Skip to main content

Posts

எண்களை தமிழில் சொல்ல தெரியுமா?

  எண்களை தமிழில் சொல்ல தெரியுமா ?   க உ ங ச ரு சா எ அ கூ 0   1 2 3 4 5 6 7 8 9 0 ' க ' டுகு ' உ ' ளுந்து ' ங் ' னைச்சு ' ச ' மைச்சி ' ரு ' சிச்சு    ' சா ' ப்பிட்டேன்  ' எ ' ன ' அ ' வன் ' கூ ' றினான் ' ஓ '     என்றேன் .

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...

அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?

யோசிக்க வைக்ககூடிய ஒரு சிறுவரின் கதை. படியுங்கள் பகிருங்கள். மிஸ் பன்னாம படியுங்கள். மகன் : "அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?" தந்தை : "கண்டிப்பா.. என்ன கேளு..?" மகன் : "1 மணி நேரத்திற்கு எவளோ சம்பாரிப்பிங்க ?" தந்தை : "அது உனக்கு தேவை இல்லாதே விஷயம் ... நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?" மகன் : "சும்மா தெரிஞ்சிக்கத்தான்... சொல்லுப்பா ." தந்தை : "உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் ... மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன் சராசரியா ..." மகன் : "ஓ !!! (தலைகுனிந்தவாறே) .. அப்பா நா அதுல 50 ருபாய் எடுத்துக்கவா?" தந்தைக்கு கோபம் வந்தது ... தந்தை : "நீ இவளோ பணம் கேக்குறது ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத்தானே ?? ஒழுங்கா போய் படுத்து தூங்கு ... நா இங்க உங்களுக்காக நாய்போல உழைக்குறேன்..." அந்த சின்னப்பையன் அமைதியா அவன் படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டான் .. அவன் தந்தை மகனின் கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம் அடைந்திருந்தார் ..1 மணிநேரம் சாந்தம் அடைந்து யோசித்தார் மகன் ஏன் இப்படி கேள்வி கேட்டானென்று .. ஒருவே...

தேவை மிகச் சரியான விழிப்புணர்

தேவை மிகச் சரியான விழிப்புணர்வே 🤔 🐃 ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான். 🐂 ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து, “எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது. 🐮 மாடு சொன்னதைக் கவனமாக கேட்ட வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்கு புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றான். 🌅 பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது. 🛣 இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண...

Aryabhatta & Maths

A frustrated student asked his Maths teacher... 😡 😡 😡 If Zero was invented by Aryabhatt and he was born in the Kalayuga... Then... In the past in Satayuga, who counted 100 Kavravas and Ravana's 10 heads and How? 😳 😳 🙄 🙄 🤔 🤔 🤔 🤔 Teacher resigned and went back to Vedic education but is still not able to find the answer... Joke apart but the point needs to noted... P.s: Got the above msg as joke. But any reply for that? An expert's answer: Let me start with just 1 reference from Vedas and 1 from Puranas (to keep this answer short - we will not have enough space if we want to document all such references). 1. Vedic Reference (Yajur veda): The Rishi Medhātithi, after preparing bricks for a Vedic ritual, prays to the Lord of fire, Agni. Imā me Agna istakā dhenava Santvekā ća desa ća satam ća Sahasram ćāyutam ća niyutam ća Prayutam ćārbudam ća nyarbudam ća Samudrasća madhyam ćāntasća Parārdhasćaita me agna ishtakā Dhenavasantvamutrāmushmimlloke . (The...

A to Z

    *A - Appreciation* மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள் . *B - Behaviour* புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம்  இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள் . *C - Compromise* அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள் . மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள் . *D - Depression* மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள் . *E - Ego* மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள் . *F - Forgive* கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும் , எதிர்த்  தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள் . *G - Genuineness* எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள் . *H - Honesty* தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள் . *I - Inferiority Complex* எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள் . நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு  மனப்பான்மையை விடுங்கள் . *J - Jealousy* பொறாமை வேண்டவே வேண்டாம் . அது கொண்டவனையே கொ...

Short Story Thamizh

பிரபல கம்பெனி ஒன்றின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது . விமான நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே விமான நிலையம் போகுமாறு டிரைவரிடம் சொன்னார் ! இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது , இவர்களுக்கு முன்னால் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிக்காமல் நிறுத்தினார் ! அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான் ! இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார் ! அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை . “ ஏன் அவனை சும்மா விட்டீங்க ? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான் ..?” என்று அதிகாரி டாக்சி டி...