Skip to main content

ஏதோ ஓர் பெண் கிடைத்தாலே போதும்



அனுபவம் வாய்ந்த ஒரு குருவிடம் சிஷ்யன் " காதலுக்கும் கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் குருவே!" என்று கேட்டான்.
குரு சொன்னார் " கண்ணா நம் ஆசிரமத்துக்கு பின்னால் உள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்று ஒரு நல்ல கரும்பை எடுத்து வா! கடைசி வரை சென்று தோட்டத்திலேயே நல்ல கரும்பை நீ எடுத்து வரவேண்டும், ஒரே ஒரு நிபந்தனை நீ முன்னே தான் செல்லவேண்டும் திரும்ப வரக்கூடாது. நல்ல ஒரு கரும்பு நீ பறித்த உடன் அதை எடுத்துக் கொண்டு அப்படியே திரும்பி வா. திரும்ப வரும்போது எதையும் தொடக்கூடாது!"
சரி குருவே என்று சொல்லிவிட்டு சிஷ்யன் நல்ல ஒரு கரும்பை எடுத்து வரப் புறப்பட்டான். தோட்டத்தில் நுழைந்தவுடன் ஒரு நல்ல கரும்பு விளைந்து இருப்பதை பார்த்தான். ஆனால் மனதில் இன்னும் கொஞ்சம் முன்னே போகலாம் இதைவிட நல்ல கரும்பு கிடைக்கிறதா என்று பார்ப்போம் என்று முன்னேறினான்.
அவன் அடுத்தடுத்து பார்த்த கரும்புகள் ஒன்றைவிட ஒன்று நன்றாக இருக்கவே அடுத்தது அடுத்தது என்று கடைசி விளிம்புக்கு வந்துவிட்டான். வெளியே வந்தவன் திரும்ப உள்ளே நுழைய முடியாது , குருவின் நிபந்தனை ஆயிற்றே, வெறும் கையுடன் ஆசிரமம் நோக்கி வந்தான். மனதில் ஆனால் பார்த்த முதல் கரும்பினை கொண்டு வந்திருக்கலாமே என்று நினைத்து வருத்தம் அடைந்தான்.
வெறும் கையுடன் வந்த சிஷ்யனை பார்த்து குரு " கண்ணா நீ மீண்டும் தோட்டத்திற்கு செல்! அதே நிபந்தனை, ஒரு கரும்பு கொண்டு வா பார்க்கலாம்!" என்றார் குரு.
இந்த முறை கரும்பு தோட்டத்திற்கு சென்ற சிஷ்யன் பார்த்த முதல் கரும்பு ஒன்றினை பறித்துக்கொண்டு வந்துவிட்டான். அந்த கரும்பு சுமாராக தானிருந்தது. ஆனால் சிஷ்யனுக்கு இதைவிட்டால் அடுத்து எப்படி இருக்குமோ என்ற எண்ணத்தில் கிடைத்த முதல் ஒன்று ஓரளவுக்கு நன்றாக இருந்தால் போதும் என்று ஒரு கரும்புடன் வந்துவிட்டான்!
நீ முதலில் சென்றாயே அதுதான் காதல்! ஒன்றை விட ஒன்று நன்றாக தெரியும். அடுத்து அடுத்து என்று தேடிக் கொண்டே இருப்போம்! அடுத்த முறை நீ எடுத்து வந்த கரும்பு தான் கல்யாணம்! எதற்கு வம்பு, இதைவிட்டால் அடுத்தது இதைவிட மோசமாக இருந்தால் என்ன செய்வது. திரும்ப வர முடியாது காலத்தில்! கிடைத்த ஒன்றை விரும்பிஎடுத்துக் கொள்வோம். இது தான் கல்யாணம்!
இது வயது வித்தியாசம் கடந்து எல்லா ஆண்களுக்கும் இந்த கல்யாண சைக்காலஜி ஒர்க் அவுட் ஆகும்!
சுவாரசியமான ட்ரீவ்யா செய்தி : என்னைக் நீங்கள் காதலுக்கும் கல்யாணத்துக்கும் வித்தியாசம் கேட்டீர்கள் என்றால் " நீங்களும் உங்கள் பார்ட்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்து குளித்தால் அதுதான் காதல்! நீங்களும் உங்கள் பார்ட்னர் இருவரும் உங்கள் குழந்தையை ஒன்றாக சேர்ந்து குளிப்பாட்டினால் அதுதான் கல்யாணம்!"

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை.

நீங்கள் இரசித்த நகைச்சுவை ஒன்றைப் பகிர முடியுமா? (கதையாக /அனுபவமாக) உண்மை காதல் ( I LOVE YOU ) - நகைச்சுவை கதை. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை...

Thamizh Poem