Skip to main content

ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா!

ஒரு பசு மாடுகள் கூட்டம். தினமும் மேய்ச்சலை முடித்துவிட்டு அமைதியாக வீட்டுக்கு திரும்பும். வழியில் ஒரு பாலம். அதன் அடியில் எந்த நேரமும் பன்றி ஒன்று சேற்றில் புரண்டு கொண்டிருக்கும். பசுக்களைப் பார்த்து அது கேளிசெய்யும். ஆனால், பசுக்கள் ஒரு முறைகூட பன்றிக்கு பதில் கூறியதே இல்லை.
பசுக்கூட்டத்தில் ஒரு கன்று இருந்தது. இளம் வயதல்லவா! பன்றியின் பேச்சு அதற்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அதற்கு தக்க பாடம் புகட்ட நினைத்தது. அதற்கான தருணத்திற்காக காத்திருந்தது.
ஒரு நாள் மாலை பசுக்கள் கூட்டமாக வீடு திரும்பிக்கொண்டிருந்தன. வழக்கம் போல் பசுக்கூட்டத்தைப் பார்த்து கேளி செய்தது பன்றி.
“தைரியமிருந்தால் ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா! என்னை ஜெயிச்சிட்டு பிறகு போங்கடா', என்று முழங்கியது பன்றி.
கன்றுக்கு கோபம் வந்தது. பசுக்கள் எவ்வளவு தடுத்தும் கேளாமல் சட்டென்று பன்றியின் மேல் பாய்ந்தது. அரை மணி நேர கடும் சண்டை. பன்றி சோர்ந்துபோனது. கன்று வென்றது. ஆனால், கன்று சண்டையிடுவதை பற்றி கவலைப்படாமல் பசுக்கள் வீடு திரும்பின.
கன்றுக்கு மகிழ்ச்சி. பன்றியை வென்றுவிட்டதல்லவா! வீரத்துடன் தன் கூட்டத்தை நோக்கி ஓடியது.
‘நண்பர்களே! பன்றி இனி நம் வம்புக்கு வராது. அதன் கொட்டத்தை அடக்கிவிட்டேன்', என்று பெருமையோடு சொல்லியது கன்று.
எந்த பதிலையும் சொல்லாமல் பசுக்கள் அமைதியாக இருந்தன.
‘என்ன அமைதியாக இருக்கிறீர்கள்? ஏதாவது பதில் சொல்லுங்கள்', என்று கேட்டது கன்று. அப்போதும் அங்கு அமைதி நிலவியது. அப்போது ஏதோ துர்நாற்றம் வீசியது.
‘ஏதோ துர் நாற்றம் வீசுகிறதே!' என்று மூக்கை பிடித்துக் கொண்டது கன்று.
அங்கிருந்த பசுக்கள் கன்றைப்பார்த்து சிரித்தன.
‘நாற்றம் உன் உடம்பிலிருந்து தான் வீசுகிறது. பன்றியுடன் சகதியில் சண்டையிட்டதால் உன் உடலில் ஒட்டியிருக்கும் சகதியிலிருந்து துர் நாற்றம் வீசுகிறது. சண்டையிடும் போதும், பிறகு ‘வெற்றி. வெற்றி, .வெற்றி', என்று முழங்கியபோதும் நாற்றத்தை உன்னால் உணர முடியவில்லை. இப்படி நடக்கும் என்று தெரிந்ததால்தான் நாங்கள் அமைதியாக இருந்தோம்', என்று சொல்லிய பசுக்கள் சற்று விலகி நின்றன.
‘நீங்கள் என்னை வெறுத்தாலும் பரவாயில்லை! உங்களின் சார்பாகத்தான் பன்றியுடன் சண்டையிட்டேன். பன்றியை வென்றேன். பன்றியின் கர்வத்தை அடக்கினேன்', என்று பெருமையோடு சொன்னது கன்று.
பசுக்கள் மீண்டும் சிரித்தன.
‘நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை போலிருக்கிறது. என்னுடன் வாருங்கள். தோற்றுப்போன பன்றியிடம் உங்களை அழைத்துச் செல்கிறேன். தனது தோல்வியை அது உங்களிடம் சொல்லும்', என்றவாறு பன்றி இருக்கும் இடத்திற்கு பசுக்களை அழைத்துச்சென்றது கன்று.
சேறும் சகதியுமாய் காட்சியளித்த இடத்தில் சோகமாக படுத்திருந்தது பன்றி.
‘பன்றியே! சண்டையில் நீ தோற்றுப்போனது உண்மைதானே? அதை இவர்களிடம் சொல்', என்றது கன்று.
‘என்னது சண்டையா? நான் தோற்றேனா? யார் சொன்னது? உன்னுடன் சேர்ந்து சகதியில் புரண்டது எவ்வளவு அருமையாக இருந்தது தெரியுமா', என்றது பன்றி!

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...

Bajji

Conversation opened. 1 read message.        “Bajji” (Tamil) மாலை நாலு மணி வாக்கில் ஏதேனும் ஓர் ஓட்டலில் காபி குடிக்கப் போனால், முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி இருக்கா?’ – இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல ஒரு திருப்தி! மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு! அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும் என் நாக்கு ’ஏர் இந்தியா’ ஸ்டைல் மரியாதை செய்யும்! அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!). இதோடு நல்ல கும்மோணம் டிகிரி காபியும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் – கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் – ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும் பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல! பஜ்ஜி கவனத்தில் தலையாட்டிவிட்டு, பின்னர் வ...