Skip to main content

ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா!

ஒரு பசு மாடுகள் கூட்டம். தினமும் மேய்ச்சலை முடித்துவிட்டு அமைதியாக வீட்டுக்கு திரும்பும். வழியில் ஒரு பாலம். அதன் அடியில் எந்த நேரமும் பன்றி ஒன்று சேற்றில் புரண்டு கொண்டிருக்கும். பசுக்களைப் பார்த்து அது கேளிசெய்யும். ஆனால், பசுக்கள் ஒரு முறைகூட பன்றிக்கு பதில் கூறியதே இல்லை.
பசுக்கூட்டத்தில் ஒரு கன்று இருந்தது. இளம் வயதல்லவா! பன்றியின் பேச்சு அதற்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அதற்கு தக்க பாடம் புகட்ட நினைத்தது. அதற்கான தருணத்திற்காக காத்திருந்தது.
ஒரு நாள் மாலை பசுக்கள் கூட்டமாக வீடு திரும்பிக்கொண்டிருந்தன. வழக்கம் போல் பசுக்கூட்டத்தைப் பார்த்து கேளி செய்தது பன்றி.
“தைரியமிருந்தால் ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா! என்னை ஜெயிச்சிட்டு பிறகு போங்கடா', என்று முழங்கியது பன்றி.
கன்றுக்கு கோபம் வந்தது. பசுக்கள் எவ்வளவு தடுத்தும் கேளாமல் சட்டென்று பன்றியின் மேல் பாய்ந்தது. அரை மணி நேர கடும் சண்டை. பன்றி சோர்ந்துபோனது. கன்று வென்றது. ஆனால், கன்று சண்டையிடுவதை பற்றி கவலைப்படாமல் பசுக்கள் வீடு திரும்பின.
கன்றுக்கு மகிழ்ச்சி. பன்றியை வென்றுவிட்டதல்லவா! வீரத்துடன் தன் கூட்டத்தை நோக்கி ஓடியது.
‘நண்பர்களே! பன்றி இனி நம் வம்புக்கு வராது. அதன் கொட்டத்தை அடக்கிவிட்டேன்', என்று பெருமையோடு சொல்லியது கன்று.
எந்த பதிலையும் சொல்லாமல் பசுக்கள் அமைதியாக இருந்தன.
‘என்ன அமைதியாக இருக்கிறீர்கள்? ஏதாவது பதில் சொல்லுங்கள்', என்று கேட்டது கன்று. அப்போதும் அங்கு அமைதி நிலவியது. அப்போது ஏதோ துர்நாற்றம் வீசியது.
‘ஏதோ துர் நாற்றம் வீசுகிறதே!' என்று மூக்கை பிடித்துக் கொண்டது கன்று.
அங்கிருந்த பசுக்கள் கன்றைப்பார்த்து சிரித்தன.
‘நாற்றம் உன் உடம்பிலிருந்து தான் வீசுகிறது. பன்றியுடன் சகதியில் சண்டையிட்டதால் உன் உடலில் ஒட்டியிருக்கும் சகதியிலிருந்து துர் நாற்றம் வீசுகிறது. சண்டையிடும் போதும், பிறகு ‘வெற்றி. வெற்றி, .வெற்றி', என்று முழங்கியபோதும் நாற்றத்தை உன்னால் உணர முடியவில்லை. இப்படி நடக்கும் என்று தெரிந்ததால்தான் நாங்கள் அமைதியாக இருந்தோம்', என்று சொல்லிய பசுக்கள் சற்று விலகி நின்றன.
‘நீங்கள் என்னை வெறுத்தாலும் பரவாயில்லை! உங்களின் சார்பாகத்தான் பன்றியுடன் சண்டையிட்டேன். பன்றியை வென்றேன். பன்றியின் கர்வத்தை அடக்கினேன்', என்று பெருமையோடு சொன்னது கன்று.
பசுக்கள் மீண்டும் சிரித்தன.
‘நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை போலிருக்கிறது. என்னுடன் வாருங்கள். தோற்றுப்போன பன்றியிடம் உங்களை அழைத்துச் செல்கிறேன். தனது தோல்வியை அது உங்களிடம் சொல்லும்', என்றவாறு பன்றி இருக்கும் இடத்திற்கு பசுக்களை அழைத்துச்சென்றது கன்று.
சேறும் சகதியுமாய் காட்சியளித்த இடத்தில் சோகமாக படுத்திருந்தது பன்றி.
‘பன்றியே! சண்டையில் நீ தோற்றுப்போனது உண்மைதானே? அதை இவர்களிடம் சொல்', என்றது கன்று.
‘என்னது சண்டையா? நான் தோற்றேனா? யார் சொன்னது? உன்னுடன் சேர்ந்து சகதியில் புரண்டது எவ்வளவு அருமையாக இருந்தது தெரியுமா', என்றது பன்றி!

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...