான். அதனால் இறந்தான் என்றார் தர்மர்.

#அடுத்ததாக அர்ஜீனன் இறந்தான். தர்மரிடம் காரணம் கேட்டான் பீமன். வில் வித்தையில் தான் மட்டுமே சிறந்தவன் என்ற கர்வம் கொண்டான் அதனால் இறந்தான் என்றார். அண்ணா எப்படியும் அடுத்து நான் மாண்டு போவேன், அதற்கான காரணத்தைச் சொல்லுங்கள் என்றான். பீமா நீ தனக்குப் போலவே, மற்றவர்களுக்கும் பசிக்கும் என்றெண்ணி ரிஷிமுனிவர்களை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தித் தண்டனை கொடுத்தாய். அதனால் நீ இறந்து விடுவாய் என்றார் தர்மர். அது காதில் விழுந்ததோ இல்லையோ பீமனும் இறந்து போனான்.

#தர்மரோடு அந்த சீழ் பிடித்த நாய் மட்டும் வந்து கொண்டே இருந்தது அமைதியாக. ஒரு ஆற்றைக் கடந்து மறுபுறம் செல்ல வேண்டும். ஆனால் ஆற்றிலோ தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. நம்மை நம்பி வந்த நாயை ஏமாற்றக் கூடாது என்றெண்ணி அதைத் தூக்கி தலை மேல் வைத்துக் கொண்டு ஆற்றைக் கடந்தார். அதிலிருந்து சீழ்் வடிந்து கொண்டிருந்தது. நாயின் உடம்பிலிருந்த புழுவெல்லாம் தர்மர் மேனியில் விழுந்தது. அதெல்லாம் பார்க்காது அதைத் தூக்கிக் கொண்டு நடந்தார்.

#ஆற்றைக் கடந்ததும் இறக்கி விட்டார். தொடர்ந்து நடக்கத் தொடங்கினார். அப்போது விண்ணுலகில் இருந்து ஒரு ரதம் வந்திறங்கியது. அதில் இருந்த தேவர்களில் ஒருவர் தர்மா உனக்காக ரதம் காத்துக் கொண்டிருக்கிறது என்றார். என்னுடன் இந்த நாயையும் சொர்க்கத்திற்கு வரட்டும் என்றார். ஆனால் தேவரோ நாய்க்கெல்லாம் சொர்க்கம் கிடையாது. நீ மட்டும் வந்து ஏறு என்றார். என்னை நம்பி வந்த நாய்க்கே சொர்க்கம் இல்லை என்றால், எனக்கு அந்த சொர்க்கம் தேவையில்லை என்றான் தர்மன்.

#உடனே அந்த நாய் உருமாறி கலகலவெனச் சிரித்தது. நான் தான் தர்ம தேவதை. நீ மட்டும் ரதத்தில் ஏறி இருந்தால் நீயும் மாண்டு போயிருப்பாய். என்னை நம்பி வந்த நாய்க்கே சொர்க்கம் இல்லை என்றால், எனக்கும் அந்த சொர்க்கம் தேவையில்லை என்று சொன்ன காரணத்தால் நீ பூத உடலோடே சொர்க்கம் போவாய் என்றது தர்ம தேவதை. தர்மர் பூத உடலுடன் சொர்க்கம் போனான்.

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...

Bajji

Conversation opened. 1 read message.        “Bajji” (Tamil) மாலை நாலு மணி வாக்கில் ஏதேனும் ஓர் ஓட்டலில் காபி குடிக்கப் போனால், முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி இருக்கா?’ – இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல ஒரு திருப்தி! மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு! அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும் என் நாக்கு ’ஏர் இந்தியா’ ஸ்டைல் மரியாதை செய்யும்! அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!). இதோடு நல்ல கும்மோணம் டிகிரி காபியும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் – கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் – ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும் பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல! பஜ்ஜி கவனத்தில் தலையாட்டிவிட்டு, பின்னர் வ...