Skip to main content

Semai Joke

இது எப்படி இருக்கு ?
-------------------------------------
சம்பா பாட்டி என்கின்ற சம்பகலட்சுமி பாட்டியை கண்டால் சீனுவின் நண்பர்கள் அனைவருக்குமே ஒரு வித பயம் தான்.பாட்டி இத்தனைக்கும் ரொம்ப நல்லவள். ஆசையோடு கேட்கின்ற பலகாரங்களையும் பண்ணிகொடுப்பவர் தான். ஒருமாத காலமாய் கச்சபேஸ்வரன் தாத்தா பாபநாசத்தில் இருக்கிறார்.ஊரில் இருந்த ஓரிரண்டு மஞ்சக்காணியை எப்படியும் விற்றுவிட்டு வருவதாகத்தான் யோசனை. காலையில் சாதம் வெடிப்பதற்கு எடுத்த அந்த உள்பாத்திரம் குக்கருக்குள் மாட்டிக்கொண்டுவிட்டு எடுக்கவே முடியவில்லை. மூடியை திறக்கவும் முடியவில்லை எடுக்கவும் முடியவில்லை.அவள் சக்திக்கு ஏதேதோ கிடுக்கியை வைத்து, தோசை திருப்பியை வைத்து தட்டி பார்த்தாள், வெளியே வரும் சுவடே தெரியவில்லை.
டேய் சீனு இதை எடுத்து கொடுன்னு சொன்னவுடன் ரெண்டு நிமிஷம் பார்த்துவிட்டு , இதெல்லாம் முடியாது பாட்டி, போய் பாலாஜி ஏஜென்சில கொடுத்து பாருன்னு டி வி யில் மூழ்கி விட்டான். சம்பா பாட்டி விட மாட்டாள்.
ஏண்டா நீ மெக்கானிக்கல் என்ஜினியரிங் தானே படிச்ச? ஏன் வர்ற மாட்டேங்குது ? எங்க தட்டணும்?. சூடு பண்ணினா இளகிக்குமான்னு யோசிக்க வேண்டாமா? அந்த மேல் ஸ்க்ரூவை கழட்டினா வருமா? அதன் நெளிவு சுளிவு, கீழ் பாத்திரத்துக்கும் மேல் பாத்திரத்துக்கு இடைவெளி எவ்வளவு, எல்லாமே கணக்கு தானே, அனலைஸ் பண்ணவேண்டாமா இது மெக்கானிக்கல் இல்லையா?
அது வேற இது வேற பாட்டி , உனக்கு புரியாது என்று வாயடைத்து விடுவான்.
உங்க தாத்தா இருந்தா ஒரு நிமிஷத்துல எடுத்து கொடுத்துடுவார், அவர் ஊர்ல உட்கார்ந்துண்டுருக்கார். என்னமோ போ.
இன்னொரு நாள் இப்படி தான் சீனு தன் நண்பர்களுடன் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தபோது கரெண்ட் போய் விட்டது. அக்கம் பக்கத்தில் எல்லோர் வீட்டிலும் கரெண்ட் இருக்கிறது.. கீழே போய் நம்ம வீட்டுல ஃப்யூஸ் போயிருக்கா பார்றான்னு சொன்ன நேரம் பக்கத்து வீட்டு வாசு வந்தான், அவன் நேரம் சரியில்லை. டேய் வாசு , கீழே போயி இந்த ஃப்யூசை போட்டுகொடுறா..அடிக்கடி போயிடறது..
பாட்டி நான் இதெல்லாம் போட்டதில்லை பாட்டி.
என்னடா , உங்க அம்மா அஞ்சு லட்சத்தை கொடுத்து எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங் சேர்த்துருக்கேன்னு சொன்னா, இதெல்லாம் உனக்கு அங்கே சொல்லித்தரதில்லயா? ரெண்டு வயரை முடுக்கி மாட்டறதுக்கு என்னடா பயம்?
அது இல்லீங்க பாட்டின்னு பதில் சொல்ல தெரியாம இழுத்தான்.
என் பேரன் சீனுவை போன மாசம் ஒரு குண்டு பல்பு மாத்த சொன்னேன். ரப்பர் செருப்பை கொண்டா, மர ஸ்டூலை கொண்டான்னு எத்தனை ஆகாத்தியம், என்னைத்தான் வேலை ஏவினான். நானே போட்டுருவேன், இந்த வயசுல ஸ்டூல்ல ஏறி விழுந்துட்டா கஷ்டம்.
இந்த கம்ப்யூட்டர் ஒரு வாரமா வேலை செய்யலை, இதை சித்த பாருடான்னு உங்க தோஸ்த் வருவானே ஐ ஐ டி , ஸ்ரீராம்ட்ட சொன்னேன். எல்லாத்தையும் பார்த்துட்டு இது ஹார்டுவேர் பிராப்ளம், நான் சாஃப்ட்வெர் தான் படிக்குறேங்கறான். கம்ப்யூட்டர்னா ரெண்டும் கிடையாதோ? பாட்டி கேள்விகளுக்கு பதில் சொல்ல பயப்பட்டே சீனுவின் நண்பர்கள் வாசலோடு வந்து ஓடிப்போய்விடுகிறார்கள்.. கோபி ஒருத்தன்தான் வீட்டுக்குள் தயக்கமில்லாமல் வருகிறான், காரணம் அவன்
பி காம் கடைசி வருஷம் படிக்கிறான். அவனுக்கும் சோதனை வேறு ரூபத்தில் வந்தது.
ஏண்டா கோபி நாலரை சதவிகிதம் வட்டி ஆறுமாசத்துக்கு போட்டா நானூத்தி இருபது ரூபாய் தானே வரணும், பின்ன ஏன் மாமா பென்ஷன் பாஸ்புக்குல இருநூத்தி நாப்பது ருபாய் வரவு வச்சுருக்கான்னு கேட்டது முதல் கோபியும் ஜூட்..
இவாள்ளாம் என்ன படிக்கறாளோ, லட்சக்கணக்குல செலவு மட்டும் ஆறது.. எங்காத்து மாமா வெறும் எஸ் எஸ் எல் சி தான். குக்கர் ரிப்பர் ஆகட்டும், தண்ணி மோட்டார் ஏர் லாக் ஆகட்டும், எலெட்ரிக் வேலையாகட்டும் அத்தனையும் அவரே செஞ்சுடுவார். காலாணா செலவு கிடையாது..அவர் ரிட்டையர் ஆகறச்சே அவருக்கு ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கொடுத்தா இவாளுக்கெல்லாம் முதல் மாசமே முப்பதாயிரம் ரூபாய் சம்பளம்னு பேப்பர்ல போடறான்.
என்ன படிப்போ? ஒண்ணும் புரியலப்பா ஈஸ்வரா !!!
Courtesy: what's up share

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...

Bajji

Conversation opened. 1 read message.        “Bajji” (Tamil) மாலை நாலு மணி வாக்கில் ஏதேனும் ஓர் ஓட்டலில் காபி குடிக்கப் போனால், முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி இருக்கா?’ – இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல ஒரு திருப்தி! மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு! அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும் என் நாக்கு ’ஏர் இந்தியா’ ஸ்டைல் மரியாதை செய்யும்! அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!). இதோடு நல்ல கும்மோணம் டிகிரி காபியும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் – கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் – ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும் பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல! பஜ்ஜி கவனத்தில் தலையாட்டிவிட்டு, பின்னர் வ...