Skip to main content

அவர் இறந்து விட்டார்

 


அவர் இறந்து விட்டார்
அடக்கம் செய்யணும்
சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!!
.
மெல்ல எட்டிப் பார்த்தேன்
மூச்சு இல்லை – ஆனால்
இப்போதுதான் இறந்திருந்தார்
என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!
.
இருபது வருடங்கள்
முன்னாடி – அவர் மனைவி
இறந்த பிறகு – சாப்பிட்டாயா..!!
என்று யாரும் கேட்காத
நேரத்தில் – அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை...!!
.
பொண்டாட்டி போனதுமே
போய்த் தொலைய வேண்டியதுதானே – என்று
காதுபட மருமகள் பேசியபோது
அவர் இறந்திருந்தார் அப்போதும்
யாருமே கவனிக்க வில்லை...!!
.
தாய்க்குப் பின் தாரம்
தாரத்துக்குப் பின் ..
வீட்டின் ஓரம் ...!!!
என்று வாழ்ந்த போது – அவர்
இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை ..!!!
.
காசு இங்கே
மரத்திலேயா காய்க்குது - என்று
மகன் அமிலவார்த்தையை
வீசிய போது..!!!
அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை...!!
.
என்னங்க...!!!
ரொம்ப தூரத்திலே இருக்குற
முதியோர் இல்லத்திலே விட்டு
தலை முழுகிட்டு வந்திடுங்க...!!!
என்று காதிலே விழுந்த போதும்
அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை...!!!
.

உனக்கென்னப்பா...!!!
பொண்டாட்டி தொல்லை இல்லை
என்று வாழ்த்துவது போல
கிண்டலடிக்கப் பட்ட போது
அவர் இறந்திருந்தார்..!!!
அப்போதும் யாருமே கவனிக்க வில்லை .
.
இப்போதுதான்
இறந்தாராம் என்கிறார்கள்..!!!
எப்படி நான் நம்புவது..???
நீங்கள் செல்லும் வழியில்
இப்படி யாராவது
இறந்து கொண்டிருப்பார்கள்...
ஒரு வினாடியாவது நின்று
பேசி விட்டுச் செல்லுங்கள்..!!!
.
இல்லையேல்...!!!!
.
உங்கள் அருகிலேயே
இறந்து கொண்டிருப்பார்கள்
புரிந்து கொள்ளுங்கள் ..
.
வாழ்க்கை என்பது
வாழ்வது மட்டுமல்ல..!!!
வாழ வைப்பதும்தான் ..!!!!

 

 மா.பொற்செல்வி பட்டிமன்ற பேச்சாளர் to நம்ம கடலூர் (Namma Cuddalore )/10/10/20

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...