Skip to main content

மலர் விற்ற காசு மணக்குமா?

 

ஒரு அக்பர் பீர்பால் கதை உள்ளது.

ஒரு எண்ணை வியாபாரி, எண்ணை விற்பதற்காக ஒரு கசாப்பு கடைக்காரன் கடைக்கு செல்வான். அங்கு அவனது பணப்பையை கசாப்பு கடைக்காரன் எடுத்து விட்டதாக, புகார் கூறுவான். கசாப்பு கடைக்காரனோ, எண்ணை வியாபாரி தனது பணப்பையை திருடியதாக புகார் கூறுவான்.

இந்த வழக்கு அக்பர் அவைக்கு வரவே, பீர்பால் இந்த வழக்கில், ஒரு சாட்சி உள்ளதாக கூறுவார். அக்பர் எவ்வாறு என்று வினவ, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் பணப்பையின் நாணயங்களை கொட்டுவார். காசுகளில் எண்ணை இருந்த்தால், அந்த தண்ணீரில் எண்ணை மிதக்கும். அப்போது, அந்த பணப்பை, எண்ணை வியாபாரியின் பணப்பை என்று கூறி, தீர்ப்பு வழங்குவார்.

எண்ணை விற்ற காசு ஆகையால், அதில் எண்ணைக் கறை இருந்தது.

 

அதனைப் போலவே, ஒரு மலர் வியாபாரி, மலர்களை அளந்து விற்று, காசுகளை வாங்கும் போது, அந்தக் காசு மணக்க வாய்ப்புள்ளது. ஆனால், மலர்களை விற்பது ஒரு இடம். கல்லா இன்னொரு இடமாக இருந்தால், இவ்வாறு காசு மணக்காமல் இருக்கலாம் ;-)

காசு மணந்தாலும், மணக்காவிட்டாலும், மதிப்பு மாறாது. நமது கவலையெல்லாம், அதன் மதிப்புதான்.

 https://qr.ae/pGPIvp

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Thamizh Poem

வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,

+6   அய்யனார் தங்கவேலு ஆலகிராமம் October 20, 2017 இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன் நாங்களும் மாறினோம் இன்று அதையே barbecue என்று kfc , Macdonald இல ் விக்கிறான். உப்பு + கரியில் பல் தேய்த்தோம் பற்பசையை அறிமுகப் படுத்தினான் இப்போது உங்கள் toothpaste இல் salt + charcoal இருக்கா என்று கேட்கிறான். மண்பானை , மண்சட்டியில் சமைத்தோம் உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான் இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் star hotel களில் விக்கிறான் . நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம் ஜேர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான் இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் sperm ஏற்றுமதி செய்கிறான். இளநீர் , பதனீரைப் பருகினோம் coke pepsi ஐ கொண்டு வந்தான் இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான். Corporate company களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த முட்டாள் இனம் நாமாகத் தானிருப்போம். நாகரீகப் போர்வையில் நானும் இதே தவறைச் செ...