Skip to main content

ஒரு நங்கையின் எண்ணங்கள்

ஒரு  நங்கையின்  எண்ணங்கள்

ஆண் மகனே
நீ அறிவாயா.....????
எங்களின் மூன்று நாள் உதிரம் உதிரும்
உயிர்ப்போகும் வலியை.....???
ஆண் மகனே நீ அறிவாயா
நடந்து போகும் பாதையில்
எத்தனை கண்கள் என் அங்கங்களை
படம் எடுக்கும் காட்சிகளை.....????
ஆண்மகனே
நீ அறிவாயா.....????
ஒரு ஆணிடம் நட்பாக பேசினால்
இந்த சமூகம் கொடுக்கும்
கேவலமான பட்டங்களை.....????
ஆண் மகனே நீ அறிவாயா
பேருந்தின் நெரிசலில்
என் உடலை தீண்டும்
காமூகர்களின் லீலைகளை
ஆண் மகனே நீ அறிவாயா...???
கட்டியவன் இறந்துவிட்டால்
கண்டவனெல்லாம்
வப்பாட்டியாய் வைத்துக்கொள்ள
வம்பிழுக்கும் அவலங்களை
அறிந்திடுவாயா ஆண்மகனே
நீ அறிந்திடுவாயா....????
என் போன்ற பெண்களைவிடவா
நீ வலிகளையும் வேதனையும்
அனுபவித்திருப்பாய்....?????
பெண்ணை விட ஆணே உன்
வேதனைகள் குறைவு
குறைவான வேதனைகளுக்கே
குடிகாரானாக அலைகின்றாய்.....!!!!!
எங்களைப்போன்ற வேதனைகளை
நீ பட்டுவிட்டால்
உலகை வெறுத்து ஒரேடியாகப்போய்விடுவாய்
விட்டுத்தள்ளடா ஆண்மகனே
குடி குடியை மட்டுமல்ல
உன் குலமதையே கெடுத்துகுட்டிசுவராக்கிவிடும்......!!!!!!
‪#‎படித்தவுடன்_பகிர்ந்தது‬


Eniyan Eniyan/FB

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem